1 וַיְדַבֵּ֥ר –மற்றும்–பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –நோக்கி– מֹשֶׁ֥ה மோசேயிடம் לֵּאמֹֽר׃ சொல்லி
பின்னும் யெகோவா மோசேயை நோக்கி:
2 צַ֞ו கட்டளையிடு אֶת־ – בְּנֵ֣י புத்திரர்களிடம் יִשְׂרָאֵ֗ל இஸ்ரவேலின் וְיִקְח֨וּ –மற்றும்–எடுப்பார்கள் אֵלֶ֜יךָ உன்னிடம் שֶׁ֣מֶן எண்ணெய் זַ֥יִת ஒலிவின் זָ֛ךְ தூய்மையான כָּתִ֖ית இடிக்கப்பட்ட לַמָּא֑וֹר விளக்கிற்காக לְהַעֲלֹ֥ת ஏற்ற נֵ֖ר விளக்கை תָּמִֽיד׃ நிரந்தரம்
“குத்துவிளக்கு எப்பொழுதும் எரிந்துகொண்டிருக்கும்படி அதற்காக இடித்துப்பிழிந்த தெளிவான ஒலிவ எண்ணெயை இஸ்ரவேல் மக்கள் உன்னிடத்தில் கொண்டுவரும்படி அவர்களுக்குக் கட்டளையிடு.
3 מִחוּץ֩ வெளியிலிருந்து לְפָרֹ֨כֶת திரைக்கின் הָעֵדֻ֜ת சாட்சியத்தின் בְּאֹ֣הֶל கூடாரத்தில் מוֹעֵ֗ד சந்திப்பின் יַעֲרֹךְ֩ அடுக்குவான் אֹת֨וֹ அதை אַהֲרֹ֜ן ஆரோன் מֵעֶ֧רֶב மாலையிலிருந்து עַד־ வரையிலும்– בֹּ֛קֶר காலை לִפְנֵ֥י முன்பாக יְהוָ֖ה யெகோவாவின் תָּמִ֑יד நிரந்தரம் חֻקַּ֥ת நியமம் עוֹלָ֖ם நித்தியமான לְדֹרֹֽתֵיכֶֽם׃ உங்கள்–தலைமுறைகளுக்கும்
ஆசரிப்புக்கூடாரத்தில் மகா பரிசுத்த ஸ்தலத்தின் திரைக்கு வெளிப்புறமாக ஆரோன் அதை எப்பொழுதும் மாலைதொடங்கி விடியற்காலம்வரை யெகோவாவுடைய சந்நிதியில் எரியும்படி ஏற்றுவானாக; இது உங்கள் தலைமுறைதோறும் கைக்கொள்ளவேண்டிய நிரந்தரமான கட்டளை.
4 עַ֚ל –மேல் הַמְּנֹרָ֣ה விளக்குத்தண்டின் הַטְּהֹרָ֔ה தூய்மையான יַעֲרֹ֖ךְ அடுக்குவான் אֶת־ – הַנֵּר֑וֹת விளக்குகளை לִפְנֵ֥י முன்பாக יְהוָ֖ה யெகோவாவின் תָּמִֽיד׃ நிரந்தரம் פ —
அவன் எப்பொழுதும் யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான குத்துவிளக்கின்மேல் இருக்கிற விளக்குகளை எரியவைக்கக்கடவன்.
5 וְלָקַחְתָּ֣ –மற்றும்–எடுப்பாய் סֹ֔לֶת மெல்லிய–மாவை וְאָפִיתָ֣ –மற்றும்–சுட்டுவாய் אֹתָ֔הּ அதை שְׁתֵּ֥ים பன்னிரண்டு עֶשְׂרֵ֖ה பத்து חַלּ֑וֹת அப்பங்கள் שְׁנֵי֙ இரண்டு עֶשְׂרֹנִ֔ים பத்தில்–ஒரு–பங்குகள் יִהְיֶ֖ה இருக்கும் הַֽחַלָּ֥ה அப்பம் הָאֶחָֽת׃ ஒன்று
“அன்றியும் நீ மெல்லிய மாவை எடுத்து, அதைப் பன்னிரண்டு அப்பங்களாகச் சுடுவாயாக; ஒவ்வொரு அப்பமும் மரக்காலிலே பத்தில் இரண்டுபங்கு மாவினால் செய்யப்படவேண்டும்.
