1 וַיְדַבֵּ֧ר –மற்றும்–பேசினான் יְהוָ֛ה யெகோவா אֶל־ –நோக்கி– מֹשֶׁ֥ה மோசேயிடம் וְאֶֽל־ –மற்றும்–நோக்கி– אַהֲרֹ֖ן ஆரோனிடம் לֵאמֹ֥ר –சொல்லி אֲלֵהֶֽם׃ அவர்களிடம்
யெகோவா மோசேயையும் ஆரோனையும் நோக்கி:
2 דַּבְּר֛וּ பேசுங்கள் אֶל־ –நோக்கி– בְּנֵ֥י புத்திரர்களிடம் יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் לֵאמֹ֑ר –சொல்லி זֹ֤את இது הַֽחַיָּה֙ –அந்த–உயிரினம் אֲשֶׁ֣ר –அதை– תֹּאכְל֔וּ சாப்பிடுவீர்கள் מִכָּל־ –இலிருந்து–எல்லா– הַבְּהֵמָ֖ה –அந்த–மிருகத்தின் אֲשֶׁ֥ר –அதை– עַל־ –மேல்– הָאָֽרֶץ׃ –அந்த–பூமியின்
“நீங்கள் இஸ்ரவேல் மக்களிடம் சொல்லவேண்டியது என்னவென்றால், பூமியிலிருக்கிற சகல மிருகங்களிலும் நீங்கள் சாப்பிடத்தக்க உயிரினங்கள் எவைகள் என்றால்:
3 כֹּ֣ל ׀ எல்லா– מַפְרֶ֣סֶת பிளக்குகின்ற פַּרְסָ֗ה குளம்பை וְשֹׁסַ֤עַת –மற்றும்–பிளக்குகின்ற שֶׁ֙סַע֙ பிளவை פְּרָסֹ֔ת குளம்புகளை מַעֲלַ֥ת அசைபோடுகின்ற גֵּרָ֖ה அசையை בַּבְּהֵמָ֑ה –அந்த–மிருகத்தில் אֹתָ֖הּ அதை תֹּאכֵֽלוּ׃ சாப்பிடுவீர்கள்
மிருகங்களில் விரிகுளம்புள்ளதாக இருந்து, குளம்புகள் இரண்டாகப் பிரிந்திருக்கிறதும் அசைபோடுகிற அனைத்தையும் நீங்கள் சாப்பிடலாம்.
4 אַ֤ךְ ஆனால் אֶת־ –ஐ– זֶה֙ இதை לֹ֣א இல்லை תֹֽאכְל֔וּ சாப்பிடாதீர்கள் מִֽמַּעֲלֵי֙ –இலிருந்து–அசைபோடுகின்றவைகளின் הַגֵּרָ֔ה –அந்த–அசையின் וּמִמַּפְרִיסֵ֖י –மற்றும்–இலிருந்து–பிளக்குகின்றவைகளின் הַפַּרְסָ֑ה –அந்த–குளம்பின் אֶֽת־ –ஐ– הַ֠גָּמָל –அந்த–ஒட்டகத்தை כִּֽי־ –ஏனெனில்– מַעֲלֵ֨ה அசைபோடுகின்றது גֵרָ֜ה அசையை ה֗וּא அது וּפַרְסָה֙ –மற்றும்–குளம்பை אֵינֶ֣נּוּ இல்லை–அது מַפְרִ֔יס பிளக்குகின்றது טָמֵ֥א அசுத்தமானது ה֖וּא அது לָכֶֽם׃ உங்களுக்கு
ஆனாலும், அசைபோடுகிறதும் விரிகுளம்புள்ளவைகளில் ஒட்டகமானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லாததால், அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
5 וְאֶת־ –மற்றும்–ஐ– הַשָּׁפָ֗ן –அந்த–குன்றெலியை כִּֽי־ –ஏனெனில்– מַעֲלֵ֤ה அசைபோடுகின்றது גֵרָה֙ அசையை ה֔וּא அது וּפַרְסָ֖ה –மற்றும்–குளம்பை לֹ֣א இல்லை יַפְרִ֑יס பிளக்குகின்றது טָמֵ֥א அசுத்தமானது ה֖וּא அது לָכֶֽם׃ உங்களுக்கு
குழிமுயலானது அசைபோடுகிறதாக இருந்தாலும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
6 וְאֶת־ –மற்றும்–ஐ– הָאַרְנֶ֗בֶת –அந்த–முயலை כִּֽי־ –ஏனெனில்– מַעֲלַ֤ת அசைபோடுகின்றது גֵּרָה֙ அசையை הִ֔וא அது וּפַרְסָ֖ה –மற்றும்–குளம்பை לֹ֣א இல்லை הִפְרִ֑יסָה பிளக்குகின்றது–அதை טְמֵאָ֥ה அசுத்தமானது הִ֖וא அது לָכֶֽם׃ உங்களுக்கு
முயலானது அசைபோடுகிறதாக இருந்தும், அதற்கு விரிகுளம்பில்லை; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
7 וְאֶת־ –மற்றும்–ஐ– הַ֠חֲזִיר –அந்த–பன்றியை כִּֽי־ –ஏனெனில்– מַפְרִ֨יס பிளக்குகின்றது פַּרְסָ֜ה குளம்பை ה֗וּא அது וְשֹׁסַ֥ע –மற்றும்–பிளக்குகின்ற שֶׁ֙סַע֙ பிளவை פַּרְסָ֔ה குளம்பை וְה֖וּא –மற்றும்–அது גֵּרָ֣ה அசையை לֹֽא־ இல்லை– יִגָּ֑ר அசைபோடுகின்றது טָמֵ֥א அசுத்தமானது ה֖וּא அது לָכֶֽם׃ உங்களுக்கு
பன்றியின் குளம்பு விரிகுளம்பும் இரண்டாகப் பிரிந்ததுமாக இருந்தும், அது அசைபோடாது; அது உங்களுக்கு அசுத்தமாக இருக்கும்.
