1 וַיְדַבֵּ֥ר –மற்றும்–பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –நோக்கி– מֹשֶׁ֥ה மோசேயிடம் לֵּאמֹֽר –சொல்லி–
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
2 דַּבֵּ֞ר பேசு אֶל־ –நோக்கி– כָּל־ எல்லா– עֲדַ֧ת சபையிடம் בְּנֵי־ புத்திரர்களின்– יִשְׂרָאֵ֛ל இஸ்ரவேலின் וְאָמַרְתָּ֥ –மற்றும்–சொல் אֲלֵהֶ֖ם அவர்களிடம் קְדֹשִׁ֣ים பரிசுத்தர்களாக תִּהְי֑וּ இருங்கள் כִּ֣י ஏனெனில் קָד֔וֹשׁ பரிசுத்தர் אֲנִ֖י நான் יְהוָ֥ה யெகோவா אֱלֹהֵיכֶֽם׃ உங்கள்–தேவன்
“நீ இஸ்ரவேல் மக்களின் சபை அனைத்தோடும் சொல்லவேண்டியது என்னவென்றால்: உங்கள் தேவனும் யெகோவாவாகிய நான் பரிசுத்தர், ஆகையால் நீங்களும் பரிசுத்தராக இருங்கள்.
3 אִ֣ישׁ மனிதன் אִמּ֤וֹ அவன்–தாயை וְאָבִיו֙ –மற்றும்–அவன்–தகப்பனை תִּירָ֔אוּ பயப்படுங்கள் וְאֶת־ –மற்றும்–அதை– שַׁבְּתֹתַ֖י என்–ஓய்வுநாட்களை תִּשְׁמֹ֑רוּ காப்புங்கள் אֲנִ֖י நான் יְהוָ֥ה யெகோவா אֱלֹהֵיכֶֽם׃ உங்கள்–தேவன்
உங்களில் அவனவன் தன்தன் தாய்க்கும் தகப்பனுக்கும் பயந்திருக்கவும், என் ஓய்வு நாட்களை அனுசரிக்கவும்கடவீர்கள்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
4 אַל־ –வேண்டாம்– תִּפְנוּ֙ திரும்புங்கள் אֶל־ –நோக்கி– הָ֣אֱלִילִ֔ים –அந்த–விக்கிரகங்களிடம் וֵֽאלֹהֵי֙ –மற்றும்–தேவர்களை מַסֵּכָ֔ה வார்ப்பின் לֹ֥א இல்லை תַעֲשׂ֖וּ செய்யக்கூடாது לָכֶ֑ם உங்களுக்கு אֲנִ֖י நான் יְהוָ֥ה யெகோவா אֱלֹהֵיכֶֽם׃ உங்கள்–தேவன்
சிலைகளை நாடாமலும், வார்ப்பிக்கப்பட்ட தெய்வங்களை உங்களுக்கு உண்டாக்காமலும் இருப்பீர்களாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
5 וְכִ֧י –மற்றும்–போது תִזְבְּח֛וּ பலியிடுவீர்கள் זֶ֥בַח பலி שְׁלָמִ֖ים சமாதானத்தின் לַיהוָ֑ה –க்கு–யெகோவாவுக்கு לִֽרְצֹנְכֶ֖ם –க்கு–உங்கள்–விருப்பத்தின்படி תִּזְבָּחֻֽהוּ׃ பலியிடுவீர்கள்–அதை
“நீங்கள் சமாதானபலியைக் யெகோவாவுக்குச் செலுத்தினால், அதை மன உற்சாகமாகச் செலுத்துங்கள்.
6 בְּי֧וֹם –இல்–நாளில் זִבְחֲכֶ֛ם உங்கள்–பலியிடும் יֵאָכֵ֖ל உண்ணப்படும் וּמִֽמָּחֳרָ֑ת –மற்றும்–இலிருந்து–மறுநாளிலும் וְהַנּוֹתָר֙ –மற்றும்–மீதமானது עַד־ –வரை– י֣וֹם நாள் הַשְּׁלִישִׁ֔י –அந்த–மூன்றாவது בָּאֵ֖שׁ –இல்–நெருப்பில் יִשָּׂרֵֽף׃ எரிக்கப்படும்
நீங்கள் அதைச் செலுத்துகிற நாளிலும் மறுநாளிலும் அதைச் சாப்பிடவேண்டும்; மூன்றாம் நாள்வரை மீதியானது நெருப்பிலே சுட்டெரிக்கப்படக்கடவது.