6 וְשַׂמְתָּ֥ –மற்றும்–வைப்பாய் אוֹתָ֛ם அவற்றை שְׁתַּ֥יִם இரண்டு מַֽעֲרָכ֖וֹת அடுக்குகளாக שֵׁ֣שׁ ஆறு הַֽמַּעֲרָ֑כֶת அடுக்கின் עַ֛ל –மேல் הַשֻּׁלְחָ֥ן மேஜையின் הַטָּהֹ֖ר தூய்மையான לִפְנֵ֥י முன்பாக יְהוָֽה׃ யெகோவாவின்
அவைகளை நீ யெகோவாவுடைய சந்நிதியில் பரிசுத்தமான மேஜையின்மேல் இரண்டு அடுக்காக, ஒவ்வொரு அடுக்கிலும் ஆறு ஆறு அப்பங்கள் இருக்கும்படியாக வைத்து,
7 וְנָתַתָּ֥ –மற்றும்–வைப்பாய் עַל־ –மேல்– הַֽמַּעֲרֶ֖כֶת அடுக்கின் לְבֹנָ֣ה சாம்பிராணியை זַכָּ֑ה தூய்மையான וְהָיְתָ֤ה –மற்றும்–இருக்கும் לַלֶּ֙חֶם֙ அப்பத்திற்கு לְאַזְכָּרָ֔ה நினைவு–காணிக்கையாக אִשֶּׁ֖ה தீயால்–செய்யும்–காணிக்கை לַֽיהוָֽה׃ யெகோவாவுக்கு
ஒவ்வொரு அடுக்கிலும் சுத்தமான தூபவர்க்கம் போடக்கடவாய்; அது அப்பத்துடன் இருந்து, நன்றியின் அடையாளமாகக் யெகோவாவுக்கேற்ற தகனபலியாக இருக்கும்.
8 בְּי֨וֹם நாளில் הַשַּׁבָּ֜ת ஓய்வுநாளின் בְּי֣וֹם நாளில் הַשַּׁבָּ֗ת ஓய்வுநாளின் יַֽעַרְכֶ֛נּוּ அடுக்குவான்–அதை לִפְנֵ֥י முன்பாக יְהוָ֖ה யெகோவாவின் תָּמִ֑יד நிரந்தரம் מֵאֵ֥ת இலிருந்து בְּנֵֽי־ புத்திரர்களின்– יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் בְּרִ֥ית உடன்படிக்கையாக עוֹלָֽם׃ நித்தியமான
அப்பத்தை நிரந்தரமான உடன்படிக்கையாக இஸ்ரவேல் மக்கள் கையிலே வாங்கி, ஓய்வுநாள் தோறும் யெகோவாவுடைய சந்நிதியில் அடுக்கிவைப்பானாக.
9 וְהָֽיְתָה֙ –மற்றும்–இருக்கும் לְאַהֲרֹ֣ן ஆரோனுக்கும் וּלְבָנָ֔יו –மற்றும்–தன்–குமாரர்களுக்கும் וַאֲכָלֻ֖הוּ –மற்றும்–புசிப்பார்கள்–அதை בְּמָק֣וֹם இடத்தில் קָדֹ֑שׁ பரிசுத்தமான כִּ֡י ஏனெனில் קֹדֶשׁ֩ பரிசுத்தம் קָֽדָשִׁ֨ים மகா–பரிசுத்தமான ה֥וּא அது ל֛וֹ அவனுக்கு מֵאִשֵּׁ֥י தீயால்–செய்யும்–காணிக்கைகளிலிருந்து יְהוָ֖ה யெகோவாவின் חָק־ சட்டம்– עוֹלָֽם׃ நித்தியமான ס —
அது ஆரோனையும் அவனுடைய மகன்களையும் சேரும்; அதைப் பரிசுத்த இடத்திலே சாப்பிடுவார்களாக; நிரந்தரமான கட்டளையாக யெகோவாவுக்குச் செலுத்தப்படும் தகனபலிகளில் அது அவனுக்கு மகா பரிசுத்தமாக இருக்கும்” என்றார்.
