1 וַיִּסַּ֤ע –மற்றும்–புறப்பட்டான் יִשְׂרָאֵל֙ இஸ்ரவேல் וְכָל־ –மற்றும்–எல்லா– אֲשֶׁר־ அஷெர்– ל֔וֹ –க்கு–அவன் וַיָּבֹ֖א –மற்றும்–வந்தான் בְּאֵ֣רָה שָּׁ֑בַע –இல்–பெயெர்–ஷெபா וַיִּזְבַּ֣ח –மற்றும்–பலியிட்டான் זְבָחִ֔ים பலிகள் לֵאלֹהֵ֖י –க்கு–தேவனுக்கு אָבִ֥יו தகப்பன் יִצְחָֽק׃ ஈசாக்கு
இஸ்ரவேல் தனக்கு உண்டான எல்லாவற்றையும் சேர்த்துக்கொண்டு புறப்பட்டுப் பெயெர்செபாவுக்குப் போய், தன் தகப்பனாகிய ஈசாக்குடைய தேவனுக்குப் பலியிட்டான்.
2 וַיֹּ֨אמֶר –மற்றும்–சொன்னார் אֱלֹהִ֤ים ׀ தேவன் לְיִשְׂרָאֵל֙ –க்கு–இஸ்ரவேல் בְּמַרְאֹ֣ת –இல்–தரிசனங்கள் הַלַּ֔יְלָה –அந்த–இரவு וַיֹּ֖אמֶר –மற்றும்–சொன்னார் יַעֲקֹ֣ב ׀ யாக்கோபு יַעֲקֹ֑ב யாக்கோபு וַיֹּ֖אמֶר –மற்றும்–சொன்னான் הִנֵּֽנִי׃ இதோ–நான்
அன்று இரவிலே தேவன் இஸ்ரவேலுக்குக் காட்சியளித்து: “யாக்கோபே, யாக்கோபே” என்று கூப்பிட்டார்; அவன் இதோ, “அடியேன்” என்றான்.
3 וַיֹּ֕אמֶר –மற்றும்–சொன்னார் אָנֹכִ֥י நான் הָאֵ֖ל –அந்த–தேவன் אֱלֹהֵ֣י தேவன் אָבִ֑יךָ உன்–தகப்பன் אַל־ அல்– תִּירָא֙ பயப்படாதே מֵרְדָ֣ה –இருந்து–இறங்கு מִצְרַ֔יְמָה எகிப்துக்கு כִּֽי־ ஏனெனில்– לְג֥וֹי –க்கு–ஜாதி גָּד֖וֹל பெரிய אֲשִֽׂימְךָ֥ உன்னை–வைப்பேன் שָֽׁם׃ அங்கே
அப்பொழுது அவர்: “நான் தேவன், நான் உன் தகப்பனுடைய தேவன்; நீ எகிப்துதேசத்திற்குப்போகப் பயப்படவேண்டாம்; அங்கே உன்னைப் பெரிய தேசமாக்குவேன்.
4 אָנֹכִ֗י நான் אֵרֵ֤ד இறங்குவேன் עִמְּךָ֙ உன்னுடன் מִצְרַ֔יְמָה எகிப்துக்கு וְאָנֹכִ֖י –மற்றும்–நான் אַֽעַלְךָ֣ உன்னை–ஏற்றுவேன் גַם־ கூட– עָלֹ֑ה ஏறுதல் וְיוֹסֵ֕ף –மற்றும்–யோசேப்பு יָשִׁ֥ית வைப்பான் יָד֖וֹ கை–அவனுடைய עַל־ மேல்– עֵינֶֽיךָ׃ கண்கள்–உன்
நான் உன்னுடனே எகிப்திற்கு வருவேன்; நான் உன்னைத் திரும்பவும் வரச்செய்வேன்; யோசேப்பு தன் கையால் உன் கண்களை மூடுவான்” என்று சொன்னார்.