8 מִבְּשָׂרָם֙ அவற்றின்–இறைச்சியிலிருந்து לֹ֣א இல்லை תֹאכֵ֔לוּ சாப்பிடாதீர்கள் וּבְנִבְלָתָ֖ם –மற்றும்–அவற்றின்–சாந்ததில் לֹ֣א இல்லை תִגָּ֑עוּ தொடாதீர்கள் טְמֵאִ֥ים அசுத்தமானவைகள் הֵ֖ם அவைகள் לָכֶֽם׃ உங்களுக்கு
இவைகளின் மாம்சத்தைச் சாப்பிடவும், இவைகளின் உடல்களைத் தொடவும் வேண்டாம்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
9 אֶת־ –ஐ– זֶה֙ இதை תֹּֽאכְל֔וּ சாப்பிடுவீர்கள் מִכֹּ֖ל –இலிருந்து–எல்லாத்திலிருந்து אֲשֶׁ֣ר –அதை– בַּמָּ֑יִם –அந்த–தண்ணீர்களில் כֹּ֣ל எல்லா– אֲשֶׁר־ –அதை– לוֹ֩ அதற்கு סְנַפִּ֨יר சிறகுகள் וְקַשְׂקֶ֜שֶׂת –மற்றும்–சிதல்கள் בַּמַּ֗יִם –அந்த–தண்ணீர்களில் בַּיַּמִּ֛ים –அந்த–கடல்களில் וּבַנְּחָלִ֖ים –மற்றும்–ஆறுகளில் אֹתָ֥ם அவற்றை תֹּאכֵֽלוּ׃ சாப்பிடுவீர்கள்
தண்ணீரிலிருக்கிறவைகளில் நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களிலே சிறகும் செதிளும் உள்ளவைகளையெல்லாம் நீங்கள் சாப்பிடலாம்.
10 וְכֹל֩ –மற்றும்–எல்லா– אֲשֶׁ֨ר –அதை– אֵֽין־ இல்லை– ל֜וֹ அதற்கு סְנַפִּ֣יר சிறகுகள் וְקַשְׂקֶ֗שֶׂת –மற்றும்–சிதல்கள் בַּיַּמִּים֙ –அந்த–கடல்களில் וּבַנְּחָלִ֔ים –மற்றும்–ஆறுகளில் מִכֹּל֙ –இலிருந்து–எல்லா– שֶׁ֣רֶץ நீரில்–நெளியும் הַמַּ֔יִם –அந்த–தண்ணீர்களின் וּמִכֹּ֛ל –மற்றும்–இலிருந்து–எல்லா– נֶ֥פֶשׁ உயிரை הַחַיָּ֖ה –அந்த–உயிருள்ள אֲשֶׁ֣ר –அதை– בַּמָּ֑יִם –அந்த–தண்ணீர்களில் שֶׁ֥קֶץ அருவருப்பானது הֵ֖ם அவைகள் לָכֶֽם׃ உங்களுக்கு
ஆனாலும், கடல்களும் ஆறுகளுமாகிய தண்ணீர்களில் நீந்துகிறதும் வாழ்கிறதுமான பிராணிகளில் சிறகும் செதிளும் இல்லாதவைகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
11 וְשֶׁ֖קֶץ –மற்றும்–அருவருப்பானது יִהְי֣וּ ஆகும் לָכֶ֑ם உங்களுக்கு מִבְּשָׂרָם֙ அவற்றின்–இறைச்சியிலிருந்து לֹ֣א இல்லை תֹאכֵ֔לוּ சாப்பிடாதீர்கள் וְאֶת־ –மற்றும்–ஐ– נִבְלָתָ֖ם அவற்றின்–சாந்ததை תְּשַׁקֵּֽצוּ׃ அருவருப்பாகஎண்ணுவீர்கள்
அவைகள் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவைகளின் மாம்சத்தை சாப்பிடாமலிருந்து, அவைகளின் உடல்களை அருவருப்பீர்களாக.