10 וַיֵּצֵא֙ –மற்றும்–புறப்பட்டான் בֶּן־ மகன்– אִשָּׁ֣ה பெண்ணின் יִשְׂרְאֵלִ֔ית இஸ்ரவேலியான וְהוּא֙ –மற்றும்–அவன் בֶּן־ மகன்– אִ֣ישׁ மனிதனின் מִצְרִ֔י எகிப்தியனின் בְּת֖וֹךְ நடுவில் בְּנֵ֣י புத்திரர்களின் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் וַיִּנָּצוּ֙ –மற்றும்–சண்டையிட்டார்கள் בַּֽמַּחֲנֶ֔ה பாளையத்தில் בֶּ֚ן மகன் הַיִּשְׂרְאֵלִ֔ית இஸ்ரவேலியப்–பெண்ணின் וְאִ֖ישׁ –மற்றும்–மனிதன் הַיִּשְׂרְאֵלִֽי׃ இஸ்ரவேலியனின்
அக்காலத்திலே இஸ்ரவேலைச் சார்ந்த பெண்ணுக்கும் எகிப்திய ஆணுக்கும் பிறந்த மகனாகிய ஒருவன் இஸ்ரவேல் மக்களோடு புறப்பட்டு வந்திருந்தான்; இவனும் இஸ்ரவேலனாகிய ஒரு மனிதனும் முகாமிலே சண்டையிட்டார்கள்.
11 וַ֠יִּקֹּב –மற்றும்–துளைத்தான் בֶּן־ மகன்– הָֽאִשָּׁ֨ה பெண்ணின் הַיִּשְׂרְאֵלִ֤ית இஸ்ரவேலியப் אֶת־ – הַשֵּׁם֙ நாமத்தை וַיְקַלֵּ֔ל –மற்றும்–சபித்தான் וַיָּבִ֥יאוּ –மற்றும்–கொண்டுவந்தார்கள் אֹת֖וֹ அவனை אֶל־ –நோக்கி– מֹשֶׁ֑ה மோசேயிடம் וְשֵׁ֥ם –மற்றும்–பெயர் אִמּ֛וֹ தன்–தாயின் שְׁלֹמִ֥ית செலோமித் בַּת־ மகள்– דִּבְרִ֖י திப்ரியின் לְמַטֵּה־ கோத்திரத்திற்கு– דָֽן׃ தானின்
அப்பொழுது இஸ்ரவேலைச் சார்ந்த அந்தப் பெண்ணின் மகன் யெகோவாவின் நாமத்தை நிந்தித்துத் தூஷித்தான். அவனை மோசேயினிடத்தில் கொண்டுவந்தார்கள். அவனுடைய தாயின் பெயர் செலோமித்; அவள் தாண் கோத்திரத்தானாகிய திப்ரியின் மகள்.
12 וַיַּנִּיחֻ֖הוּ –மற்றும்–வைத்தார்கள்–அவனை בַּמִּשְׁמָ֑ר காவலில் לִפְרֹ֥שׁ விளக்கமாக לָהֶ֖ם அவர்களுக்கு עַל־ –மேல்– פִּ֥י வாயின் יְהוָֽה׃ யெகோவாவின் פ —
யெகோவாவின் வாக்கினாலே தங்களுக்கு உத்திரவு வரும்வரை, அவனைக் காவலில்வைத்தார்கள்.
13 וַיְדַבֵּ֥ר –மற்றும்–பேசினார் יְהוָ֖ה யெகோவா אֶל־ –நோக்கி– מֹשֶׁ֥ה மோசேயிடம் לֵּאמֹֽר׃ சொல்லி
அப்பொழுது யெகோவா மோசேயை நோக்கி:
14 הוֹצֵ֣א புறப்படச்செய் אֶת־ – הַֽמְקַלֵּ֗ל சபிக்கிறவனை אֶל־ –நோக்கி– מִחוּץ֙ வெளியே לַֽמַּחֲנֶ֔ה பாளையத்திற்கு וְסָמְכ֧וּ –மற்றும்–சாய்ப்பார்கள் כָֽל־ எல்லா– הַשֹּׁמְעִ֛ים கேட்டவர்கள் אֶת־ – יְדֵיהֶ֖ם தங்கள்–கைகளை עַל־ –மேல்– רֹאשׁ֑וֹ தன்–தலையின் וְרָגְמ֥וּ –மற்றும்–கல்லெறிவார்கள் אֹת֖וֹ அவனை כָּל־ எல்லா– הָעֵדָֽה׃ சபையார்
“தூஷித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோ; கேட்டவர்கள் எல்லோரும் தங்கள் கைகளை அவனுடைய தலையின்மேல் வைப்பார்களாக; பின்பு சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறிவார்களாக.