5 וַיָּ֥קָם –மற்றும்–எழுந்தான் יַעֲקֹ֖ב யாக்கோபு מִבְּאֵ֣ר שָׁ֑בַע –இருந்து–பெயெர்–ஷெபா וַיִּשְׂא֨וּ –மற்றும்–எடுத்துக்கொண்டார்கள் בְנֵֽי־ மகன்கள்– יִשְׂרָאֵ֜ל இஸ்ரவேல் אֶת־ ஏத்– יַעֲקֹ֣ב யாக்கோபு אֲבִיהֶ֗ם தகப்பன்–அவர்களுடைய וְאֶת־ –மற்றும்–ஏத்– טַפָּם֙ குழந்தைகள்–அவர்களுடைய וְאֶת־ –மற்றும்–ஏத்– נְשֵׁיהֶ֔ם மனைவிகள்–அவர்களுடைய בָּעֲגָל֕וֹת –இல்–வண்டிகள் אֲשֶׁר־ அஷெர்– שָׁלַ֥ח அனுப்பினான் פַּרְעֹ֖ה பார்வோன் לָשֵׂ֥את –க்கு–எடுத்துச்செல்ல אֹתֽוֹ׃ அவனை
அதற்குப்பின்பு, யாக்கோபு பெயெர்செபாவிலிருந்து புறப்பட்டான். இஸ்ரவேலின் மகன்கள் தங்களுடைய தகப்பனாகிய யாக்கோபையும், குழந்தைகளையும், மனைவிகளையும் பார்வோன் அனுப்பின வண்டிகளின்மேல் ஏற்றிக்கொண்டு,
6 וַיִּקְח֣וּ –மற்றும்–எடுத்தார்கள் אֶת־ ஏத்– מִקְנֵיהֶ֗ם மந்தைகள்–அவர்களுடைய וְאֶת־ –மற்றும்–ஏத்– רְכוּשָׁם֙ சொத்து–அவர்களுடைய אֲשֶׁ֤ר அஷெர் רָֽכְשׁוּ֙ சம்பாதித்தார்கள் בְּאֶ֣רֶץ –இல்–தேசம் כְּנַ֔עַן கானான் וַיָּבֹ֖אוּ –மற்றும்–வந்தார்கள் מִצְרָ֑יְמָה எகிப்துக்கு יַעֲקֹ֖ב யாக்கோபு וְכָל־ –மற்றும்–எல்லா– זַרְע֥וֹ சந்ததி–அவனுடைய אִתּֽוֹ׃ அவனுடன்
தங்கள் ஆடுமாடுகளையும் தாங்கள் கானான் தேசத்தில் சம்பாதித்த தங்கள் பொருட்களையும் சேர்த்துக்கொண்டு, யாக்கோபும் அவனுடைய சந்ததியினர் அனைவரும் எகிப்திற்குப் போனார்கள்.
7 בָּנָ֞יו மகன்கள்–அவனுடைய וּבְנֵ֤י –மற்றும்–மகன்கள் בָנָיו֙ மகன்கள்–அவனுடைய אִתּ֔וֹ அவனுடன் בְּנֹתָ֛יו மகள்கள்–அவனுடைய וּבְנ֥וֹת –மற்றும்–மகள்கள் בָּנָ֖יו மகன்கள்–அவனுடைய וְכָל־ –மற்றும்–எல்லா– זַרְע֑וֹ சந்ததி–அவனுடைய הֵבִ֥יא கொண்டுவந்தான் אִתּ֖וֹ அவனுடன் מִצְרָֽיְמָה׃ எகிப்துக்கு ס ச
அவன் தன் மகன்களையும் தன் மகன்களின் மகன்களையும் தன் மகள்களையும் தன் மகன்களின் மகள்களையும் தன் சந்ததியார் அனைவரையும் எகிப்திற்குத் தன்னுடன் அழைத்துக்கொண்டுபோனான்.
