1 וּכְהִתְפַּלֵּ֤ל –மற்றும்–ஜெபித்தபோது עֶזְרָא֙ எஸ்ரா וּכְ֨הִתְוַדֹּת֔וֹ –மற்றும்–அறிக்கையிட்டபோது בֹּכֶה֙ அழுதுகொண்டு וּמִתְנַפֵּ֔ל –மற்றும்–விழுந்து לִפְנֵ֖י –முன்பாக בֵּ֣ית வீட்டின் הָאֱלֹהִ֑ים –தேவனுடைய נִקְבְּצוּ֩ கூடிவந்தனர் אֵלָ֨יו அவனிடம் מִיִּשְׂרָאֵ֜ל இஸ்ரவேலிலிருந்து קָהָ֣ל சபை רַב־ மிகுதியான– מְאֹ֗ד மிகவும் אֲנָשִׁ֤ים புருஷர்களும் וְנָשִׁים֙ –மற்றும்–ஸ்திரீகளும் וִֽילָדִ֔ים –மற்றும்–பிள்ளைகளும் כִּֽי־ ஏனெனில்– בָכ֥וּ அழுதது הָעָ֖ם –ஜனங்கள் הַרְבֵּה־ மிகுதியாக– בֶֽכֶה׃ அழுகை ס ס
எஸ்றா இப்படி விண்ணப்பம்செய்து, அறிக்கையிட்டு அழுது, தேவனுடைய ஆலயத்திற்கு முன்பாகத் தாழவிழுந்துகிடக்கும்போது, இஸ்ரவேலில் ஆண்களும் பெண்களும் பிள்ளைகளுமான மகா பெரிய சபை அவனிடத்தில் வந்து கூடினது; மக்கள் மிகவும் அழுதார்கள்.
2 וַיַּעַן֩ –அப்பொழுது–பதிலளித்தான் שְׁכַנְיָ֨ה செக்கனியா בֶן־ மகன்– יְחִיאֵ֜ל யெகீயேல் מִבְּנֵ֤י புத்திரருடைய–இருந்து [עולם] [ஏலாம்] (עֵילָם֙) (ஏலாம்) וַיֹּ֣אמֶר –மற்றும்–சொன்னான் לְעֶזְרָ֔א எஸ்ராவிடம் אֲנַ֙חְנוּ֙ நாங்கள் מָעַ֣לְנוּ துரோகம்செய்தோம் בֵאלֹהֵ֔ינוּ –நமது–தேவனுக்குவிரோதமாக וַנֹּ֛שֶׁב –மற்றும்–சேர்த்துக்கொண்டோம் נָשִׁ֥ים ஸ்திரீகளை נָכְרִיּ֖וֹת அந்நிய מֵעַמֵּ֣י ஜனங்களிலிருந்து– הָאָ֑רֶץ –தேசத்தின் וְעַתָּ֛ה –மற்றும்–இப்பொழுது יֵשׁ־ இருக்கிறது– מִקְוֶ֥ה நம்பிக்கை לְיִשְׂרָאֵ֖ל இஸ்ரவேலுக்கு עַל־ –குறித்து– זֹֽאת׃ இதை
அப்பொழுது ஏலாமின் மகன்களில் ஒருவனாகிய யெகியேலின் மகன் செக்கனியா எஸ்றாவை நோக்கி: நாங்கள் தேசத்து மக்களிலுள்ள அந்நியப் பெண்களைச் சேர்த்துக்கொண்டதால், எங்கள் தேவனுக்கு விரோதமாகப் பாவம்செய்தோம்; ஆகிலும் இப்பொழுது இந்தக் காரியத்திலே இன்னும் இஸ்ரவேலுக்காக நம்பிக்கை உண்டு.
3 וְעַתָּ֣ה –மற்றும்–இப்பொழுது נִֽכְרָת־ செய்வோம்– בְּרִ֣ית உடன்படிக்கை לֵ֠אלֹהֵינוּ –நமது–தேவனோடு לְהוֹצִ֨יא வெளியேற்ற כָל־ எல்லா– נָשִׁ֜ים ஸ்திரீகளையும் וְהַנּוֹלָ֤ד –மற்றும்–பிறந்தவர்களையும் מֵהֶם֙ அவர்களிடமிருந்து בַּעֲצַ֣ת –ஆலோசனையின்படி אֲדֹנָ֔י –என்–ஆண்டவரின் וְהַחֲרֵדִ֖ים –மற்றும்–நடுங்குகிறவர்களின் בְּמִצְוַ֣ת –கட்டளையில் אֱלֹהֵ֑ינוּ –நமது–தேவனுடைய וְכַתּוֹרָ֖ה –மற்றும்–நியாயப்பிரமாணத்தின்படி יֵעָשֶֽׂה׃ செய்யப்படக்கடவது
இப்பொழுதும் அந்தப் பெண்கள் எல்லோரையும், அவர்களிடத்தில் பிறந்தவர்களையும், என் ஆண்டவனுடைய ஆலோசனைக்கும், நமது தேவனுடைய கற்பனைக்கு நடுங்குகிறவர்களின் ஆலோசனைக்கும் ஏற்றபிரகாரம் அகற்றிப்போடுவோம் என்று நம்முடைய தேவனுடன் உடன்படிக்கை செய்வோமாக; நியாயப்பிரமாணத்தின்படியே செய்யப்படுவதாக.