7 וְאִ֛ם –மற்றும்–ஆனால் הֵאָכֹ֥ל உண்ணுதல் יֵאָכֵ֖ל உண்ணப்பட்டால் בַּיּ֣וֹם –இல்–நாளில் הַשְּׁלִישִׁ֑י –அந்த–மூன்றாவது פִּגּ֥וּל அருவருப்பு ה֖וּא அது לֹ֥א இல்லை יֵרָצֶֽה׃ ஏற்றுக்கொள்ளப்படாது
மூன்றாம் நாளில் அதில் எதையாகிலும் சாப்பிட்டால் அருவருப்பாயிருக்கும்; அது அங்கீகரிக்கப்படமாட்டாது.
8 וְאֹֽכְלָיו֙ –மற்றும்–உண்கிறவர்கள்–அதை עֲוֺנ֣וֹ அவன்–அக்கிரமத்தை יִשָּׂ֔א சுமப்பான் כִּֽי־ ஏனெனில்– אֶת־ –அதை– קֹ֥דֶשׁ பரிசுத்தத்தை יְהוָ֖ה யெகோவாவின் חִלֵּ֑ל தீட்டுப்படுத்தினான் וְנִכְרְתָ֛ה –மற்றும்–அறுப்புண்டுபோவாள் הַנֶּ֥פֶשׁ –அந்த–ஆத்துமா הַהִ֖וא –அந்த–அது מֵעַמֶּֽיהָ׃ –இலிருந்து–அவள்–ஜனங்களிலிருந்து
அதைச் சாப்பிடுகிறவன் யெகோவாவுக்குப் பரிசுத்தமானதைப் பரிசுத்தக்குலைச்சலாக்கினதினால் அவன் தன் அக்கிரமத்தைச் சுமந்து, தன் மக்களுக்குள் இல்லாதபடி அறுப்புண்டுபோவான்.
9 וּֽבְקֻצְרְכֶם֙ –மற்றும்–இல்–உங்கள்–அறுவடையில் אֶת־ –அதை– קְצִ֣יר அறுவடையை אַרְצְכֶ֔ם உங்கள்–தேசத்தின் לֹ֧א இல்லை תְכַלֶּ֛ה முடிக்கக்கூடாது פְּאַ֥ת மூலையை שָׂדְךָ֖ உன்–வயலின் לִקְצֹ֑ר –க்கு–அறுவடைசெய்ய וְלֶ֥קֶט –மற்றும்–கதிர்களை קְצִֽירְךָ֖ உன்–அறுவடையின் לֹ֥א இல்லை תְלַקֵּֽט׃ பொறுக்கக்கூடாது
“நீங்கள் தேசத்தின் பயிரை அறுக்கும்போது, உன் வயலின் ஓரத்தில் இருக்கிறதை முற்றிலும் அறுக்காமலும், சிந்திக்கிடக்கிற கதிர்களைப் பொறுக்காமலும்,
10 וְכַרְמְךָ֙ –மற்றும்–உன்–திராட்சைத்தோட்டத்தை לֹ֣א இல்லை תְעוֹלֵ֔ל கொத்துக்கூடாது וּפֶ֥רֶט –மற்றும்–உதிர்ந்தவற்றை כַּרְמְךָ֖ உன்–திராட்சைத்தோட்டத்தின் לֹ֣א இல்லை תְלַקֵּ֑ט பொறுக்கக்கூடாது לֶֽעָנִ֤י –க்கு–ஏழைக்கும் וְלַגֵּר֙ –மற்றும்–க்கு–அந்நியனுக்கும் תַּעֲזֹ֣ב விட்டுவிடுவாய் אֹתָ֔ם அவற்றை אֲנִ֖י நான் יְהוָ֥ה யெகோவா אֱלֹהֵיכֶֽם׃ உங்கள்–தேவன்
உன் திராட்சைத்தோட்டத்திலே பின் அறுப்பை அறுக்காமலும், அதிலே சிந்திக்கிடக்கிற பழங்களைப் பொறுக்காமலும், அவைகளை ஏழைகளுக்கும் பரதேசிக்கும் விட்டுவிடுவாயாக; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
11 לֹ֖א இல்லை תִּגְנֹ֑בוּ திருடக்கூடாது וְלֹא־ –மற்றும்–இல்லை– תְכַחֲשׁ֥וּ பொய்சொல்லக்கூடாது וְלֹֽא־ –மற்றும்–இல்லை– תְשַׁקְּר֖וּ வஞ்சிக்கக்கூடாது אִ֥ישׁ மனிதன் בַּעֲמִיתֽוֹ׃ –இல்–அவன்–அயலானிடம்
“நீங்கள் திருடாமலும், வஞ்சனைசெய்யாமலும், ஒருவருக்கொருவர் பொய் சொல்லாமலும் இருங்கள்.