8 וְאֵ֨לֶּה –மற்றும்–இவைகள் שְׁמ֧וֹת பெயர்கள் בְּנֵֽי־ மகன்கள்– יִשְׂרָאֵ֛ל இஸ்ரவேல் הַבָּאִ֥ים –அந்த–வந்தவர்கள் מִצְרַ֖יְמָה எகிப்துக்கு יַעֲקֹ֣ב யாக்கோபு וּבָנָ֑יו –மற்றும்–மகன்கள்–அவனுடைய בְּכֹ֥ר மூத்தவன் יַעֲקֹ֖ב யாக்கோபு רְאוּבֵֽן׃ ரூபன்
எகிப்திற்கு வந்த இஸ்ரவேலரின் பெயர்களாவன: யாக்கோபும் அவனுடைய மகன்களும்; யாக்கோபுடைய மூத்தமகனான ரூபன்.
9 וּבְנֵ֖י –மற்றும்–மகன்கள் רְאוּבֵ֑ן ரூபன் חֲנ֥וֹךְ ஆனோக்கு וּפַלּ֖וּא –மற்றும்–பல்லூ וְחֶצְר֥וֹן –மற்றும்–எஸ்ரோன் וְכַרְמִֽי׃ –மற்றும்–கர்மீ
ரூபனுடைய மகன்கள் ஆனோக்கு, பல்லூ, எஸ்ரோன், கர்மீ என்பவர்கள்.
10 וּבְנֵ֣י –மற்றும்–மகன்கள் שִׁמְע֗וֹן சிமியோன் יְמוּאֵ֧ל யெமூவேல் וְיָמִ֛ין –மற்றும்–யாமீன் וְאֹ֖הַד –மற்றும்–ஓகாத் וְיָכִ֣ין –மற்றும்–யாகீன் וְצֹ֑חַר –மற்றும்–சோகர் וְשָׁא֖וּל –மற்றும்–சவூல் בֶּן־ மகன்– הַֽכְּנַעֲנִֽית׃ –அந்த–கானானிய–பெண்
சிமியோனுடைய மகன்கள் எமுவேல், யாமின், ஓகாத், யாகீன், சொகார், கானானிய பெண்ணின் மகனாகிய சவுல் என்பவர்கள்.
11 וּבְנֵ֖י –மற்றும்–மகன்கள் לֵוִ֑י லேவி גֵּרְשׁ֕וֹן கெர்சோன் קְהָ֖ת கோகாத் וּמְרָרִֽי׃ –மற்றும்–மெராரி
லேவியினுடைய மகன்கள் கெர்சோன், கோகாத், மெராரி என்பவர்கள்.
12 וּבְנֵ֣י –மற்றும்–மகன்கள் יְהוּדָ֗ה யூதா עֵ֧ר ஏர் וְאוֹנָ֛ן –மற்றும்–ஓனான் וְשֵׁלָ֖ה –மற்றும்–சேலா וָפֶ֣רֶץ –மற்றும்–பேரேஸ் וָזָ֑רַח –மற்றும்–சேரா וַיָּ֨מָת –மற்றும்–மரித்தான் עֵ֤ר ஏர் וְאוֹנָן֙ –மற்றும்–ஓனான் בְּאֶ֣רֶץ –இல்–தேசம் כְּנַ֔עַן கானான் וַיִּהְי֥וּ –மற்றும்–ஆனார்கள் בְנֵי־ மகன்கள்– פֶ֖רֶץ பேரேஸ் חֶצְר֥וֹן எஸ்ரோன் וְחָמֽוּל׃ –மற்றும்–ஆமூல்
யூதாவினுடைய மகன்கள் ஏர், ஓனான், சேலா, பாரேஸ், சேரா என்பவர்கள்; அவர்களில் ஏரும் ஓனானும் கானான்தேசத்தில் இறந்துபோனார்கள்; பாரேசுடைய மகன்கள் எஸ்ரோன், ஆமூல் என்பவர்கள்.
13 וּבְנֵ֖י –மற்றும்–மகன்கள் יִשָׂשכָ֑ר இசக்கார் תּוֹלָ֥ע தோலா וּפֻוָּ֖ה –மற்றும்–பூவா וְי֥וֹב –மற்றும்–யோபு וְשִׁמְרֽוֹן׃ –மற்றும்–சிம்ரோன்
இசக்காருடைய மகன்கள் தோலா, பூவா, யோபு, சிம்ரோன் என்பவர்கள்.
