1 תְּפִלָּ֗ה ஜெபம் לְדָ֫וִ֥ד தாவீதின் הַטֵּֽה־ சாய்யும் יְהוָ֣ה யெகோவா אָזְנְךָ֣ உமது–காதை עֲנֵ֑נִי பதிலளியும் כִּֽי־ ஏனெனில் עָנִ֖י ஏழையும் וְאֶבְי֣וֹן தேவையற்றவனும் אָֽנִי׃ நான்
தாவீதின் ஜெபம். யெகோவாவே, உமது செவியைச் சாய்த்து, என்னுடைய விண்ணப்பத்தைக் கேட்டருளும்; நான் ஏழ்மையும் ஒடுக்கப்பட்டவனுமாக இருக்கிறேன்.
2 שָֽׁמְרָ֣ה காப்பாரும் נַפְשִׁי֮ என்–ஆத்துமாவை כִּֽי־ ஏனெனில் חָסִ֪יד பக்தன் אָ֥נִי நான் הוֹשַׁ֣ע இரட்சிப்பீர் עַ֭בְדְּךָ உமது–ஊழியனை אַתָּ֣ה நீர் אֱלֹהַ֑י என்–தேவனே הַבּוֹטֵ֥חַ நம்புகிறவன் אֵלֶֽיךָ׃ உம்மில்
என்னுடைய ஆத்துமாவைக் காத்தருளும், நான் பக்தியுள்ளவன்; என் தேவனே, உம்மை நம்பியிருக்கிற உமது அடியேனை நீர் இரட்சியும்.
3 חָנֵּ֥נִי கிருபை–காட்டும் אֲדֹנָ֑י ஆண்டவரே כִּ֥י ஏனெனில் אֵלֶ֥יךָ உம்மிடம் אֶ֝קְרָ֗א கூப்பிடுகிறேன் כָּל־ எல்லா הַיּֽוֹם׃ நாளும்
ஆண்டவரே, எனக்கு இரங்கும், நாள்தோறும் உம்மை நோக்கிக் கூப்பிடுகிறேன்.
4 שַׂ֭מֵּחַ மகிழ்ச்–செய்யும் נֶ֣פֶשׁ ஆத்துமாவை עַבְדֶּ֑ךָ உமது–ஊழியனின் כִּ֥י ஏனெனில் אֵלֶ֥יךָ உம்மிடம் אֲ֝דֹנָ֗י ஆண்டவரே נַפְשִׁ֥י என்–ஆத்துமாவை אֶשָּֽׂא׃ உயர்த்துகிறேன்
உமது அடியேனுடைய ஆத்துமாவை மகிழ்ச்சியாக்கும்; ஆண்டவரே, உம்மிடத்தில் என்னுடைய ஆத்துமாவை உயர்த்துகிறேன்.
5 כִּֽי־ ஏனெனில் אַתָּ֣ה நீர் אֲ֭דֹנָי ஆண்டவரே ט֣וֹב நல்லவரும் וְסַלָּ֑ח மன்னிக்கிறவரும் וְרַב־ மிகுதியான חֶ֝֗סֶד கிருபையை לְכָל־ எல்லா קֹרְאֶֽיךָ׃ உம்மை–கூப்பிடுகிறவர்களுக்கு
ஆண்டவரே, நீர் நல்லவரும், மன்னிக்கிறவரும், உம்மை நோக்கிக் கூப்பிடுகிற எல்லோர்மேலும் கிருபை மிகுந்தவருமாக இருக்கிறீர்.
6 הַאֲזִ֣ינָה செவிகொடும் יְ֭הוָה யெகோவா תְּפִלָּתִ֑י என்–ஜெபத்தை וְ֝הַקְשִׁ֗יבָה கவனியும் בְּק֣וֹל குரலில் תַּחֲנוּנוֹתָֽי׃ என்–மன்றாடுகளின்
யெகோவாவே, என்னுடைய ஜெபத்திற்குச் செவிகொடுத்து, என்னுடைய விண்ணப்பங்களின் சத்தத்தைத் கவனியும்.