4 ק֛וּם எழுந்திரு כִּֽי־ ஏனெனில்– עָלֶ֥יךָ உன்மேல் הַדָּבָ֖ר –காரியம் וַאֲנַ֣חְנוּ –மற்றும்–நாங்கள் עִמָּ֑ךְ உன்னோடு חֲזַ֖ק திடமாயிரு וַעֲשֵֽׂה׃ –மற்றும்–செய் פ פ
எழுந்திரும்; இந்தக் காரியத்தை நடப்பிக்கிறது உமக்குரியது; நாங்களும் உம்மோடு இருப்போம்; நீர் திடன்கொண்டு இதைச் செய்யும் என்றான்.
5 וַיָּ֣קָם –அப்பொழுது–எழுந்தான் עֶזְרָ֡א எஸ்ரா וַיַּשְׁבַּ֣ע –மற்றும்–ஆணையிடச்செய்தான் אֶת־ –ஐ– שָׂרֵי֩ தலைவர்களை הַכֹּהֲנִ֨ים –ஆசாரியர்களின் הַלְוִיִּ֜ם –லேவியர்களின் וְכָל־ –மற்றும்–எல்லா– יִשְׂרָאֵ֗ל இஸ்ரவேலின் לַעֲשׂ֛וֹת செய்ய כַּדָּבָ֥ר –காரியத்தின்படி הַזֶּ֖ה –இந்த וַיִּשָּׁבֵֽעוּ׃ –மற்றும்–ஆணையிட்டார்கள்
அப்பொழுது எஸ்றா எழுந்திருந்து, ஆசாரியர்களிலும் லேவியர்களிலும் முக்கியமானவர்களும் இஸ்ரவேல் அனைவரும் இந்த வார்த்தையின்படி செய்ய, அவர்களை ஆணையிடச் சொன்னான்; அவர்கள் ஆணையிட்டார்கள்.
6 וַיָּ֣קָם –அப்பொழுது–எழுந்தான் עֶזְרָ֗א எஸ்ரா מִלִּפְנֵי֙ முன்னிலையிலிருந்து בֵּ֣ית வீட்டின் הָֽאֱלֹהִ֔ים –தேவனுடைய וַיֵּ֕לֶךְ –மற்றும்–போனான் אֶל־ –இடத்திற்கு– לִשְׁכַּ֖ת அறையில் יְהוֹחָנָ֣ן யோகனான் בֶּן־ மகன்– אֶלְיָשִׁ֑יב எலியாசிப் וַיֵּ֣לֶךְ –மற்றும்–போனான் שָׁ֗ם அங்கே לֶ֤חֶם அப்பம் לֹֽא־ இல்லை– אָכַל֙ புசித்தான் וּמַ֣יִם –மற்றும்–தண்ணீர் לֹֽא־ இல்லை– שָׁתָ֔ה குடித்தான் כִּ֥י ஏனெனில் מִתְאַבֵּ֖ל துக்கித்துக்கொண்டிருந்தான் עַל־ –குறித்து– מַ֥עַל துரோகத்தை הַגּוֹלָֽה׃ –சிறையிருப்பின் ס ס
அதன்பின்பு எஸ்றா தேவனுடைய ஆலயத்திற்கு முன்னிருந்து எழுந்து, எலியாசிபின் மகனாகிய யோகனானின் அறைக்குள் சென்றான்; அங்கே வந்தபோது, அவன் சிறையிருப்பிலிருந்து வந்தவர்களுடைய குற்றத்தினால் அப்பம் சாப்பிடாமலும் தண்ணீர் குடிக்காமலும் துக்கப்பட்டுக்கொண்டிருந்தான்.