14 וּבְנֵ֖י –மற்றும்–மகன்கள் זְבוּלֻ֑ן செபுலோன் סֶ֥רֶד சேரேத் וְאֵל֖וֹן –மற்றும்–ஏலோன் וְיַחְלְאֵֽל׃ –மற்றும்–யக்லெயேல்
செபுலோனுடைய மகன்கள் சேரேத், ஏலோன், யக்லேல் என்பவர்கள்.
15 אֵ֣לֶּה ׀ இவைகள் בְּנֵ֣י மகன்கள் לֵאָ֗ה லேயாள் אֲשֶׁ֨ר அஷெர் יָֽלְדָ֤ה பெற்றாள் לְיַעֲקֹב֙ –க்கு–யாக்கோபு בְּפַדַּ֣ן אֲרָ֔ם –இல்–பதான்–அராம் וְאֵ֖ת –மற்றும்–ஏத் דִּינָ֣ה தீனாள் בִתּ֑וֹ மகள்–அவனுடைய כָּל־ எல்லா– נֶ֧פֶשׁ ஆத்துமா בָּנָ֛יו மகன்கள்–அவனுடைய וּבְנוֹתָ֖יו –மற்றும்–மகள்கள்–அவனுடைய שְׁלֹשִׁ֥ים முப்பது וְשָׁלֹֽשׁ׃ –மற்றும்–மூன்று
இவர்கள் லேயாளின் சந்ததியார்; அவள் இவர்களையும் தீனாள் என்னும் ஒரு மகளையும் பதான் அராமிலே யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்; அவனுடைய மகன்களும், மகள்களுமாகிய எல்லோரும் முப்பத்துமூன்றுபேர்.
16 וּבְנֵ֣י –மற்றும்–மகன்கள் גָ֔ד காத் צִפְי֥וֹן சிப்யோன் וְחַגִּ֖י –மற்றும்–ஆகீ שׁוּנִ֣י சூனி וְאֶצְבֹּ֑ן –மற்றும்–எஸ்போன் עֵרִ֥י ஏரீ וַֽאֲרוֹדִ֖י –மற்றும்–அரோதி וְאַרְאֵלִֽי׃ –மற்றும்–அரேலி
காத்துடைய மகன்கள், சிப்பியோன், அகி, சூனி, எஸ்போன், ஏரி, ஆரோதி, அரேலி என்பவர்கள்.
17 וּבְנֵ֣י –மற்றும்–மகன்கள் אָשֵׁ֗ר ஆசேர் יִמְנָ֧ה யிம்னா וְיִשְׁוָ֛ה –மற்றும்–யிஷ்வா וְיִשְׁוִ֥י –மற்றும்–யிஷ்வீ וּבְרִיעָ֖ה –மற்றும்–பெரீயா וְשֶׂ֣רַח –மற்றும்–சேராக் אֲחֹתָ֑ם சகோதரி–அவர்களுடைய וּבְנֵ֣י –மற்றும்–மகன்கள் בְרִיעָ֔ה பெரீயா חֶ֖בֶר ஏபேர் וּמַלְכִּיאֵֽל׃ –மற்றும்–மல்கியேல்
ஆசேருடைய மகன்கள் இம்னா, இஸ்வா, இஸ்வி, பெரீயா என்பவர்கள்; இவர்களுடைய சகோதரி சேராக்கு என்பவள்; பெரீயாவின் மகன்கள் ஏபேர், மல்கியேல் என்பவர்கள்.