12 וְלֹֽא־ –மற்றும்–இல்லை– תִשָּׁבְע֥וּ ஆணையிடக்கூடாது בִשְׁמִ֖י –இல்–என்–நாமத்தில் לַשָּׁ֑קֶר –க்கு–பொய்க்கு וְחִלַּלְתָּ֛ –மற்றும்–தீட்டுப்படுத்துவாய் אֶת־ –அதை– שֵׁ֥ם நாமத்தை אֱלֹהֶ֖יךָ உன்–தேவனின் אֲנִ֥י நான் יְהוָֽה׃ யெகோவா
என் நாமத்தைக்கொண்டு பொய்யாணையிடுகிறதினால், உங்கள் தேவனுடைய நாமத்தைப் பரிசுத்தக் குலைச்சலாக்காமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.
13 לֹֽא־ இல்லை– תַעֲשֹׁ֥ק ஒடுக்கக்கூடாது אֶת־ –அதை– רֵֽעֲךָ֖ உன்–அயலானை וְלֹ֣א –மற்றும்–இல்லை תִגְזֹ֑ל கொள்ளையடிக்கக்கூடாது לֹֽא־ இல்லை– תָלִ֞ין தங்கவைக்கக்கூடாது פְּעֻלַּ֥ת கூலியை שָׂכִ֛יר கூலியாளின் אִתְּךָ֖ –இல்–உன்னிடம் עַד־ –வரை– בֹּֽקֶר׃ காலை
“பிறனை ஒடுக்காமலும் கொள்ளையிடாமலும் இருப்பாயாக; கூலிக்காரனுடைய கூலி விடியற்காலம்வரை உன்னிடத்தில் இருக்கக்கூடாது.
14 לֹא־ இல்லை– תְקַלֵּ֣ל சபிக்கக்கூடாது חֵרֵ֔שׁ செவிடனை וְלִפְנֵ֣י –மற்றும்–முன்பாக– עִוֵּ֔ר குருடனின் לֹ֥א இல்லை תִתֵּ֖ן வைக்கக்கூடாது מִכְשֹׁ֑ל இடறல் וְיָרֵ֥אתָ –மற்றும்–பயப்படுவாய் מֵּאֱלֹהֶ֖יךָ –இலிருந்து–உன்–தேவனை אֲנִ֥י நான் יְהוָֽה׃ யெகோவா
செவிடனை நிந்திக்காமலும், குருடனுக்கு முன்னே தடைகளை வைக்காமலும், உன் தேவனுக்குப் பயந்திருப்பாயாக; நான் யெகோவா.
15 לֹא־ இல்லை– תַעֲשׂ֥וּ செய்யக்கூடாது עָ֙וֶל֙ அநீதி בַּמִּשְׁפָּ֔ט –இல்–நியாயத்தீர்ப்பில் לֹא־ இல்லை– תִשָּׂ֣א எடுக்கக்கூடாது פְנֵי־ முகத்தை– דָ֔ל ஏழையின் וְלֹ֥א –மற்றும்–இல்லை תֶהְדַּ֖ר மதிக்கக்கூடாது פְּנֵ֣י முகத்தை גָד֑וֹל பெரியவனின் בְּצֶ֖דֶק –இல்–நீதியில் תִּשְׁפֹּ֥ט நியாயந்தீர்ப்பாய் עֲמִיתֶֽךָ׃ உன்–அயலானை
“நியாயவிசாரணையில் அநியாயம் செய்யாதிருங்கள்; சிறியவனுக்கு முகதாட்சிணியம் செய்யாமலும், பெரியவனுடைய முகத்திற்கு பயப்படாமலும், நீதியாகப் பிறனுக்கு நியாயந்தீர்ப்பாயாக.