7 וַיַּעֲבִ֨ירוּ –மற்றும்–அறிவித்தார்கள் ק֜וֹל அறிவிப்பை בִּיהוּדָ֣ה யூதாவிலும் וִירֽוּשָׁלִַ֗ם –மற்றும்–எருசலேமிலும் לְכֹל֙ எல்லா בְּנֵ֣י புத்திரருக்கு הַגּוֹלָ֔ה –சிறையிருப்பின் לְהִקָּבֵ֖ץ கூடிவர יְרוּשָׁלִָֽם׃ எருசலேமில்
அப்பொழுது சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் எல்லோரும் எருசலேமிலே வந்து கூடவேண்டும் என்றும்,
8 וְכֹל֩ –மற்றும்–எல்லாரும் אֲשֶׁ֨ר யார் לֹֽא־ இல்லை– יָב֜וֹא வருவான் לִשְׁלֹ֣שֶׁת மூன்று הַיָּמִ֗ים –நாட்களுக்குள் כַּעֲצַ֤ת –ஆலோசனையின்படி הַשָּׂרִים֙ –தலைவர்களின் וְהַזְּקֵנִ֔ים –மற்றும்–மூப்பர்களின் יָחֳרַ֖ם பறிமுதலாகும் כָּל־ எல்லா– רְכוּשׁ֑וֹ சொத்தும் וְה֥וּא –மற்றும்–அவன் יִבָּדֵ֖ל பிரிக்கப்படுவான் מִקְּהַ֥ל சபையிலிருந்து הַגּוֹלָֽה׃ –சிறையிருப்பின் ס ס
மூன்று நாட்களுக்குள்ளே பிரபுக்கள் மூப்பர்களுடைய ஆலோசனையின்படியே எவனாகிலும் வராமல்போனால், அவனுடைய பொருட்களெல்லாம் பறிமுதல் செய்யப்பட்டு, சிறையிருப்பிலிருந்து வந்த சபையிலிருந்து அவன் விலக்கப்படுவான் என்றும், யூதாவிலும் எருசலேமிலும் விளம்பரம் செய்தார்கள்.
9 וַיִּקָּבְצ֣וּ –அப்பொழுது–கூடினார்கள் כָל־ எல்லா– אַנְשֵֽׁי־ மனிதர்– יְהוּדָה֩ யூதாவின் וּבִנְיָמִ֨ן ׀ –மற்றும்–பென்யமீனின் יְרוּשָׁלִַ֜ם எருசலேமில் לִשְׁלֹ֣שֶׁת மூன்று הַיָּמִ֗ים –நாட்களுக்குள் ה֛וּא அது חֹ֥דֶשׁ மாதம் הַתְּשִׁיעִ֖י –ஒன்பதாவது בְּעֶשְׂרִ֣ים இருபதாம்நாளில் בַּחֹ֑דֶשׁ –மாதத்தின் וַיֵּשְׁב֣וּ –மற்றும்–உட்கார்ந்தனர் כָל־ எல்லா– הָעָ֗ם –ஜனங்கள் בִּרְחוֹב֙ வெளியரங்கத்தில் בֵּ֣ית வீட்டின் הָאֱלֹהִ֔ים –தேவனுடைய מַרְעִידִ֥ים நடுங்கிக்கொண்டு עַל־ –குறித்து– הַדָּבָ֖ר –காரியத்தை וּמֵהַגְּשָׁמִֽים׃ –மற்றும்–மழையினிமித்தம் פ פ
அப்படியே யூதா பென்யமீன் கோத்திரத்தார் எல்லோரும் மூன்று நாட்களுக்குள்ளே எருசலேமிலே கூடினார்கள்; அது ஒன்பதாம் மாதம் இருபதாம் தேதியாயிருந்தது; மக்கள் எல்லோரும் தேவனுடைய ஆலயத்தின் வீதியிலே அந்தக் காரியத்தினாலும் அடைமழையினாலும் நடுங்கிக்கொண்டிருந்தார்கள்.
10 וַיָּ֨קָם –அப்பொழுது–எழுந்தான் עֶזְרָ֤א எஸ்ரா הַכֹּהֵן֙ –ஆசாரியன் וַיֹּ֣אמֶר –மற்றும்–சொன்னான் אֲלֵהֶ֔ם அவர்களிடம் אַתֶּ֣ם நீங்கள் מְעַלְתֶּ֔ם துரோகம்செய்தீர்கள் וַתֹּשִׁ֖יבוּ –மற்றும்–சேர்த்துக்கொண்டீர்கள் נָשִׁ֣ים ஸ்திரீகளை נָכְרִיּ֑וֹת அந்நிய לְהוֹסִ֖יף கூட்டுவதற்கு עַל־ –மேல்– אַשְׁמַ֥ת குற்றத்தை יִשְׂרָאֵֽל׃ இஸ்ரவேலின்
அப்பொழுது ஆசாரியனாகிய எஸ்றா எழுந்திருந்து அவர்களை நோக்கி: நீங்கள் இஸ்ரவேலின்மேல் இருக்கிற குற்றத்தை அதிகரிக்கச்செய்ய, வேறு இனப் பெண்களைத் திருமணம்செய்ததால் பாவம் செய்தீர்கள்.