18 אֵ֚לֶּה இவைகள் בְּנֵ֣י மகன்கள் זִלְפָּ֔ה சில்பாள் אֲשֶׁר־ அஷெர்– נָתַ֥ן கொடுத்தான் לָבָ֖ן லாபான் לְלֵאָ֣ה –க்கு–லேயாள் בִתּ֑וֹ மகள்–அவனுடைய וַתֵּ֤לֶד –மற்றும்–பெற்றாள் אֶת־ ஏத்– אֵ֙לֶּה֙ இவர்களை לְיַעֲקֹ֔ב –க்கு–யாக்கோபு שֵׁ֥שׁ ஆறு עֶשְׂרֵ֖ה பத்து נָֽפֶשׁ׃ ஆத்துமா
இவர்கள் லாபான் தன் மகளாகிய லேயாளுக்குக் கொடுத்த சில்பாளுடைய பிள்ளைகள்; அவள் இந்தப் பதினாறுபேரையும் யாக்கோபுக்குப் பெற்றெடுத்தாள்.
19 בְּנֵ֤י மகன்கள் רָחֵל֙ ராகேல் אֵ֣שֶׁת மனைவி יַֽעֲקֹ֔ב யாக்கோபு יוֹסֵ֖ף யோசேப்பு וּבִנְיָמִֽן׃ –மற்றும்–பென்யமீன்
யாக்கோபின் மனைவியாகிய ராகேலுடைய மகன்கள் யோசேப்பு, பென்யமீன் என்பவர்கள்.
20 וַיִּוָּלֵ֣ד –மற்றும்–பிறந்தான் לְיוֹסֵף֮ –க்கு–யோசேப்பு בְּאֶ֣רֶץ –இல்–தேசம் מִצְרַיִם֒ எகிப்து אֲשֶׁ֤ר அஷெர் יָֽלְדָה־ பெற்றாள்– לּוֹ֙ –க்கு–அவன் אָֽסְנַ֔ת ஆஸ்நாத் בַּת־ மகள்– פּ֥וֹטִי פֶ֖רַע போத்திபிரா כֹּהֵ֣ן ஆசாரியன் אֹ֑ן ஓன் אֶת־ ஏத்– מְנַשֶּׁ֖ה மனாசே וְאֶת־ –மற்றும்–ஏத்– אֶפְרָֽיִם׃ எப்பிராயீம்
யோசேப்புக்கு எகிப்துதேசத்திலே மனாசேயும் எப்பிராயீமும் பிறந்தார்கள்; அவர்களை ஓன் பட்டணத்து ஆசாரியனாகிய போத்திபிராவின் மகளாகிய ஆஸ்நாத் அவனுக்குப் பெற்றெடுத்தாள்.
21 וּבְנֵ֣י –மற்றும்–மகன்கள் בִנְיָמִ֗ן பென்யமீன் בֶּ֤לַע பேலா וָבֶ֙כֶר֙ –மற்றும்–பெகேர் וְאַשְׁבֵּ֔ל –மற்றும்–அஷ்பேல் גֵּרָ֥א கேரா וְנַעֲמָ֖ן –மற்றும்–நாமான் אֵחִ֣י ஏகீ וָרֹ֑אשׁ –மற்றும்–ரோஷ் מֻפִּ֥ים மூப்பீம் וְחֻפִּ֖ים –மற்றும்–ஊப்பீம் וָאָֽרְדְּ׃ –மற்றும்–ஆர்த்
பென்யமீனுடைய மகன்கள் பேலா, பெகேர், அஸ்பேல், கேரா, நாகமான், ஏகி, ரோஷ், முப்பிம், உப்பீம், ஆர்து என்பவர்கள்.
22 אֵ֚לֶּה இவைகள் בְּנֵ֣י மகன்கள் רָחֵ֔ל ராகேல் אֲשֶׁ֥ר அஷெர் יֻלַּ֖ד பிறந்தான் לְיַעֲקֹ֑ב –க்கு–யாக்கோபு כָּל־ எல்லா– נֶ֖פֶשׁ ஆத்துமா אַרְבָּעָ֥ה பதினான்கு עָשָֽׂר׃ பத்து
ராகேல் யாக்கோபுக்குப் பெற்ற மகன்களாகிய இவர்கள் எல்லோரும் பதினான்குபேர்.
23 וּבְנֵי־ –மற்றும்–மகன்கள்– דָ֖ן தாண் חֻשִֽׁים׃ ஊசீம்
தாணுடைய மகன் உசீம் என்பவன்.