12 כֹּ֣ל எல்லா– אֲשֶׁ֥ר –அதை– אֵֽין־ இல்லை– ל֛וֹ அதற்கு סְנַפִּ֥יר சிறகுகள் וְקַשְׂקֶ֖שֶׂת –மற்றும்–சிதல்கள் בַּמָּ֑יִם –அந்த–தண்ணீர்களில் שֶׁ֥קֶץ அருவருப்பானது ה֖וּא அது לָכֶֽם׃ உங்களுக்கு
தண்ணீர்களிலே சிறகும் செதிளும் இல்லாத அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
13 וְאֶת־ –மற்றும்–ஐ– אֵ֙לֶּה֙ இவற்றை תְּשַׁקְּצ֣וּ அருவருப்பாகஎண்ணுவீர்கள் מִן־ –இலிருந்து– הָע֔וֹף –அந்த–பறவையின் לֹ֥א இல்லை יֵאָכְל֖וּ சாப்பிடப்படாது שֶׁ֣קֶץ அருவருப்பானது הֵ֑ם அவைகள் אֶת־ –ஐ– הַנֶּ֙שֶׁר֙ –அந்த–கழுகை וְאֶת־ –மற்றும்–ஐ– הַפֶּ֔רֶס –அந்த–எலும்புக்கழுகையை וְאֵ֖ת –மற்றும்–ஐ– הָעָזְנִיָּֽה׃ –அந்த–கழுகுப்பருந்தை
“பறவைகளில் நீங்கள் சாப்பிடாமல் அருவருக்க வேண்டியவைகள் எவைகள் என்றால்: கழுகும், கருடனும், கடலுராஞ்சியும்,
14 וְאֶת־ –மற்றும்–ஐ– הַ֨דָּאָ֔ה –அந்த–பருந்தை וְאֶת־ –மற்றும்–ஐ– הָאַיָּ֖ה –அந்த–பருந்தையை לְמִינָֽהּ׃ அதன்–வகையின்படி
பருந்தும், சகலவித வல்லூறும்,
15 אֵ֥ת –ஐ– כָּל־ எல்லா– עֹרֵ֖ב காகத்தை לְמִינֽוֹ׃ அதன்–வகையின்படி
சகலவித காகங்களும்,
16 וְאֵת֙ –மற்றும்–ஐ– בַּ֣ת மகளை– הַֽיַּעֲנָ֔ה –அந்த–நண்டுப்பக்ஷியின் וְאֶת־ –மற்றும்–ஐ– הַתַּחְמָ֖ס –அந்த–தக்மாசை וְאֶת־ –மற்றும்–ஐ– הַשָּׁ֑חַף –அந்த–கடற்பறவையை וְאֶת־ –மற்றும்–ஐ– הַנֵּ֖ץ –அந்த–பருந்தையை לְמִינֵֽהוּ׃ அதன்–வகையின்படி
தீக்குருவியும், கூகையும், செம்புகமும், சகலவித டேகையும்,
17 וְאֶת־ –மற்றும்–ஐ– הַכּ֥וֹס –அந்த–சிறிய–ஆந்தையை וְאֶת־ –மற்றும்–ஐ– הַשָּׁלָ֖ךְ –அந்த–நீர்காகத்தை וְאֶת־ –மற்றும்–ஐ– הַיַּנְשֽׁוּף׃ –அந்த–காது–ஆந்தையை
ஆந்தையும், நீர்க்காகமும், கோட்டானும்,
18 וְאֶת־ –மற்றும்–ஐ– הַתִּנְשֶׁ֥מֶת –அந்த–வெள்ளை–ஆந்தையை וְאֶת־ –மற்றும்–ஐ– הַקָּאָ֖ת –அந்த–நீர்க்காகத்தை וְאֶת־ –மற்றும்–ஐ– הָרָחָֽם׃ –அந்த–கழுக்குப்பருந்தையை
நாரையும், கூழக்கடாவும், குருகும்,
19 וְאֵת֙ –மற்றும்–ஐ– הַחֲסִידָ֔ה –அந்த–நாரையை הָאֲנָפָ֖ה –அந்த–கொக்கை לְמִינָ֑הּ அதன்–வகையின்படி וְאֶת־ –மற்றும்–ஐ– הַדּוּכִיפַ֖ת –அந்த–குக்குப்பாயை וְאֶת־ –மற்றும்–ஐ– הָעֲטַלֵּֽף׃ –அந்த–வவ்வாலை
கொக்கும், சகலவித ராஜாளியும், புழுக்கொத்தியும், வௌவாலும் ஆகிய இவைகளே.