11 וְעַתָּ֗ה –மற்றும்–இப்பொழுது תְּנ֥וּ கொடுங்கள் תוֹדָ֛ה அறிக்கையை לַיהוָ֥ה –யெகோவாவுக்கு אֱלֹהֵֽי־ தேவனுக்கு– אֲבֹתֵיכֶ֖ם –உங்கள்–பிதாக்களின் וַעֲשׂ֣וּ –மற்றும்–செய்யுங்கள் רְצוֹנ֑וֹ அவருடைய–சித்தத்தை וְהִבָּֽדְלוּ֙ –மற்றும்–பிரிந்துகொள்ளுங்கள் מֵעַמֵּ֣י ஜனங்களிலிருந்து הָאָ֔רֶץ –தேசத்தின் וּמִן־ –மற்றும்–இருந்து– הַנָּשִׁ֖ים –ஸ்திரீகளிலிருந்து הַנָּכְרִיּֽוֹת׃ –அந்நிய
இப்பொழுதும் நீங்கள் உங்கள் முன்னோர்களின் தேவனாகிய கர்த்தரிடத்தில் அறிக்கையிட்டு, அவருடைய பிரியத்தின்படியே செய்து, தேசத்தின் மக்களையும், வேறு இனப் பெண்களையும் விட்டுவிலகுங்கள் என்றான்.
12 וַיַּֽעְנ֧וּ –அப்பொழுது–பதிலளித்தது כָֽל־ எல்லா– הַקָּהָ֛ל –சபை וַיֹּאמְר֖וּ –மற்றும்–சொன்னார்கள் ק֣וֹל சத்தமாக גָּד֑וֹל பெரிய כֵּ֛ן ஆம் [כדבריך] [உன்–வார்த்தையின்படி] (כִּדְבָרְךָ֥) (உன்–வார்த்தையின்படி) עָלֵ֖ינוּ எங்கள்மேல் לַעֲשֽׂוֹת׃ செய்ய
அப்பொழுது சபையார் அனைவரும் மகா சத்தத்தோடே மறுமொழியாக: ஆம், நீர் சொன்ன வார்த்தைகளின்படியே செய்யவேண்டியதுதான்.
13 אֲבָ֞ל ஆனால் הָעָ֥ם –ஜனங்கள் רָב֙ அதிகம் וְהָעֵ֣ת –மற்றும்–காலம் גְּשָׁמִ֔ים பெருமழையின் וְאֵ֥ין –மற்றும்–இல்லை כֹּ֖חַ பலம் לַעֲמ֣וֹד நிற்க בַּח֑וּץ வெளியில் וְהַמְּלָאכָ֗ה –மற்றும்–வேலை לֹֽא־ இல்லை– לְי֤וֹם ஒரு–நாளுக்கு אֶחָד֙ ஒன்றுக்கு וְלֹ֣א –மற்றும்–இல்லை לִשְׁנַ֔יִם இரண்டுக்கு כִּֽי־ ஏனெனில்– הִרְבִּ֥ינוּ பெருக்கினோம் לִפְשֹׁ֖עַ மீறுவதை בַּדָּבָ֥ר –காரியத்தில் הַזֶּֽה׃ –இந்த
ஆனாலும் மக்கள் திரளாயிருக்கிறார்கள், இது மழைக்காலமுமாக இருக்கிறது, இங்கே வெளியிலே நிற்க எங்களாலே முடியாது; இது ஒருநாள் இரண்டுநாள் வேலையல்ல; இந்தக் காரியத்திலே கட்டளையை மீறினவர்களாகிய நாங்கள் அநேகர்.
14 יַֽעֲמְדוּ־ நிற்கட்டும்– נָ֣א தயவுசெய்து שָׂ֠רֵינוּ –நம்முடைய–தலைவர்கள் לְֽכָל־ –எல்லா– הַקָּהָ֞ל –சபைக்காக וְכֹ֣ל ׀ –மற்றும்–எல்லாரும் אֲשֶׁ֣ר யார் בֶּעָרֵ֗ינוּ –நமது–பட்டணங்களில் הַהֹשִׁ֞יב சேர்த்துக்கொண்டவர்கள் נָשִׁ֤ים ஸ்திரீகளை נָכְרִיּוֹת֙ அந்நிய יָבֹא֙ வரட்டும் לְעִתִּ֣ים குறிப்பிட்ட–காலங்களில் מְזֻמָּנִ֔ים நியமிக்கப்பட்ட וְעִמָּהֶ֛ם –மற்றும்–அவர்களோடு זִקְנֵי־ மூப்பர்– עִ֥יר பட்டணத்தின் וָעִ֖יר –மற்றும்–பட்டணத்தின் וְשֹׁפְטֶ֑יהָ –மற்றும்–நியாயாதிபதிகள் עַ֠ד வரை לְהָשִׁ֞יב திருப்ப חֲר֤וֹן கோபத்தின் אַף־ கடுமையான– אֱלֹהֵ֙ינוּ֙ –நமது–தேவனுடைய מִמֶּ֔נּוּ நம்மிலிருந்து עַ֖ד வரை לַדָּבָ֥ר –காரியத்தில் הַזֶּֽה׃ –இந்த פ פ
ஆகையால் இதற்கு சபையெங்கும் எங்கள் பிரபுக்கள் விசாரிப்புக்காரர்களாக ஏற்படுத்தப்படவேண்டும்; இந்தக் காரியத்தினால் நம்முடைய தேவனுக்கு இருக்கிற கடுங்கோபம் எங்களைவிட்டுத் திரும்பும்படி, எங்கள் பட்டணங்களில் வேறு இனமான பெண்களைக்கொண்ட அனைவரும் ஒவ்வொரு பட்டணத்தின் மூப்பரோடும் நியாயாதிபதிகளோடும் குறித்தகாலங்களில் வரவேண்டும் என்றார்கள்.