24 וּבְנֵ֖י –மற்றும்–மகன்கள் נַפְתָּלִ֑י நப்தலி יַחְצְאֵ֥ל யக்சேல் וְגוּנִ֖י –மற்றும்–கூனி וְיֵ֥צֶר –மற்றும்–யேசேர் וְשִׁלֵּֽם׃ –மற்றும்–சில்லேம்
நப்தலியின் மகன்கள் யாத்சியேல், கூனி, எத்செர், சில்லேம் என்பவர்கள்.
25 אֵ֚לֶּה இவைகள் בְּנֵ֣י மகன்கள் בִלְהָ֔ה பில்காள் אֲשֶׁר־ அஷெர்– נָתַ֥ן கொடுத்தான் לָבָ֖ן லாபான் לְרָחֵ֣ל –க்கு–ராகேல் בִּתּ֑וֹ மகள்–அவனுடைய וַתֵּ֧לֶד –மற்றும்–பெற்றாள் אֶת־ ஏத்– אֵ֛לֶּה இவர்களை לְיַעֲקֹ֖ב –க்கு–யாக்கோபு כָּל־ எல்லா– נֶ֥פֶשׁ ஆத்துமா שִׁבְעָֽה׃ ஏழு
இவர்கள் லாபான் தன் மகளாகிய ராகேலுக்குக் கொடுத்த பில்காள் யாக்கோபுக்குப் பெற்றவர்கள்; இவர்கள் எல்லோரும் ஏழுபேர்.
26 כָּל־ எல்லா– הַ֠נֶּפֶשׁ –அந்த–ஆத்துமா הַבָּאָ֨ה –அந்த–வந்தவர்கள் לְיַעֲקֹ֤ב –க்கு–யாக்கோபு מִצְרַ֙יְמָה֙ எகிப்துக்கு יֹצְאֵ֣י புறப்பட்டவர்கள் יְרֵכ֔וֹ தொடை–அவனுடைய מִלְּבַ֖ד தவிர נְשֵׁ֣י மனைவிகள் בְנֵי־ மகன்கள்– יַעֲקֹ֑ב யாக்கோபு כָּל־ எல்லா– נֶ֖פֶשׁ ஆத்துமா שִׁשִּׁ֥ים அறுபது וָשֵֽׁשׁ׃ –மற்றும்–ஆறு
யாக்கோபுடைய மகன்களின் மனைவிகளைத் தவிர, அவனுடைய கர்ப்பப்பிறப்பாயிருந்து அவன் மூலமாக எகிப்திற்கு வந்தவர்கள் எல்லோரும் அறுபத்தாறுபேர்.
27 וּבְנֵ֥י –மற்றும்–மகன்கள் יוֹסֵ֛ף யோசேப்பு אֲשֶׁר־ அஷெர்– יֻלַּד־ பிறந்தான்– ל֥וֹ –க்கு–அவன் בְמִצְרַ֖יִם –இல்–எகிப்து נֶ֣פֶשׁ ஆத்துமா שְׁנָ֑יִם இரண்டு כָּל־ எல்லா– הַנֶּ֧פֶשׁ –அந்த–ஆத்துமா לְבֵֽית־ –க்கு–வீடு– יַעֲקֹ֛ב யாக்கோபு הַבָּ֥אָה –அந்த–வந்தவர்கள் מִצְרַ֖יְמָה எகிப்துக்கு שִׁבְעִֽים׃ எழுபது פ ப
யோசேப்புக்கு எகிப்திலே பிறந்த மகன்கள் இரண்டுபேர்; ஆக எகிப்திற்குப் போன யாக்கோபின் குடும்பத்தார் எழுபதுபேர்.