16 לֹא־ இல்லை– תֵלֵ֤ךְ நடக்கக்கூடாது רָכִיל֙ புறங்கூறுபவனாக בְּעַמֶּ֔יךָ –இல்–உன்–ஜனத்தில் לֹ֥א இல்லை תַעֲמֹ֖ד நிற்கக்கூடாது עַל־ –மேல்– דַּ֣ם இரத்தத்தின் רֵעֶ֑ךָ உன்–அயலானின் אֲנִ֖י நான் יְהוָֽה׃ யெகோவா
உன் மக்களுக்குள்ளே அங்கும் இங்கும் கோள்சொல்லித் திரியாதே; பிறனுடைய இரத்தப்பழிக்கு உட்படவேண்டாம்; நான் யெகோவா.
17 לֹֽא־ இல்லை– תִשְׂנָ֥א வெறுக்கக்கூடாது אֶת־ –அதை– אָחִ֖יךָ உன்–சகோதரனை בִּלְבָבֶ֑ךָ –இல்–உன்–இருதயத்தில் הוֹכֵ֤חַ கடிந்துகொள் תּוֹכִ֙יחַ֙ கடிந்துகொள்வாய் אֶת־ –அதை– עֲמִיתֶ֔ךָ உன்–அயலானை וְלֹא־ –மற்றும்–இல்லை– תִשָּׂ֥א சுமக்கக்கூடாது עָלָ֖יו –மேல்–அவன்மேல் חֵֽטְא׃ பாவம்
“உன் சகோதரனை உன் உள்ளத்தில் பகைக்காதே; பிறன்மேல் பாவம் சுமராதபடி அவனை எப்படியும் கடிந்து கொள்ளவேண்டும்.
18 לֹֽא־ இல்லை– תִקֹּ֤ם பழிவாங்கக்கூடாது וְלֹֽא־ –மற்றும்–இல்லை– תִטֹּר֙ பகைக்கக்கூடாது אֶת־ –அதை– בְּנֵ֣י புத்திரர்களை עַמֶּ֔ךָ உன்–ஜனத்தின் וְאָֽהַבְתָּ֥ –மற்றும்–அன்புகூர்வாய் לְרֵעֲךָ֖ –க்கு–உன்–அயலானை כָּמ֑וֹךָ –போல–உன்னைப்போல אֲנִ֖י நான் יְהוָֽה׃ யெகோவா
பழிக்குப்பழி வாங்காமலும் உன் மக்கள்மேல் பொறாமைகொள்ளாமலும், உன்னில் நீ அன்புகூறுவதுபோல் பிறனிலும் அன்புகூருவாயாக; நான் யெகோவா.
19 אֶֽת־ –அதை– חֻקֹּתַי֮ என்–கட்டளைகளை תִּשְׁמֹרוּ֒ காப்புங்கள் בְּהֶמְתְּךָ֙ உன்–மிருகத்தை לֹא־ இல்லை– תַרְבִּ֣יעַ கலப்புச்செய்யக்கூடாது כִּלְאַ֔יִם கலப்பினம் שָׂדְךָ֖ உன்–வயலை לֹא־ இல்லை– תִזְרַ֣ע விதைக்கக்கூடாது כִּלְאָ֑יִם கலப்பினம் וּבֶ֤גֶד –மற்றும்–ஆடை כִּלְאַ֙יִם֙ கலப்பின שַֽׁעַטְנֵ֔ז கலப்பின–நூல் לֹ֥א இல்லை יַעֲלֶ֖ה ஏறக்கூடாது עָלֶֽיךָ׃ –மேல்–உன்மேல் פ פ
“என் கட்டளைகளைக் கைக்கொள்வீர்களாக; உன் மிருகங்களை வேறு இனத்தோடே பெருகச்செய்யாதே; உன் வயலிலே வெவ்வேறு வகையான விதைகளைக் கலந்து விதைக்காதே; சணல்நூலும் கம்பளிநூலும் கலந்த உடையை அணியாதே