15 אַ֣ךְ ஆயினும் יוֹנָתָ֧ן யோனத்தான் בֶּן־ மகன்– עֲשָׂהאֵ֛ל அசாவேல் וְיַחְזְיָ֥ה –மற்றும்–யக்சியா בֶן־ மகன்– תִּקְוָ֖ה திக்வா עָמְד֣וּ எதிர்த்துநின்றார்கள் עַל־ –குறித்து– זֹ֑את இதை וּמְשֻׁלָּ֛ם –மற்றும்–மெசுல்லாம் וְשַׁבְּתַ֥י –மற்றும்–சப்பதாய் הַלֵּוִ֖י –லேவியன் עֲזָרֻֽם׃ உதவினார்கள்
ஆசகேலின் மகன் யோனத்தானும், திக்காவின் மகன் யக்சியாவும் மாத்திரம் அதை விசாரிப்பதற்காக ஏற்படுத்தப்பட்டார்கள்; மெசுல்லாமும், சப்பேதாயி என்னும் லேவியனும் அவர்களுக்கு உதவியாயிருந்தார்கள்.
16 וַיַּֽעֲשׂוּ־ –மற்றும்–செய்தார்கள்– כֵן֮ அவ்வாறு בְּנֵ֣י புத்திரர் הַגּוֹלָה֒ –சிறையிருப்பின் וַיִּבָּדְלוּ֩ –மற்றும்–பிரிக்கப்பட்டனர் עֶזְרָ֨א எஸ்ரா הַכֹּהֵ֜ן –ஆசாரியன் אֲנָשִׁ֨ים புருஷர்களை רָאשֵׁ֧י தலைவர்களை הָאָב֛וֹת –பிதாக்களின் לְבֵ֥ית வீட்டிற்கு אֲבֹתָ֖ם –அவர்களுடைய–பிதாக்களின் וְכֻלָּ֣ם –மற்றும்–அவர்கள்–எல்லாரும் בְּשֵׁמ֑וֹת பெயர்களின்படி וַיֵּשְׁב֗וּ –மற்றும்–உட்கார்ந்தார்கள் בְּי֤וֹם –நாளிலே אֶחָד֙ ஒன்றாம் לַחֹ֣דֶשׁ –மாதத்தின் הָעֲשִׂירִ֔י –பத்தாவது לְדַרְי֖וֹשׁ தாரியு– הַדָּבָֽר׃ –காரியத்தை
சிறையிருப்பிலிருந்து வந்தவர்கள் இந்தப்பிரகாரம் செய்தார்கள்; ஆசாரியனாகிய எஸ்றாவும் தங்கள் பிதாக்களுடைய குடும்பத்தின்படியே பேர்பேராக அழைக்கப்பட்ட பிதாக்களுடைய வம்சங்களின் தலைவர்கள் அனைவரும், இந்தக் காரியத்தை விசாரிக்கும்படி, பத்தாம் மாதம் முதல் தேதியிலே, தனித்து உட்கார்ந்து,
17 וַיְכַלּ֣וּ –மற்றும்–முடித்தார்கள் בַכֹּ֔ל –எல்லாரிலும் אֲנָשִׁ֕ים புருஷர்களை הַהֹשִׁ֖יבוּ சேர்த்துக்கொண்டவர்களை נָשִׁ֣ים ஸ்திரீகளை נָכְרִיּ֑וֹת அந்நிய עַ֛ד வரை י֥וֹם நாள் אֶחָ֖ד ஒன்றாம் לַחֹ֥דֶשׁ –மாதத்தின் הָרִאשֽׁוֹן׃ –முதலாவது פ פ
வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள் எல்லோருடைய காரியத்தையும் முதலாம் மாதம் முதல் தேதியிலே விசாரித்து முடித்தார்கள்.