28 וְאֶת־ –மற்றும்–ஏத்– יְהוּדָ֞ה யூதா שָׁלַ֤ח அனுப்பினான் לְפָנָיו֙ –க்கு–முன்னே–அவன் אֶל־ நோக்கி– יוֹסֵ֔ף யோசேப்பு לְהוֹרֹ֥ת –க்கு–வழிகாட்ட לְפָנָ֖יו –க்கு–முன்னே–அவன் גֹּ֑שְׁנָה கோஷேனுக்கு וַיָּבֹ֖אוּ –மற்றும்–வந்தார்கள் אַ֥רְצָה தேசம் גֹּֽשֶׁן׃ கோஷேன்
கோசேன் நாட்டிலே தன்னை யோசேப்பு சந்திக்க வரும்படி சொல்ல, யூதாவைத் தனக்கு முன்னாக அவனிடத்திற்கு யாக்கோபு அனுப்பினான்; அவர்கள் கோசேனிலே சேர்ந்தார்கள்.
29 וַיֶּאְסֹ֤ר –மற்றும்–கட்டினான் יוֹסֵף֙ யோசேப்பு מֶרְכַּבְתּ֔וֹ இரதம்–அவனுடைய וַיַּ֛עַל –மற்றும்–ஏறினான் לִקְרַֽאת־ –க்கு–எதிர்கொள்ள– יִשְׂרָאֵ֥ל இஸ்ரவேல் אָבִ֖יו தகப்பன்–அவனுடைய גֹּ֑שְׁנָה கோஷேனுக்கு וַיֵּרָ֣א –மற்றும்–தோன்றினான் אֵלָ֗יו அவனுக்கு וַיִּפֹּל֙ –மற்றும்–விழுந்தான் עַל־ மேல்– צַוָּארָ֔יו கழுத்து–அவனுடைய וַיֵּ֥בְךְּ –மற்றும்–அழுதான் עַל־ மேல்– צַוָּארָ֖יו கழுத்து–அவனுடைய עֽוֹד׃ இன்னும்
யோசேப்பு தன் இரதத்தை ஆயத்தப்படுத்தி, அதின்மேல் ஏறி, தன் தகப்பனாகிய இஸ்ரவேலைச் சந்திக்கும்படி போய், அவனைக் கண்டு, அவனுடைய கழுத்தைக் கட்டிக்கொண்டு, வெகுநேரம் அவனுடைய கழுத்தை விடாமல் அழுதான்.
30 וַיֹּ֧אמֶר –மற்றும்–சொன்னான் יִשְׂרָאֵ֛ל இஸ்ரவேல் אֶל־ நோக்கி– יוֹסֵ֖ף யோசேப்பு אָמ֣וּתָה இப்பொழுது–சாவேன் הַפָּ֑עַם –அந்த–தடவை אַחֲרֵי֙ பின் רְאוֹתִ֣י பார்த்தேன்–நான் אֶת־ ஏத்– פָּנֶ֔יךָ முகம்–உன் כִּ֥י ஏனெனில் עוֹדְךָ֖ இன்னும்–நீ חָֽי׃ உயிருள்ள
அப்பொழுது இஸ்ரவேல் யோசேப்பைப் பார்த்து: “நீ இன்னும் உயிரோடிருக்கிறாயே, நான் உன் முகத்தைக் கண்டேன், எனக்கு இப்போது மரணம் வந்தாலும் வரட்டும்” என்றான்.
31 וַיֹּ֨אמֶר –மற்றும்–சொன்னான் יוֹסֵ֤ף யோசேப்பு אֶל־ நோக்கி– אֶחָיו֙ சகோதரர்கள்–அவனுடைய וְאֶל־ –மற்றும்–நோக்கி– בֵּ֣ית வீடு אָבִ֔יו தகப்பன்–அவனுடைய אֶעֱלֶ֖ה ஏறுவேன் וְאַגִּ֣ידָה –மற்றும்–அறிவிப்பேன் לְפַרְעֹ֑ה –க்கு–பார்வோன் וְאֹֽמְרָ֣ה –மற்றும்–சொல்வேன் אֵלָ֔יו அவனுக்கு אַחַ֧י சகோதரர்கள்–என் וּבֵית־ –மற்றும்–வீடு– אָבִ֛י தகப்பன்–என் אֲשֶׁ֥ר அஷெர் בְּאֶֽרֶץ־ –இல்–தேசம்– כְּנַ֖עַן கானான் בָּ֥אוּ வந்தார்கள் אֵלָֽי׃ என்னிடம்
பின்பு, யோசேப்பு தன் சகோதரர்களையும் தன் தகப்பனுடைய குடும்பத்தாரையும் நோக்கி: “நான் பார்வோனிடத்திற்குப் போய், கானான்தேசத்திலிருந்து என் சகோதரர்களும் என் தகப்பன் குடும்பத்தாரும் என்னிடத்தில் வந்திருக்கிறார்கள்.