15 וְאֶל־ –மற்றும்–நோக்கி– בְּנֵ֥י புத்திரர்களிடம் יִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலின் תְּדַבֵּ֣ר பேசுவாய் לֵאמֹ֑ר சொல்லி אִ֥ישׁ ஒரு–மனிதன் אִ֛ישׁ ஒரு–மனிதன் כִּֽי־ ஏனெனில்– יְקַלֵּ֥ל சபிப்பான் אֱלֹהָ֖יו தன்–தேவனை וְנָשָׂ֥א –மற்றும்–சுமப்பான் חֶטְאֽוֹ׃ தன்–பாவத்தை
மேலும் நீ இஸ்ரவேல் மக்களை நோக்கி: எவனாகிலும் தன் தேவனைத் தூஷித்தால், அவன் தன் பாவத்தைச் சுமப்பான்.
16 וְנֹקֵ֤ב –மற்றும்–துளைக்கிறவன் שֵׁם־ நாமத்தை– יְהוָה֙ யெகோவாவின் מ֣וֹת சாவு יוּמָ֔ת சாவான் רָג֥וֹם கல்லெறியும் יִרְגְּמוּ־ கல்லெறிவார்கள்– ב֖וֹ அவனை כָּל־ எல்லா– הָעֵדָ֑ה சபையார் כַּגֵּר֙ அந்நியனைப்–போல் כָּֽאֶזְרָ֔ח சுதேசியைப்–போல் בְּנָקְבוֹ־ தன்–துளைக்கையில்– שֵׁ֖ם நாமத்தை יוּמָֽת׃ சாவான்
யெகோவாவுடைய நாமத்தை நிந்திக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்; சபையார் எல்லோரும் அவனைக் கல்லெறியவேண்டும்; அந்நியனானாலும் இஸ்ரவேலனானாலும் யெகோவாவின் நாமத்தைத் தூஷிக்கிறவன் கொலைசெய்யப்படவேண்டும்.
17 וְאִ֕ישׁ –மற்றும்–ஒரு–மனிதன் כִּ֥י ஏனெனில் יַכֶּ֖ה அடிப்பான் כָּל־ எல்லா– נֶ֣פֶשׁ ஆத்துமாவை אָדָ֑ם ஆதாமின் מ֖וֹת சாவு יוּמָֽת׃ சாவான்
“ஒரு மனிதனைக் கொல்லுகிறவன் எவனோ அவன் கொலைசெய்யப்படவேண்டும்.
18 וּמַכֵּ֥ה –மற்றும்–அடிக்கிறவன் נֶֽפֶשׁ־ ஆத்துமாவை– בְּהֵמָ֖ה மிருகத்தின் יְשַׁלְּמֶ֑נָּה ஈடு–செய்வான்–அதை נֶ֖פֶשׁ ஆத்துமா תַּ֥חַת கீழ் נָֽפֶשׁ׃ ஆத்துமா
மிருகத்தைக் கொன்றவன் மிருகத்திற்கு மிருகம் கொடுக்கக்கடவன்.
19 וְאִ֕ישׁ –மற்றும்–ஒரு–மனிதன் כִּֽי־ ஏனெனில்– יִתֵּ֥ן கொடுப்பான் מ֖וּם ஊனத்தை בַּעֲמִית֑וֹ தன்–அயலானிடம் כַּאֲשֶׁ֣ר எப்படி עָשָׂ֔ה செய்தானோ כֵּ֖ן அவ்வாறே יֵעָ֥שֶׂה செய்யப்படும் לּֽוֹ׃ அவனுக்கு
“ஒருவன் மற்றவனை ஊனப்படுத்தினால், அவன் செய்தபடியே அவனுக்கும் செய்யப்படக்கடவது.