20 וְ֠אִישׁ –மற்றும்–மனிதன் כִּֽי־ போது– יִשְׁכַּ֨ב படுப்பான் אֶת־ –அதை– אִשָּׁ֜ה பெண்ணுடன் שִׁכְבַת־ படுக்கையின்– זֶ֗רַע விதையின் וְהִ֤וא –மற்றும்–அவள் שִׁפְחָה֙ அடிமைப்பெண் נֶחֱרֶ֣פֶת நிச்சயிக்கப்பட்ட לְאִ֔ישׁ –க்கு–மனிதனுக்கு וְהָפְדֵּה֙ –மற்றும்–மீட்கப்படுதல் לֹ֣א இல்லை נִפְדָּ֔תָה மீட்கப்பட்டிருக்கவில்லை א֥וֹ அல்லது חֻפְשָׁ֖ה விடுதலை לֹ֣א இல்லை נִתַּן־ கொடுக்கப்பட்டிருக்கவில்லை– לָ֑הּ –க்கு–அவளுக்கு בִּקֹּ֧רֶת தண்டனை תִּהְיֶ֛ה இருக்கும் לֹ֥א இல்லை יוּמְת֖וּ கொல்லப்படமாட்டார்கள் כִּי־ ஏனெனில்– לֹ֥א இல்லை חֻפָּֽשָׁה׃ விடுதலையாகவில்லை
“ஒருவனுக்கு அடிமையானவள் ஒரு ஆணுக்கு நியமிக்கப்பட்டவளாக இருந்து, முற்றிலும் மீட்கப்படாமலும் தன்னிச்சையாக விடப்படாமலுமிருக்க, அவளோடே ஒருவன் காம உணர்வுடன் உடலுறவுகொண்டால், அவர்கள் கொலை செய்யப்படாமல், அடிக்கப்படவேண்டும்; அவள் சுதந்திரமுள்ளவள் அல்ல.
21 וְהֵבִ֤יא –மற்றும்–கொண்டுவருவான் אֶת־ –அதை– אֲשָׁמוֹ֙ அவன்–குற்றநிவாரணபலியை לַֽיהוָ֔ה –க்கு–யெகோவாவுக்கு אֶל־ –நோக்கி– פֶּ֖תַח வாசலுக்கு אֹ֣הֶל கூடாரத்தின் מוֹעֵ֑ד சந்திப்பின் אֵ֖יל ஆட்டுக்கடா אָשָֽׁם׃ குற்றநிவாரணபலி
அவன் தன் குற்றநிவாரணபலியாக ஆசரிப்புக்கூடாரத்தின் வாசலிலே யெகோவாவுடைய சந்நிதியில் ஒரு ஆட்டுக்கடாவைக் கொண்டுவரக்கடவன்.
22 וְכִפֶּר֩ –மற்றும்–பாவநிவிர்த்தி–செய்வான் עָלָ֨יו –மேல்–அவன்மேல் הַכֹּהֵ֜ן –அந்த–ஆசாரியன் בְּאֵ֤יל –இல்–ஆட்டுக்கடாவினால் הָֽאָשָׁם֙ –அந்த–குற்றநிவாரணபலியின் לִפְנֵ֣י –முன்பாக– יְהוָ֔ה யெகோவாவின் עַל־ –மேல்– חַטָּאת֖וֹ அவன்–பாவத்தை אֲשֶׁ֣ר –ஆகிய חָטָ֑א பாவஞ்செய்தான் וְנִסְלַ֣ח –மற்றும்–மன்னிக்கப்படும் ל֔וֹ –க்கு–அவனுக்கு מֵחַטָּאת֖וֹ –இலிருந்து–அவன்–பாவத்திலிருந்து אֲשֶׁ֥ר –ஆகிய חָטָֽא׃ பாவஞ்செய்தான் פ פ
அதினாலே ஆசாரியன் அவன் செய்த பாவத்தினிமித்தம் அவனுக்காகக் யெகோவாவுடைய சந்நிதியில் பாவநிவிர்த்தி செய்யக்கடவன்; அப்பொழுது அவன் செய்த பாவம் அவனுக்கு மன்னிக்கப்படும்.