20 כֹּ֚ל எல்லா– שֶׁ֣רֶץ நீரில்–நெளியும் הָע֔וֹף –அந்த–பறவையின் הַהֹלֵ֖ךְ –அந்த–நடக்கின்ற עַל־ –மேல்– אַרְבַּ֑ע நான்கு שֶׁ֥קֶץ அருவருப்பானது ה֖וּא அது לָכֶֽם׃ உங்களுக்கு ס [பத்தி]
“பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற ஊரும்பிராணிகள் அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
21 אַ֤ךְ ஆனால் אֶת־ –ஐ– זֶה֙ இதை תֹּֽאכְל֔וּ சாப்பிடுவீர்கள் מִכֹּל֙ –இலிருந்து–எல்லா– שֶׁ֣רֶץ நீரில்–நெளியும் הָע֔וֹף –அந்த–பறவையின் הַהֹלֵ֖ךְ –அந்த–நடக்கின்ற עַל־ –மேல்– אַרְבַּ֑ע நான்கு אֲשֶׁר־ –அதை– [לא] இல்லை (ל֤וֹ) அதற்கு כְרָעַ֙יִם֙ கால்களை מִמַּ֣עַל –இலிருந்து–மேலே לְרַגְלָ֔יו அதன்–கால்களுக்கு לְנַתֵּ֥ר தாவுவதற்கு בָּהֵ֖ן அவற்றால் עַל־ –மேல்– הָאָֽרֶץ׃ –அந்த–பூமியின்
ஆகிலும், பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற அனைத்திலும், நீங்கள் சாப்பிடத்தக்கது எதுவென்றால்: தரையிலே தத்துகிறதற்குக் கால்களுக்குமேல் தொடைகள் உண்டாயிருக்கிறவைகளிலே,
22 אֶת־ –ஐ– אֵ֤לֶּה இவற்றை מֵהֶם֙ அவற்றிலிருந்து תֹּאכֵ֔לוּ சாப்பிடுவீர்கள் אֶת־ –ஐ– הָֽאַרְבֶּ֣ה –அந்த–வெட்டுக்கிளியை לְמִינ֔וֹ அதன்–வகையின்படி וְאֶת־ –மற்றும்–ஐ– הַסָּלְעָ֖ם –அந்த–சல்அம்மை לְמִינֵ֑הוּ அதன்–வகையின்படி וְאֶת־ –மற்றும்–ஐ– הַחַרְגֹּ֣ל –அந்த–கார்கோலை לְמִינֵ֔הוּ அதன்–வகையின்படி וְאֶת־ –மற்றும்–ஐ– הֶחָגָ֖ב –அந்த–வெட்டுக்கிளியை לְמִינֵֽהוּ׃ அதன்–வகையின்படி
வெட்டுக்கிளி வகையாக இருக்கிறதையும், சோலையாம் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், அர்கொல் என்னும் கிளிவகையாக இருக்கிறதையும், ஆகாபு என்னும் கிளிவகையாக இருக்கிறதையும் நீங்கள் சாப்பிடலாம்.
23 וְכֹל֙ –மற்றும்–எல்லா– שֶׁ֣רֶץ நீரில்–நெளியும் הָע֔וֹף –அந்த–பறவையின் אֲשֶׁר־ –அதை– ל֖וֹ அதற்கு אַרְבַּ֣ע நான்கு רַגְלָ֑יִם கால்கள் שֶׁ֥קֶץ அருவருப்பானது ה֖וּא அது לָכֶֽם׃ உங்களுக்கு
பறக்கிறவைகளில் நான்கு கால்களால் நடமாடுகிற மற்ற அனைத்தும் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக.
24 וּלְאֵ֖לֶּה –மற்றும்–இவற்றால் תִּטַּמָּ֑אוּ அசுத்தமாகுவீர்கள் כָּל־ எல்லா– הַנֹּגֵ֥עַ –அந்த–தொடுகின்ற בְּנִבְלָתָ֖ם அவற்றின்–சாந்ததில் יִטְמָ֥א அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலையின்
“அவைகளாலே தீட்டுப்படுவீர்கள்; அவைகளின் உடலைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
25 וְכָל־ –மற்றும்–எல்லா– הַנֹּשֵׂ֖א –அந்த–தூக்குகின்ற מִנִּבְלָתָ֑ם அவற்றின்–சாந்ததிலிருந்து יְכַבֵּ֥ס தோய்ப்பான் בְּגָדָ֖יו அவனுடைய–ஆடைகளை וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலையின்
அவைகளின் உடலைச் சுமந்தவன் எவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
26 לְֽכָל־ எல்லா– הַבְּהֵמָ֡ה –அந்த–மிருகத்தின் אֲשֶׁ֣ר –அதை– הִוא֩ அது מַפְרֶ֨סֶת பிளக்குகின்ற פַּרְסָ֜ה குளம்பை וְשֶׁ֣סַע ׀ –மற்றும்–பிளவை– אֵינֶ֣נָּה இல்லை–அது שֹׁסַ֗עַת பிளக்குகின்றது וְגֵרָה֙ –மற்றும்–அசையை אֵינֶ֣נָּה இல்லை–அது מַעֲלָ֔ה அசைபோடுகின்றது טְמֵאִ֥ים அசுத்தமானவைகள் הֵ֖ם அவைகள் לָכֶ֑ם உங்களுக்கு כָּל־ எல்லா– הַנֹּגֵ֥עַ –அந்த–தொடுகின்ற בָּהֶ֖ם அவற்றில் יִטְמָֽא׃ அசுத்தமாகும்
விரிநகங்கள் உள்ளவைகளாக இருந்தும், இருபிளவான குளம்பில்லாமலும் அசைபோடாமலும் இருக்கிற மிருகங்கள் அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளைத் தொடுகிறவன் எவனும் தீட்டுப்படுவான்.