18 וַיִּמָּצֵא֙ –மற்றும்–காணப்பட்டனர் מִבְּנֵ֣י புத்திரருடைய–இருந்து הַכֹּהֲנִ֔ים –ஆசாரியர்களின் אֲשֶׁ֥ר யார் הֹשִׁ֖יבוּ சேர்த்துக்கொண்டார்கள் נָשִׁ֣ים ஸ்திரீகளை נָכְרִיּ֑וֹת அந்நிய מִבְּנֵ֨י புத்திரருடைய–இருந்து יֵשׁ֤וּעַ யேசுவா בֶּן־ மகன்– יֽוֹצָדָק֙ யோசதாக் וְאֶחָ֔יו –மற்றும்–அவனுடைய–சகோதரர்கள் מַֽעֲשֵׂיָה֙ மாசெயா וֶֽאֱלִיעֶ֔זֶר –மற்றும்–எலியேசர் וְיָרִ֖יב –மற்றும்–யாரீப் וּגְדַלְיָֽה׃ –மற்றும்–கெதலியா
ஆசாரிய புத்திரரில் மறு ஜாதியான மனைவிகளைக் கொண்டவர்களாகக் காணப்பட்டவர்கள் யாரென்றால்: யோசதாக்கின் மகனாகிய யெசுவாவின் மகன்களிலும் அவனுடைய சகோதரர்களிலும், மாசெயா, எலியேசர், யாரீப், கெதலியா என்பவர்கள்.
19 וַיִּתְּנ֥וּ –மற்றும்–கொடுத்தார்கள் יָדָ֖ם கையை לְהוֹצִ֣יא வெளியேற்ற נְשֵׁיהֶ֑ם –தங்கள்–மனைவிகளை וַאֲשֵׁמִ֥ים –மற்றும்–குற்றமுள்ளவர்களாய் אֵֽיל־ ஆட்டுக்கடா– צֹ֖אן ஆடுகளின் עַל־ –குறித்து– אַשְׁמָתָֽם׃ –தங்கள்–குற்றத்திற்காக ס ס
இவர்கள் தங்கள் பெண்களைத் தள்ளிவிடுவோம் என்று உறுதிமொழி கொடுத்து; தாங்கள் குற்றவாளிகளானதால் குற்றநிவாரணபலியாக ஒரு ஆட்டுக்கடாவைச் செலுத்தினார்கள்.
20 וּמִבְּנֵ֣י –மற்றும்–புத்திரருடைய–இருந்து אִמֵּ֔ר இம்மேர் חֲנָ֖נִי கனானி וּזְבַדְיָֽה׃ –மற்றும்–செபதியா ס ס
இம்மேரின் மகன்களில் அனானியும், செபதியாவும்,
21 וּמִבְּנֵ֖י –மற்றும்–புத்திரருடைய–இருந்து חָרִ֑ם காரீம் מַעֲשֵׂיָ֤ה மாசெயா וְאֵֽלִיָּה֙ –மற்றும்–எலியா וּֽשְׁמַֽעְיָ֔ה –மற்றும்–செமாயா וִיחִיאֵ֖ל –மற்றும்–யெகீயேல் וְעֻזִיָּֽה׃ –மற்றும்–உசியா
ஆரீமின் மகன்களில் மாசெயா, எலியா, செமாயா, யெகியேல், உசியா என்பவர்களும்;
22 וּמִבְּנֵ֖י –மற்றும்–புத்திரருடைய–இருந்து פַּשְׁח֑וּר பஸ்கூர் אֶלְיוֹעֵינַ֤י எலியோனாய் מַֽעֲשֵׂיָה֙ மாசெயா יִשְׁמָעֵ֣אל இஸ்மவேல் נְתַנְאֵ֔ל நெதனெயேல் יוֹזָבָ֖ד யோசபாத் וְאֶלְעָשָֽׂה׃ –மற்றும்–எல்ஆசா ס ס
பஸ்கூரின் மகன்களில் எலியோனாய், மாசெயா, இஸ்மவேல், நெதனெயேல், யோசபாத், எலாசா என்பவர்களும்;
23 וּמִֽן־ –மற்றும்–இருந்து– הַלְוִיִּ֑ם –லேவியர்களின் יוֹזָבָ֣ד யோசபாத் וְשִׁמְעִ֗י –மற்றும்–சிமியி וְקֵֽלָיָה֙ –மற்றும்–கேலாயா ה֣וּא அவன் קְלִיטָ֔א கெலீத்தா פְּתַֽחְיָ֥ה பெத்தகியா יְהוּדָ֖ה யூதா וֶאֱלִיעֶֽזֶר׃ –மற்றும்–எலியேசர் ס ס
லேவியர்களில் யோசபாத், சிமேயி, கெலிதா என்னும் பெயர்கொண்ட கெலாயா, பெத்தகியா, யூதா, எலியேசர் என்பவர்களும்;
24 וּמִן־ –மற்றும்–இருந்து– הַמְשֹׁרְרִ֖ים –பாடகர்களின் אֶלְיָשִׁ֑יב எலியாசிப் וּמִן־ –மற்றும்–இருந்து– הַשֹּׁ֣עֲרִ֔ים –வாசல்காப்பாளர்களின் שַׁלֻּ֥ם சல்லூம் וָטֶ֖לֶם –மற்றும்–தேலேம் וְאוּרִֽי׃ –மற்றும்–ஊரி ס ס