23 וְכִי־ –மற்றும்–போது– תָבֹ֣אוּ வருவீர்கள் אֶל־ –நோக்கி– הָאָ֗רֶץ –அந்த–தேசத்திற்கு וּנְטַעְתֶּם֙ –மற்றும்–நடுவீர்கள் כָּל־ எல்லா– עֵ֣ץ மரத்தை מַאֲכָ֔ל உணவின் וַעֲרַלְתֶּ֥ם –மற்றும்–விருத்தசேதனமில்லாததாக–எண்ணுவீர்கள் עָרְלָת֖וֹ அதன்–விருத்தசேதனமின்மையை אֶת־ –அதை– פִּרְי֑וֹ அதன்–கனியை שָׁלֹ֣שׁ மூன்று שָׁנִ֗ים ஆண்டுகள் יִהְיֶ֥ה இருக்கும் לָכֶ֛ם உங்களுக்கு עֲרֵלִ֖ים விருத்தசேதனமில்லாத לֹ֥א இல்லை יֵאָכֵֽל׃ உண்ணப்படக்கூடாது
“நீங்கள் அந்த தேசத்தில் வந்து, சாப்பிடத்தக்க பழங்களைத் தருகிற பலவித மரங்களை நாட்டினபின்பு அவைகளின் பழங்களை விருத்தசேதனம் இல்லாதவைகளென்று கருதுவீர்களாக; மூன்று வருடங்கள் அது சாப்பிடப்படாமல், விருத்தசேதனம் இல்லாததாக உங்களுக்கு கருதப்படவேண்டும்.
24 וּבַשָּׁנָה֙ –மற்றும்–இல்–ஆண்டில் הָרְבִיעִ֔ת –அந்த–நான்காவது יִהְיֶ֖ה இருக்கும் כָּל־ எல்லா– פִּרְי֑וֹ அதன்–கனி קֹ֥דֶשׁ பரிசுத்தம் הִלּוּלִ֖ים துதியின் לַיהוָֽה׃ –க்கு–யெகோவாவுக்கு
பின்பு நான்காம் வருடத்திலே அவைகளின் பழங்களெல்லாம் யெகோவாவுக்குத் துதிசெலுத்துகிறதற்கேற்ற பரிசுத்தமாக இருக்கும்.
25 וּבַשָּׁנָ֣ה –மற்றும்–இல்–ஆண்டில் הַחֲמִישִׁ֗ת –அந்த–ஐந்தாவது תֹּֽאכְלוּ֙ உண்பீர்கள் אֶת־ –அதை– פִּרְי֔וֹ அதன்–கனியை לְהוֹסִ֥יף –க்கு–சேர்க்க לָכֶ֖ם உங்களுக்கு תְּבוּאָת֑וֹ அதன்–விளைச்சலை אֲנִ֖י நான் יְהוָ֥ה யெகோவா אֱלֹהֵיכֶֽם׃ உங்கள்–தேவன்
ஐந்தாம் வருடத்திலே அவைகளின் பழங்களைச் சாப்பிடலாம்; இப்படி அவைகளின் பலன் உங்களுக்குப் பெருகும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
26 לֹ֥א இல்லை תֹאכְל֖וּ உண்ணக்கூடாது עַל־ –மேல்– הַדָּ֑ם –அந்த–இரத்தத்தின்மேல் לֹ֥א இல்லை תְנַחֲשׁ֖וּ குறிசொல்லக்கூடாது וְלֹ֥א –மற்றும்–இல்லை תְעוֹנֵֽנוּ׃ சகுனம்பார்க்கக்கூடாது
“யாதொன்றையும் இரத்தத்துடன் சாப்பிடவேண்டாம். குறிகேட்காமலும், நாள்பார்க்காமலும் இருப்பீர்களாக.
27 לֹ֣א இல்லை תַקִּ֔פוּ வெட்டக்கூடாது פְּאַ֖ת மூலையை רֹאשְׁכֶ֑ם உங்கள்–தலையின் וְלֹ֣א –மற்றும்–இல்லை תַשְׁחִ֔ית அழிக்கக்கூடாது אֵ֖ת –அதை– פְּאַ֥ת மூலையை זְקָנֶֽךָ׃ உன்–தாடியின்
உங்கள் தலைமுடியைச் சுற்றி ஒதுக்காமலும், தாடியின் ஓரங்களைக் கத்தரிக்காமலும்,
28 וְשֶׂ֣רֶט –மற்றும்–கீறல் לָנֶ֗פֶשׁ –க்கு–ஆத்துமாவுக்கு לֹ֤א இல்லை תִתְּנוּ֙ கொடுக்கக்கூடாது בִּבְשַׂרְכֶ֔ם –இல்–உங்கள்–மாம்சத்தில் וּכְתֹ֣בֶת –மற்றும்–எழுத்தை קַֽעֲקַ֔ע பச்சைக்குத்தின் לֹ֥א இல்லை תִתְּנ֖וּ கொடுக்கக்கூடாது בָּכֶ֑ם –இல்–உங்களில் אֲנִ֖י நான் יְהוָֽה׃ யெகோவா
செத்தவனுக்காக உங்கள் உடலைக் கீறிக்கொள்ளாமலும், அடையாளமான எழுத்துக்களை உங்கள்மேல் குத்திக்கொள்ளாமலும் இருப்பீர்களாக; நான் யெகோவா.