27 וְכֹ֣ל ׀ –மற்றும்–எல்லா– הוֹלֵ֣ךְ நடக்கின்றது עַל־ –மேல்– כַּפָּ֗יו அதனுடைய–உள்ளங்கைகளில் בְּכָל־ எல்லா– הַֽחַיָּה֙ –அந்த–உயிரினத்தின் הַהֹלֶ֣כֶת –அந்த–நடக்கின்றது עַל־ –மேல்– אַרְבַּ֔ע நான்கு טְמֵאִ֥ים அசுத்தமானவைகள் הֵ֖ם அவைகள் לָכֶ֑ם உங்களுக்கு כָּל־ எல்லா– הַנֹּגֵ֥עַ –அந்த–தொடுகின்ற בְּנִבְלָתָ֖ם அவற்றின்–சாந்ததில் יִטְמָ֥א அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலையின்
நான்கு கால்களால் நடக்கிற சகல உயிரினங்களிலும் தங்கள் உள்ளங்கால்களை ஊன்றி நடக்கிற அனைத்தும் உங்களுக்கு அசுத்தமாக இருப்பதாக; அவைகளின் உடலைத்தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
28 וְהַנֹּשֵׂא֙ –மற்றும்–அந்த–தூக்குகின்ற אֶת־ –ஐ– נִבְלָתָ֔ם அவற்றின்–சாந்ததை יְכַבֵּ֥ס தோய்ப்பான் בְּגָדָ֖יו அவனுடைய–ஆடைகளை וְטָמֵ֣א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָ֑רֶב –அந்த–மாலையின் טְמֵאִ֥ים அசுத்தமானவைகள் הֵ֖מָּה அவைகள் לָכֶֽם׃ உங்களுக்கு ס [பத்தி]
அவைகளின் உடலைச் சுமந்தவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
29 וְזֶ֤ה –மற்றும்–இது לָכֶם֙ உங்களுக்கு הַטָּמֵ֔א –அந்த–அசுத்தமானது בַּשֶּׁ֖רֶץ –அந்த–நீரில்–நெளியும்தின் הַשֹּׁרֵ֣ץ –அந்த–நீரில்–நெளியும் עַל־ –மேல்– הָאָ֑רֶץ –அந்த–பூமியின் הַחֹ֥לֶד –அந்த–மூஞ்சூளியை וְהָעַכְבָּ֖ר –மற்றும்–எலியை וְהַצָּ֥ב –மற்றும்–பெரிய–பல்லியை לְמִינֵֽהוּ׃ அதன்–வகையின்படி
“தரையில் ஊருகிற பிராணிகளில் உங்களுக்கு அசுத்தமானவைகள் எவையென்றால்: பெருச்சாளியும், எலியும், சகலவிதமான ஆமையும்,
30 וְהָאֲנָקָ֥ה –மற்றும்–பல்லியை וְהַכֹּ֖חַ –மற்றும்–கோஅக்கை וְהַלְּטָאָ֑ה –மற்றும்–பெரிய–பல்லியை וְהַחֹ֖מֶט –மற்றும்–பெரிய–பல்லியை וְהַתִּנְשָֽׁמֶת׃ –மற்றும்–பெரிய–பல்லியை
உடும்பும், அழுங்கும், ஓணானும், பல்லியும், பச்சோந்தியும் ஆகிய இவைகளே.
31 אֵ֛לֶּה இவைகள் הַטְּמֵאִ֥ים –அந்த–அசுத்தமானவைகள் לָכֶ֖ם உங்களுக்கு בְּכָל־ எல்லா– הַשָּׁ֑רֶץ –அந்த–நீரில்–நெளியும்தின் כָּל־ எல்லா– הַנֹּגֵ֧עַ –அந்த–தொடுகின்ற בָּהֶ֛ם அவற்றில் בְּמֹתָ֖ם அவற்றின்–சாவில் יִטְמָ֥א அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலையின்
சகல ஊரும் பிராணிகளிலும் இவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது; அவைகளில் செத்ததைத் தொடுகிறவன் எவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
32 וְכֹ֣ל –மற்றும்–எல்லா– אֲשֶׁר־ –அதை– יִפֹּל־ விழும்– עָלָיו֩ அதன்–மேல் מֵהֶ֨ם ׀ அவற்றிலிருந்து בְּמֹתָ֜ם அவற்றின்–சாவில் יִטְמָ֗א அசுத்தமாகும் מִכָּל־ –இலிருந்து–எல்லா– כְּלִי־ பாத்திரத்தின்– עֵץ֙ மரத்தின் א֣וֹ அல்லது בֶ֤גֶד ஆடையை אוֹ־ அல்லது– עוֹר֙ தோலை א֣וֹ அல்லது שָׂ֔ק சாக்கை כָּל־ எல்லா– כְּלִ֕י பாத்திரத்தை אֲשֶׁר־ –அதை– יֵעָשֶׂ֥ה செய்யப்படும் מְלָאכָ֖ה வேலையை בָּהֶ֑ם அவற்றால் בַּמַּ֧יִם –அந்த–தண்ணீர்களில் יוּבָ֛א கொண்டுவரப்படும் וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעֶ֖רֶב –அந்த–மாலையின் וְטָהֵֽר׃ –மற்றும்–சுத்தமாகும்
அவைகளில் செத்தது, எதன்மேல் விழுந்தாலும் அது தீட்டுப்பட்டிருக்கும்; அது மரப்பாத்திரமானாலும், உடையானாலும், தோலானாலும், பையானாலும், வேலை செய்கிறதற்கேற்ற ஆயுதமானாலும் மாலைவரைத் தீட்டாயிருக்கும்; அது தண்ணீரில் போடப்படவேண்டும், அப்பொழுது சுத்தமாகும்.