32 וְהָאֲנָשִׁים֙ –மற்றும்––அந்த–மனிதர்கள் רֹ֣עֵי மேய்ப்பர்கள் צֹ֔אן ஆடு כִּֽי־ ஏனெனில்– אַנְשֵׁ֥י மனிதர்கள் מִקְנֶ֖ה மந்தை הָי֑וּ ஆனார்கள் וְצֹאנָ֧ם –மற்றும்–ஆடு–அவர்களுடைய וּבְקָרָ֛ם –மற்றும்–மாடு–அவர்களுடைய וְכָל־ –மற்றும்–எல்லா– אֲשֶׁ֥ר அஷெர் לָהֶ֖ם –க்கு–அவர்கள் הֵבִֽיאוּ׃ கொண்டுவந்தார்கள்
அவர்கள் மேய்ப்பர்கள், ஆடுமாடுகளை மேய்க்கிறது அவர்களுடைய தொழில்; அவர்கள் தங்களுடைய ஆடுமாடுகளையும் தங்களுக்கு உண்டான எல்லாவற்றையும் கொண்டுவந்தார்கள் என்று அவருக்குச் சொல்லுகிறேன்.
33 וְהָיָ֕ה –மற்றும்–இருக்கும் כִּֽי־ ஏனெனில்– יִקְרָ֥א அழைப்பான் לָכֶ֖ם –க்கு–உங்கள் פַּרְעֹ֑ה பார்வோன் וְאָמַ֖ר –மற்றும்–சொல்வான் מַה־ என்ன– מַּעֲשֵׂיכֶֽם׃ தொழில்–உங்களுடைய
பார்வோன் உங்களை அழைத்து, உங்களுடைய தொழில் என்ன என்று கேட்டால்,
34 וַאֲמַרְתֶּ֗ם –மற்றும்–சொல்வீர்கள் אַנְשֵׁ֨י மனிதர்கள் מִקְנֶ֜ה மந்தை הָי֤וּ ஆனார்கள் עֲבָדֶ֙יךָ֙ அடியார்கள்–உன் מִנְּעוּרֵ֣ינוּ –இருந்து–இளமை–எங்களுடைய וְעַד־ –மற்றும்–வரை– עַ֔תָּה இப்பொழுது גַּם־ கூட– אֲנַ֖חְנוּ நாங்கள் גַּם־ கூட– אֲבֹתֵ֑ינוּ முன்னோர்கள்–எங்களுடைய בַּעֲב֗וּר பொருட்டு תֵּשְׁבוּ֙ குடியிருப்பீர்கள் בְּאֶ֣רֶץ –இல்–தேசம் גֹּ֔שֶׁן கோஷேன் כִּֽי־ ஏனெனில்– תוֹעֲבַ֥ת அருவருப்பு מִצְרַ֖יִם எகிப்து כָּל־ எல்லா– רֹ֥עֵה மேய்ப்பன் צֹֽאן׃ ஆடு
நீங்கள், கோசேன் நாட்டிலே குடியிருக்க, அவனை நோக்கி: எங்கள் பிதாக்களைப்போல, உமது அடியாராகிய நாங்களும் எங்கள் சிறுவயதுமுதல் இதுவரைக்கும் மேய்ப்பர்களாக இருக்கிறோம் என்று சொல்லுங்கள்; மேய்ப்பர்கள் எல்லோரும் எகிப்தியருக்கு அருவருப்பாக இருக்கிறார்கள்” என்றான்.