29 אַל־ –வேண்டாம்– תְּחַלֵּ֥ל தீட்டுப்படுத்தக்கூடாது אֶֽת־ –அதை– בִּתְּךָ֖ உன்–மகளை לְהַזְנוֹתָ֑הּ –க்கு–வேசித்தனம்செய்விக்க וְלֹא־ –மற்றும்–இல்லை– תִזְנֶ֣ה வேசித்தனம்செய்யக்கூடாது הָאָ֔רֶץ –அந்த–தேசம் וּמָלְאָ֥ה –மற்றும்–நிறைந்துபோகும் הָאָ֖רֶץ –அந்த–தேசம் זִמָּֽה׃ அக்கிரமம்
“தேசத்தார் வேசித்தனம்செய்து தேசமெங்கும் முறைகேடான பாவம் நிறையாதபடி உன் மகளை வேசித்தனம்செய்ய விடுகிறதினாலே பரிசுத்தக் குலைச்சலாக்காதே.
30 אֶת־ –அதை– שַׁבְּתֹתַ֣י என்–ஓய்வுநாட்களை תִּשְׁמֹ֔רוּ காப்புங்கள் וּמִקְדָּשִׁ֖י –மற்றும்–என்–பரிசுத்தஸ்தலத்தை תִּירָ֑אוּ பயப்படுங்கள் אֲנִ֖י நான் יְהוָֽה׃ யெகோவா
என் ஓய்வுநாட்களை அனுசரித்து, என் பரிசுத்த ஸ்தலத்தைக்குறித்துப் பயபக்தியாக இருப்பீர்களாக; நான் யெகோவா.
31 אַל־ –வேண்டாம்– תִּפְנ֤וּ திரும்புங்கள் אֶל־ –நோக்கி– הָאֹבֹת֙ –அந்த–மந்திரவாதிகளிடம் וְאֶל־ –மற்றும்–நோக்கி– הַיִּדְּעֹנִ֔ים –அந்த–குறிசொல்பவர்களிடம் אַל־ –வேண்டாம்– תְּבַקְשׁ֖וּ தேடுங்கள் לְטָמְאָ֣ה –க்கு–தீட்டுப்படுத்த בָהֶ֑ם –இல்–அவற்றால் אֲנִ֖י நான் יְהוָ֥ה யெகோவா אֱלֹהֵיכֶֽם׃ உங்கள்–தேவன்
“மாந்திரீகம் செய்கிறவர்களை நாடி, குறிசொல்லுகிறவர்களைத் தேடாதிருங்கள்; அவர்களாலே தீட்டுப்படவேண்டாம்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
32 מִפְּנֵ֤י –இலிருந்து–முன்பாக– שֵׂיבָה֙ நரைமுடியின் תָּק֔וּם எழுந்திருப்பாய் וְהָדַרְתָּ֖ –மற்றும்–மதிப்பாய் פְּנֵ֣י முகத்தை זָקֵ֑ן முதியவனின் וְיָרֵ֥אתָ –மற்றும்–பயப்படுவாய் מֵּאֱלֹהֶ֖יךָ –இலிருந்து–உன்–தேவனை אֲנִ֥י நான் יְהוָֽה׃ யெகோவா פ פ
“நரைத்தவனுக்கு முன்பாக எழுந்து, முதிர்வயதுள்ளவன் முகத்தைக் கனப்படுத்தி, உன் தேவனுக்குப் பயப்படுவாயாக; நான் யெகோவா.
33 וְכִֽי־ –மற்றும்–போது– יָג֧וּר தங்குவான் אִתְּךָ֛ –இல்–உன்னிடம் גֵּ֖ר அந்நியன் בְּאַרְצְכֶ֑ם –இல்–உங்கள்–தேசத்தில் לֹ֥א இல்லை תוֹנ֖וּ ஒடுக்கக்கூடாது אֹתֽוֹ׃ அவனை
“யாதொரு அந்நியன் உங்கள் தேசத்தில் உங்களோடே தங்கினால், அவனைச் சிறுமைப்படுத்தவேண்டாம்.