33 וְכָל־ –மற்றும்–எல்லா– כְּלִי־ பாத்திரத்தின்– חֶ֔רֶשׂ மண்ணின் אֲשֶׁר־ –அதை– יִפֹּ֥ל விழும் מֵהֶ֖ם அவற்றிலிருந்து אֶל־ –நோக்கி– תּוֹכ֑וֹ அதன்–உள்ளே כֹּ֣ל எல்லா– אֲשֶׁ֧ר –அதை– בְּתוֹכ֛וֹ அதன்–உள்ளே יִטְמָ֖א அசுத்தமாகும் וְאֹת֥וֹ –மற்றும்–அதை תִשְׁבֹּֽרוּ׃ உடைப்பீர்கள்
அவைகளில் ஒன்று மண்பாண்டத்திற்குள் விழுந்தால், அதற்குள் இருக்கிறவை அனைத்தும் தீட்டுப்பட்டிருக்கும்; அதை உடைத்துப்போடவேண்டும்.
34 מִכָּל־ –இலிருந்து–எல்லா– הָאֹ֜כֶל –அந்த–உணவின் אֲשֶׁ֣ר –அதை– יֵאָכֵ֗ל சாப்பிடப்படும் אֲשֶׁ֨ר –அதை– יָב֥וֹא வரும் עָלָ֛יו அதன்–மேல் מַ֖יִם தண்ணீர் יִטְמָ֑א அசுத்தமாகும் וְכָל־ –மற்றும்–எல்லா– מַשְׁקֶה֙ பானத்தை אֲשֶׁ֣ר –அதை– יִשָּׁתֶ֔ה குடிக்கப்படும் בְּכָל־ எல்லா– כְּלִ֖י பாத்திரத்தில் יִטְמָֽא׃ அசுத்தமாகும்
சாப்பிடத்தக்க உணவுபதார்த்தத்தின்மேல் அந்தத் தண்ணீர் பட்டால், அது தீட்டாகும்; குடிக்கத்தக்க எந்தப்பானமும் அப்படிப்பட்ட பாத்திரத்தினால் தீட்டுப்படும்.
35 וְ֠כֹל –மற்றும்–எல்லா– אֲשֶׁר־ –அதை– יִפֹּ֨ל விழும் מִנִּבְלָתָ֥ם ׀ அவற்றின்–சாந்ததிலிருந்து עָלָיו֮ அதன்–மேல் יִטְמָא֒ அசுத்தமாகும் תַּנּ֧וּר அடுப்பை וְכִירַ֛יִם –மற்றும்–அடுப்புகளை יֻתָּ֖ץ இடிக்கப்படும் טְמֵאִ֣ים அசுத்தமானவைகள் הֵ֑ם அவைகள் וּטְמֵאִ֖ים –மற்றும்–அசுத்தமானவைகள் יִהְי֥וּ ஆகும் לָכֶֽם׃ உங்களுக்கு
அவைகளின் உடலில் யாதொன்று எதின்மேல் விழுமோ, அதுவும் தீட்டுப்படும்; அடுப்பானாலும் மண்தொட்டியானாலும் தகர்க்கப்படுவதாக; அவைகள் தீட்டுப்பட்டிருக்கும்; ஆகையால், அவைகள் உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
36 אַ֣ךְ ஆனால் מַעְיָ֥ן நீரூற்றை וּב֛וֹר –மற்றும்–கிணறுயை מִקְוֵה־ தண்ணீர்–சேகரிப்பு– מַ֖יִם தண்ணீரின் יִהְיֶ֣ה ஆகும் טָה֑וֹר சுத்தமானது וְנֹגֵ֥עַ –மற்றும்–தொடுகின்ற בְּנִבְלָתָ֖ם அவற்றின்–சாந்ததில் יִטְמָֽא׃ அசுத்தமாகும்
ஆனாலும், நீரூற்றும், மிகுந்த தண்ணீர் உண்டாகிய கிணறும், சுத்தமாக இருக்கும்; அவைகளிலுள்ள உடலைத் தொடுகிறவனோ தீட்டுப்படுவான்.
37 וְכִ֤י –மற்றும்–எப்போது– יִפֹּל֙ விழும் מִנִּבְלָתָ֔ם அவற்றின்–சாந்ததிலிருந்து עַל־ –மேல்– כָּל־ எல்லா– זֶ֥רַע விதையை זֵר֖וּעַ விதைக்கப்பட்ட אֲשֶׁ֣ר –அதை– יִזָּרֵ֑עַ விதைக்கப்படும் טָה֖וֹר சுத்தமானது הֽוּא׃ அது
மேற்சொல்லியவைகளின் உடலில் யாதொன்று விதைத்தானியத்தின்மேல் விழுந்தால், அது தீட்டுப்படாது.
38 וְכִ֤י –மற்றும்–எப்போது– יֻתַּן־ வைக்கப்படும்– מַ֙יִם֙ தண்ணீர் עַל־ –மேல்– זֶ֔רַע விதையை וְנָפַ֥ל –மற்றும்–விழும் מִנִּבְלָתָ֖ם அவற்றின்–சாந்ததிலிருந்து עָלָ֑יו அதன்–மேல் טָמֵ֥א அசுத்தமானது ה֖וּא அது לָכֶֽם׃ உங்களுக்கு ס [பத்தி]
அந்த உடலில் ஏதாவதொன்று தண்ணீர் ஊற்றப்பட்டிருக்கிற விதையின்மேல் விழுந்ததானால், அது உங்களுக்குத் தீட்டாயிருக்கக்கடவது.