20 שֶׁ֚בֶר முறிவு תַּ֣חַת கீழ் שֶׁ֔בֶר முறிவு עַ֚יִן கண் תַּ֣חַת கீழ் עַ֔יִן கண் שֵׁ֖ן பல் תַּ֣חַת கீழ் שֵׁ֑ן பல் כַּאֲשֶׁ֨ר எப்படி יִתֵּ֥ן கொடுப்பான் מוּם֙ ஊனத்தை בָּֽאָדָ֔ם ஆதாமில் כֵּ֖ן அவ்வாறே יִנָּ֥תֶן கொடுக்கப்படும் בּֽוֹ׃ அவனில்
நொறுக்குதலுக்கு நொறுக்குதல், கண்ணுக்குக் கண், பல்லுக்குப் பல்; அவன் ஒரு மனிதனை ஊனப்படுத்தினதுபோல அவனும் ஊனப்படுத்தப்படவேண்டும்.
21 וּמַכֵּ֥ה –மற்றும்–அடிக்கிறவன் בְהֵמָ֖ה மிருகத்தை יְשַׁלְּמֶ֑נָּה ஈடு–செய்வான்–அதை וּמַכֵּ֥ה –மற்றும்–அடிக்கிறவன் אָדָ֖ם ஆதாமை יוּמָֽת׃ சாவான்
மிருகத்தைக் கொன்றவன் அதற்கு பதிலாக வேறு மிருகம் கொடுக்கவேண்டும்; மனிதனைக் கொன்றவனோ கொலைசெய்யப்படக்கடவன்.
22 מִשְׁפַּ֤ט நீதி אֶחָד֙ ஒன்று יִהְיֶ֣ה இருக்கும் לָכֶ֔ם உங்களுக்கு כַּגֵּ֥ר அந்நியனைப்–போல் כָּאֶזְרָ֖ח சுதேசியைப்–போல் יִהְיֶ֑ה இருக்கும் כִּ֛י ஏனெனில் אֲנִ֥י நான் יְהוָ֖ה யெகோவா אֱלֹהֵיכֶֽם׃ உங்கள்–தேவன்
உங்களில் அந்நியனுக்கும் இஸ்ரவேலர்களுக்கும் ஒரே நியாயம் இருக்கவேண்டும்; நான் உங்கள் தேவனாகிய யெகோவா என்று சொல்” என்றார்.
23 וַיְדַבֵּ֣ר –மற்றும்–பேசினார் מֹשֶׁה֮ மோசே אֶל־ –நோக்கி– בְּנֵ֣י புத்திரர்களிடம் יִשְׂרָאֵל֒ இஸ்ரவேலின் וַיּוֹצִ֣יאוּ –மற்றும்–புறப்படச்செய்தார்கள் אֶת־ – הַֽמְקַלֵּ֗ל சபிக்கிறவனை אֶל־ –நோக்கி– מִחוּץ֙ வெளியே לַֽמַּחֲנֶ֔ה பாளையத்திற்கு וַיִּרְגְּמ֥וּ –மற்றும்–கல்லெறிந்தார்கள் אֹת֖וֹ அவனை אָ֑בֶן கல்லால் וּבְנֵֽי־ –மற்றும்–புத்திரர்கள்– יִשְׂרָאֵ֣ל இஸ்ரவேலின் עָשׂ֔וּ செய்தார்கள் כַּֽאֲשֶׁ֛ר எப்படி צִוָּ֥ה கட்டளையிட்டாரோ יְהוָ֖ה யெகோவா אֶת־ – מֹשֶֽׁה׃ மோசேயிடம் פ —
அப்படியே, நிந்தித்தவனை முகாமிற்கு வெளியே கொண்டுபோய், அவனைக் கல்லெறியும்படி மோசே இஸ்ரவேல் மக்களிடம் சொன்னான்; யெகோவா மோசேக்குக் கட்டளையிட்டபடியே செய்தார்கள்.