34 כְּאֶזְרָ֣ח –போல–சுயஜனத்தைப்போல מִכֶּם֩ –இலிருந்து–உங்களிலிருந்து יִהְיֶ֨ה இருப்பான் לָכֶ֜ם உங்களுக்கு הַגֵּ֣ר ׀ –அந்த–அந்நியன் הַגָּ֣ר –அந்த–தங்குகிற אִתְּכֶ֗ם –இல்–உங்களிடம் וְאָהַבְתָּ֥ –மற்றும்–அன்புகூர்வாய் לוֹ֙ –க்கு–அவனை כָּמ֔וֹךָ –போல–உன்னைப்போல כִּֽי־ ஏனெனில்– גֵרִ֥ים அந்நியர்களாக הֱיִיתֶ֖ם இருந்தீர்கள் בְּאֶ֣רֶץ –இல்–தேசத்தில் מִצְרָ֑יִם எகிப்தின் אֲנִ֖י நான் יְהוָ֥ה யெகோவா אֱלֹהֵיכֶֽם׃ உங்கள்–தேவன்
உங்களிடத்தில் குடியிருக்கிற அந்நியனை இஸ்ரவேலனைப்போல கருதி, நீங்கள் உங்களில் அன்புசெலுத்துவதுபோல அவனிலும் அன்புசெலுத்துவீர்களாக; நீங்களும் எகிப்துதேசத்தில் அந்நியர்களாக இருந்தீர்களே; நான் உங்கள் தேவனாகிய யெகோவா.
35 לֹא־ இல்லை– תַעֲשׂ֥וּ செய்யக்கூடாது עָ֖וֶל அநீதி בַּמִּשְׁפָּ֑ט –இல்–நியாயத்தீர்ப்பில் בַּמִּדָּ֕ה –இல்–அளவையில் בַּמִּשְׁקָ֖ל –இல்–நிறையில் וּבַמְּשׂוּרָֽה׃ –மற்றும்–இல்–படியில்
“நியாயவிசாரணையிலும், அளவிலும், நிறையிலும், படியிலும் அநியாயம் செய்யாதிருப்பீர்களாக.
36 מֹ֧אזְנֵי தராசுகள் צֶ֣דֶק நீதியின் אַבְנֵי־ கற்கள்– צֶ֗דֶק நீதியின் אֵ֥יפַת மரக்கால் צֶ֛דֶק நீதியின் וְהִ֥ין –மற்றும்–படி צֶ֖דֶק நீதியின் יִהְיֶ֣ה இருக்கும் לָכֶ֑ם உங்களுக்கு אֲנִי֙ நான் יְהוָ֣ה யெகோவா אֱלֹֽהֵיכֶ֔ם உங்கள்–தேவன் אֲשֶׁר־ –ஆகிய– הוֹצֵ֥אתִי கொண்டுவந்தேன் אֶתְכֶ֖ם உங்களை מֵאֶ֥רֶץ –இலிருந்து–தேசத்திலிருந்து מִצְרָֽיִם׃ எகிப்தின்
நியாயமான தராசும், நியாயமான நிறைகல்லும், நியாயமான மரக்காலும், நியாயமான படியும் உங்களுக்கு இருக்கவேண்டும்; நான் உங்களை எகிப்துதேசத்திலிருந்து புறப்படச்செய்த உங்கள் தேவனாகிய யெகோவா.
37 וּשְׁמַרְתֶּ֤ם –மற்றும்–காப்புங்கள் אֶת־ –அதை– כָּל־ எல்லா– חֻקֹּתַי֙ என்–கட்டளைகளை וְאֶת־ –மற்றும்–அதை– כָּל־ எல்லா– מִשְׁפָּטַ֔י என்–நியாயங்களை וַעֲשִׂיתֶ֖ם –மற்றும்–செய்யுங்கள் אֹתָ֑ם அவற்றை אֲנִ֖י நான் יְהוָֽה׃ யெகோவா פ פ
ஆகையால் என்னுடைய கட்டளைகள், நியாயங்கள் யாவையும் கைக்கொண்டு, அவைகளின்படி நடக்கக்கடவீர்கள்; நான் யெகோவா என்று சொல்” என்றார்.