39 וְכִ֤י –மற்றும்–எப்போது– יָמוּת֙ சாகும் מִן־ –இலிருந்து– הַבְּהֵמָ֔ה –அந்த–மிருகத்தின் אֲשֶׁר־ –அதை– הִ֥יא அது לָכֶ֖ם உங்களுக்கு לְאָכְלָ֑ה சாப்பிடுவதற்கு הַנֹּגֵ֥עַ –அந்த–தொடுகின்ற בְּנִבְלָתָ֖הּ அதனுடைய–சாந்ததில் יִטְמָ֥א அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலையின்
“உங்களுக்கு ஆகாரத்துக்கான ஒரு மிருகம் செத்தால், அதின் உடலைத்தொடுகிறவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
40 וְהָֽאֹכֵל֙ –மற்றும்–அந்த–சாப்பிடுகின்ற מִנִּבְלָתָ֔הּ அதனுடைய–சாந்ததிலிருந்து יְכַבֵּ֥ס தோய்ப்பான் בְּגָדָ֖יו அவனுடைய–ஆடைகளை וְטָמֵ֣א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָ֑רֶב –அந்த–மாலையின் וְהַנֹּשֵׂא֙ –மற்றும்–அந்த–தூக்குகின்ற אֶת־ –ஐ– נִבְלָתָ֔הּ அதனுடைய–சாந்ததை יְכַבֵּ֥ס தோய்ப்பான் בְּגָדָ֖יו அவனுடைய–ஆடைகளை וְטָמֵ֥א –மற்றும்–அசுத்தமாகும் עַד־ –வரையில்– הָעָֽרֶב׃ –அந்த–மாலையின்
அதின் மாம்சத்தைச் சாப்பிட்டவன் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவன் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்; அதின் உடலை எடுத்துக்கொண்டுபோனவனும் தன் உடைகளைத் துவைக்கக்கடவன்; அவனும் மாலைவரைத் தீட்டுப்பட்டிருப்பான்.
41 וְכָל־ –மற்றும்–எல்லா– הַשֶּׁ֖רֶץ –அந்த–நீரில்–நெளியும்தின் הַשֹּׁרֵ֣ץ –அந்த–நீரில்–நெளியும் עַל־ –மேல்– הָאָ֑רֶץ –அந்த–பூமியின் שֶׁ֥קֶץ அருவருப்பானது ה֖וּא அது לֹ֥א இல்லை יֵאָכֵֽל׃ சாப்பிடப்படாது
“தரையில் ஊருகிற பிராணிகளெல்லாம் உங்களுக்கு அருவருப்பாயிருப்பதாக; அவை சாப்பிடப்படக்கூடாது.
42 כֹּל֩ எல்லா– הוֹלֵ֨ךְ நடக்கின்றது עַל־ –மேல்– גָּח֜וֹן வயிற்றின்–மேல் וְכֹ֣ל ׀ –மற்றும்–எல்லா– הוֹלֵ֣ךְ நடக்கின்றது עַל־ –மேல்– אַרְבַּ֗ע நான்கு עַ֚ד –வரையில்– כָּל־ எல்லா– מַרְבֵּ֣ה பெருகுகின்ற רַגְלַ֔יִם கால்களை לְכָל־ எல்லா– הַשֶּׁ֖רֶץ –அந்த–நீரில்–நெளியும்தின் הַשֹּׁרֵ֣ץ –அந்த–நீரில்–நெளியும் עַל־ –மேல்– הָאָ֑רֶץ –அந்த–பூமியின் לֹ֥א இல்லை תֹאכְל֖וּם சாப்பிடாதீர்கள்–அவற்றை כִּי־ –ஏனெனில்– שֶׁ֥קֶץ அருவருப்பானது הֵֽם׃ அவைகள்
தரையில் ஊருகிற சகல பிராணிகளிலும், வயிற்றினால் நகருகிறவைகளையும், நான்கு கால்களால் நடமாடுகிறவைகளையும் அநேகம் கால்களுள்ளவைகளையும் சாப்பிடாதிருப்பீர்களாக; அவைகள் அருவருப்பானவைகள்.
43 אַל־ வேண்டாம்– תְּשַׁקְּצוּ֙ அருவருப்பாகமாக்காதீர்கள் אֶת־ –ஐ– נַפְשֹׁ֣תֵיכֶ֔ם உங்கள்–உயிர்களை בְּכָל־ எல்லா– הַשֶּׁ֖רֶץ –அந்த–நீரில்–நெளியும்தின் הַשֹּׁרֵ֑ץ –அந்த–நீரில்–நெளியும் וְלֹ֤א –மற்றும்–இல்லை תִֽטַּמְּאוּ֙ அசுத்தமாகாதீர்கள் בָּהֶ֔ם அவற்றால் וְנִטְמֵתֶ֖ם –மற்றும்–அசுத்தமாகுவீர்கள் בָּֽם׃ அவற்றால்
ஊருகிற எந்தப் பிராணிகளாலும் உங்களை அருவருப்பாக்கிக் கொள்ளாமலும், அவைகளால் தீட்டுப்படாமலும் இருப்பீர்களாக; அவைகளாலே நீங்கள் தீட்டுப்படுவீர்கள்.