பாடகர்களில் எலியாசிபும், வாசல் காவலாளர்களில் சல்லூம், தேலேம், ஊரி என்பவர்களும்;
25 וּמִֽיִּשְׂרָאֵ֑ל –மற்றும்–இஸ்ரவேலிலிருந்து מִבְּנֵ֣י புத்திரருடைய–இருந்து פַרְעֹ֡שׁ பரோஷ் רַ֠מְיָה ரமியா וְיִזִּיָּ֤ה –மற்றும்–இசியா וּמַלְכִּיָּה֙ –மற்றும்–மல்கியா וּמִיָּמִ֣ן –மற்றும்–மியாமின் וְאֶלְעָזָ֔ר –மற்றும்–எலெயாசர் וּמַלְכִּיָּ֖ה –மற்றும்–மல்கியா וּבְנָיָֽה׃ –மற்றும்–பெனாயா ס ס
மற்ற இஸ்ரவேலருக்குள்ளே பாரோஷின் மகன்களில் ரமீயா, யெசியா, மல்கியா, மியாமின், எலெயாசார், மல்கிஜா, பெனாயா என்பவர்களும்;
26 וּמִבְּנֵ֖י –மற்றும்–புத்திரருடைய–இருந்து עֵילָ֑ם ஏலாம் מַתַּנְיָ֤ה மத்தனியா זְכַרְיָה֙ செக்கரியா וִיחִיאֵ֣ל –மற்றும்–யெகீயேல் וְעַבְדִּ֔י –மற்றும்–அப்தி וִירֵמ֖וֹת –மற்றும்–யெரேமோத் וְאֵלִיָּֽה׃ –மற்றும்–எலியா ס ס
ஏலாமின் மகன்களில் மத்தனியா, சகரியா, யெகியேல், அப்தி, யெரிமோத், எலியா என்பவர்களும்;
27 וּמִבְּנֵ֖י –மற்றும்–புத்திரருடைய–இருந்து זַתּ֑וּא சத்தூ אֶלְיוֹעֵנַ֤י எலியோனாய் אֶלְיָשִׁיב֙ எலியாசிப் מַתַּנְיָ֣ה மத்தனியா וִֽירֵמ֔וֹת –மற்றும்–யெரேமோத் וְזָבָ֖ד –மற்றும்–சாபாத் וַעֲזִיזָֽא׃ –மற்றும்–அசீசா ס ס
சத்தூவின் மகன்களில் எலியோனாய், எலியாசிப், மத்தனியா, யெரிமோத், சாபாத், அசிசா என்பவர்களும்;
28 וּמִבְּנֵ֖י –மற்றும்–புத்திரருடைய–இருந்து בֵּבָ֑י பேபாய் יְהוֹחָנָ֥ן யோகனான் חֲנַנְיָ֖ה அனனியா זַבַּ֥י சப்பாய் עַתְלָֽי׃ அத்லாய் ס ס
பெபாயின் மகன்களில் யோகனான், அனனியா, சாபாயி, அத்லாயி என்பவர்களும்;
29 וּמִבְּנֵ֖י –மற்றும்–புத்திரருடைய–இருந்து בָּנִ֑י பானி מְשֻׁלָּ֤ם மெசுல்லாம் מַלּוּךְ֙ மல்லூக் וַעֲדָיָ֔ה –மற்றும்–அதாயா יָשׁ֖וּב யாசூப் וּשְׁאָ֥ל –மற்றும்–சேயால் [ירמות] [யெரேமோத்] (וְרָמֽוֹת׃) (–மற்றும்–ராமோத்) ס ס
பானியின் மகன்களில் மெசுல்லாம், மல்லூக், அதாயா, யாசுப், செயால், ராமோத் என்பவர்களும்,
30 וּמִבְּנֵ֛י –மற்றும்–புத்திரருடைய–இருந்து פַּחַ֥ת பகத்– מוֹאָ֖ב மோவாப் עַדְנָ֣א அத்னா וּכְלָ֑ל –மற்றும்–கேலால் בְּנָיָ֤ה பெனாயா מַעֲשֵׂיָה֙ மாசெயா מַתַּנְיָ֣ה மத்தனியா בְצַלְאֵ֔ל பெசலெயேல் וּבִנּ֖וּי –மற்றும்–பின்னூய் וּמְנַשֶּֽׁה׃ –மற்றும்–மனாசே ס ס
பாகாத்மோவாபின் மகன்களில் அத்னா, கெலால், பெனாயா, மாசெயா, மத்தனியா, பெசலெயேல், பின்னூயி, மனாசே என்பவர்களும்;
31 וּבְנֵ֖י –மற்றும்–புத்திரர் חָרִ֑ם காரீம் אֱלִיעֶ֧זֶר எலியேசர் יִשִּׁיָּ֛ה இஷியா מַלְכִּיָּ֖ה மல்கியா שְׁמַֽעְיָ֥ה செமாயா שִׁמְעֽוֹן׃ சிமியோன்