44 כִּ֣י –ஏனெனில்– אֲנִ֣י நான் יְהוָה֮ யெகோவா אֱלֹֽהֵיכֶם֒ உங்கள்–தேவன் וְהִתְקַדִּשְׁתֶּם֙ –மற்றும்–பரிசுத்தமாக்குவீர்கள் וִהְיִיתֶ֣ם –மற்றும்–ஆகுவீர்கள் קְדֹשִׁ֔ים பரிசுத்தர்கள் כִּ֥י –ஏனெனில்– קָד֖וֹשׁ பரிசுத்தர் אָ֑נִי நான் וְלֹ֤א –மற்றும்–இல்லை תְטַמְּאוּ֙ அசுத்தமாக்காதீர்கள் אֶת־ –ஐ– נַפְשֹׁ֣תֵיכֶ֔ם உங்கள்–உயிர்களை בְּכָל־ எல்லா– הַשֶּׁ֖רֶץ –அந்த–நீரில்–நெளியும்தின் הָרֹמֵ֥שׂ –அந்த–ஊரும் עַל־ –மேல்– הָאָֽרֶץ׃ –அந்த–பூமியின்
நான் உங்கள் தேவனாகிய யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால், தரையில் ஊருகிற எந்தப் பிராணிகளிலும் உங்களைத் தீட்டுப்படுத்தாமல், உங்களைப் பரிசுத்தமாக்கிக்கொண்டு, பரிசுத்தராக இருப்பீர்களாக.
45 כִּ֣י ׀ –ஏனெனில்– אֲנִ֣י நான் יְהוָ֗ה யெகோவா הַֽמַּעֲלֶ֤ה –அந்த–கொண்டுவந்த אֶתְכֶם֙ உங்களை מֵאֶ֣רֶץ –இலிருந்து–நாட்டிலிருந்து מִצְרַ֔יִם எகிப்தின் לִהְיֹ֥ת ஆகுவதற்கு לָכֶ֖ם உங்களுக்கு לֵאלֹהִ֑ים தேவனாக וִהְיִיתֶ֣ם –மற்றும்–ஆகுவீர்கள் קְדֹשִׁ֔ים பரிசுத்தர்கள் כִּ֥י –ஏனெனில்– קָד֖וֹשׁ பரிசுத்தர் אָֽנִי׃ நான்
நான் உங்கள் தேவனாக இருப்பதற்கு உங்களை எகிப்து தேசத்திலிருந்து வரச்செய்த யெகோவா, நான் பரிசுத்தர்; ஆகையால். நீங்களும் பரிசுத்தராக இருப்பீர்களாக.
46 זֹ֣את இது תּוֹרַ֤ת சட்டம் הַבְּהֵמָה֙ –அந்த–மிருகத்தின் וְהָע֔וֹף –மற்றும்–பறவையின் וְכֹל֙ –மற்றும்–எல்லா– נֶ֣פֶשׁ உயிரை הַֽחַיָּ֔ה –அந்த–உயிருள்ள הָרֹמֶ֖שֶׂת –அந்த–ஊரும் בַּמָּ֑יִם –அந்த–தண்ணீர்களில் וּלְכָל־ –மற்றும்–எல்லா– נֶ֖פֶשׁ உயிரை הַשֹּׁרֶ֥צֶת –அந்த–நீரில்–நெளியும் עַל־ –மேல்– הָאָֽרֶץ׃ –அந்த–பூமியின்
சுத்தமானதற்கும் அசுத்தமானதற்கும், சாப்பிடத்தக்க உயிரினங்களுக்கும் சாப்பிடத்தகாத உயிரினங்களுக்கும் வித்தியாசம் உண்டாக்குவதற்காக,
47 לְהַבְדִּ֕יל வேறுபடுத்தவும் בֵּ֥ין –இடையில்– הַטָּמֵ֖א –அந்த–அசுத்தமானதற்கும் וּבֵ֣ין –மற்றும்–இடையில்– הַטָּהֹ֑ר –அந்த–சுத்தமானதற்கும் וּבֵ֤ין –மற்றும்–இடையில்– הַֽחַיָּה֙ –அந்த–உயிரினத்தின் הַֽנֶּאֱכֶ֔לֶת –அந்த–சாப்பிடப்படுகின்றதின் וּבֵין֙ –மற்றும்–இடையில்– הַֽחַיָּ֔ה –அந்த–உயிரினத்தின் אֲשֶׁ֖ר –அதை– לֹ֥א இல்லை תֵאָכֵֽל׃ சாப்பிடப்படாததின் פ [பத்தி]
மிருகத்திற்கும், பறவைகளுக்கும், தண்ணீர்களில் நீந்துகிற சகல உயிரினங்களுக்கும், பூமியின்மேல் ஊருகிற சகல பிராணிகளுக்கும் உரிய விதிமுறைகள் இதுவே என்று சொல்லுங்கள் என்றார்.