ஆரீமின் மகன்களில் எலியேசர், இஷியா, மல்கியா, செமாயா, ஷிமியோன்,
32 בְּנְיָמִ֥ן பென்யமீன் מַלּ֖וּךְ மல்லூக் שְׁמַרְיָֽה׃ செமரியா ס ס
பென்யமீன், மல்லூக், செமரியா என்பவர்களும்;
33 מִבְּנֵ֖י புத்திரருடைய–இருந்து חָשֻׁ֑ם காசூம் מַתְּנַ֤י மத்தனாய் מַתַּתָּה֙ மத்தத்தா זָבָ֣ד சாபாத் אֱלִיפֶ֔לֶט எலிப்பெலேத் יְרֵמַ֥י யெரேமாய் מְנַשֶּׁ֖ה மனாசே שִׁמְעִֽי׃ சிமியி ס ס
ஆசூமின் மகன்களில் மதனாய், மத்தத்தா, சாபாத், எலிப்பெலேத், எரெமாயி, மனாசே, சிமேயி என்பவர்களும்;
34 מִבְּנֵ֣י புத்திரருடைய–இருந்து בָנִ֔י பானி מַעֲדַ֥י மாதாய் עַמְרָ֖ם அம்ராம் וְאוּאֵֽל׃ –மற்றும்–ஊவேல் ס ס
பானியின் மகன்களில் மாதாயி, அம்ராம், ஊவேல்,
35 בְּנָיָ֥ה பெனாயா בֵדְיָ֖ה பெதெயா [כלהי] [கெலூகாய்] (כְּלֽוּהוּ׃) (கெலூகூ)
பெனாயா, பெதியா, கெல்லூ,
36 וַנְיָ֥ה வனியா מְרֵמ֖וֹת மெரேமோத் אֶלְיָשִֽׁיב׃ எலியாசிப்
வனியா, மெரெமோத், எலியாசிப்,
37 מַתַּנְיָ֥ה மத்தனியா מַתְּנַ֖י மத்தனாய் [ויעשו] [–மற்றும்–யாசூ] (וְיַעֲשָֽׂי׃) (–மற்றும்–யாசாய்)
மத்தனியா, மதனாய், யாசாய்,
38 וּבָנִ֥י –மற்றும்–பானி וּבִנּ֖וּי –மற்றும்–பின்னூய் שִׁמְעִֽי׃ சிமியி
பானி, பின்னூயி, சிமெயி,
39 וְשֶֽׁלֶמְיָ֥ה –மற்றும்–செலெமியா וְנָתָ֖ן –மற்றும்–நாத்தான் וַעֲדָיָֽה׃ –மற்றும்–அதாயா
செலேமியா, நாத்தான், அதாயா,
40 מַכְנַדְבַ֥י மக்னதெபாய் שָׁשַׁ֖י சாஷாய் שָׁרָֽי׃ சாராய்
மக்நாத்பாயி, சாசாயி, சாராயி,
41 עֲזַרְאֵ֥ל அசரெயேல் וְשֶׁלֶמְיָ֖הוּ –மற்றும்–செலெமியாகூ שְׁמַרְיָֽה׃ செமரியா
அசரெயேல், செலேமியா, செமரியா,
42 שַׁלּ֥וּם சல்லூம் אֲמַרְיָ֖ה அமரியா יוֹסֵֽף׃ யோசேப்பு ס ס
சல்லூம், அமரியா, யோசேப் என்பவர்களும்;
43 מִבְּנֵ֖י புத்திரருடைய–இருந்து נְב֑וֹ நேபோ יְעִיאֵ֤ל யெகீயேல் מַתִּתְיָה֙ மத்தித்தியா זָבָ֣ד சாபாத் זְבִינָ֔א செபீனா [ידו] [யத்தாய்] (יַדַּ֥י) (யத்தாய்) וְיוֹאֵ֖ל –மற்றும்–யோவேல் בְּנָיָֽה׃ பெனாயா
நேபோவின் மகன்களில் ஏயெல், மத்தித்தியா, சாபாத், செபினா, யதாய், யோவேல், பெனாயா என்பவர்களுமே.
44 כָּל־ எல்லா– אֵ֕לֶּה இவர்கள் [נשאי] [சேர்த்துக்கொண்டவர்கள்] (נָשְׂא֖וּ) (சேர்த்துக்கொண்டார்கள்) נָשִׁ֣ים ஸ்திரீகளை נָכְרִיּ֑וֹת அந்நிய וְיֵ֣שׁ –மற்றும்–இருந்தது מֵהֶ֣ם அவர்களில் נָשִׁ֔ים ஸ்திரீகள் וַיָּשִׂ֖ימוּ –மற்றும்–பெற்றெடுத்தார்கள் בָּנִֽים׃ புத்திரர்களை פ פ
இவர்கள் எல்லோரும் வேறு இனமான பெண்களைத் திருமணம் செய்தவர்கள்; இவர்களில் சிலர் திருமணம்செய்த பெண்களிடத்தில் பிள்ளைகளைப் பெற்றிருந்தார்கள்.