7 בְּי֣וֹם நாளில் צָ֭רָתִ֥י என்–கஷ்டத்தின் אֶקְרָאֶ֗ךָּ கூப்பிடுவேன் כִּ֣י ஏனெனில் תַעֲנֵֽנִי׃ பதிலளிப்பீர்
நான் துயரப்படுகிற நாளில் உம்மை நோக்கிக் கூப்பிடுவேன்; நீர் என்னைக் கேட்டருளுவீர்.
8 אֵין־ இல்லை כָּמ֖וֹךָ உம்மைப்–போல בָאֱלֹהִ֥ים ׀ தேவர்களில் אֲדֹנָ֗י ஆண்டவரே וְאֵ֣ין இல்லை כְּֽמַעֲשֶֽׂיךָ׃ உமது–செயல்களைப்–போல
ஆண்டவரே, தெய்வங்களுக்குள்ளே உமக்கு இணையுமில்லை; உம்முடைய செயல்களுக்கு ஒப்புமில்லை.
9 כָּל־ எல்லா גּוֹיִ֤ם ׀ ஜாதிகள் אֲשֶׁ֥ר நீர் עָשִׂ֗יתָ உண்டாக்கின יָב֤וֹאוּ ׀ வருவார்கள் וְיִשְׁתַּחֲו֣וּ வணங்குவார்கள் לְפָנֶ֣יךָ உமது–முன்பாக אֲדֹנָ֑י ஆண்டவரே וִֽיכַבְּד֣וּ மகிமைப்படுத்துவார்கள் לִשְׁמֶֽךָ׃ உமது–நாமத்தை
ஆண்டவரே, நீர் உண்டாக்கின எல்லா தேசங்களும் வந்து, உமக்கு முன்பாகப் பணிந்து, உமது பெயரை மகிமைப்படுத்துவார்கள்.
10 כִּֽי־ ஏனெனில் גָד֣וֹל பெரியவர் אַ֭תָּה நீர் וְעֹשֵׂ֣ה செய்கிறவர் נִפְלָא֑וֹת அதிசயங்களை אַתָּ֖ה நீர் אֱלֹהִ֣ים தேவன் לְבַדֶּֽךָ׃ தனித்தமாக
தேவனே நீர் மகத்துவமுள்ளவரும் அதிசயங்களைச் செய்கிறவருமாக இருக்கிறீர்; நீர் ஒருவரே தேவன்.
11 ה֘וֹרֵ֤נִי கற்பியும் יְהוָ֨ה ׀ யெகோவா דַּרְכֶּ֗ךָ உமது–வழியை אֲהַלֵּ֥ךְ நடப்பேன் בַּאֲמִתֶּ֑ךָ உமது–உண்மையில் יַחֵ֥ד ஒன்றாக்கும் לְ֝בָבִ֗י என்–இருதயத்தை לְיִרְאָ֥ה பயப்படும்படி שְׁמֶֽךָ׃ உமது–நாமத்தை
யெகோவாவே, உமது வழியை எனக்குப் போதியும், நான் உமது சத்தியத்திலே நடப்பேன்; நான் உமது பெயருக்குப் பயந்திருக்கும்படி என்னுடைய இருதயத்தை ஒருமுகப்படுத்தும்.
12 אוֹדְךָ֤ ׀ நன்றி–செலுத்துவேன் אֲדֹנָ֣י ஆண்டவரே אֱ֭לֹהַי என்–தேவனே בְּכָל־ எல்லா לְבָבִ֑י இருதயத்தோடு וַאֲכַבְּדָ֖ה மகிமைப்படுத்துவேன் שִׁמְךָ֣ உமது–நாமத்தை לְעוֹלָֽם׃ என்றென்றைக்கும்
என் தேவனாகிய ஆண்டவரே; உம்மை என்னுடைய முழு இருதயத்தோடும் துதித்து, உமது பெயரை என்றென்றைக்கும் மகிமைப்படுத்துவேன்.
13 כִּֽי־ ஏனெனில் חַ֭סְדְּךָ உமது–கிருபை גָּד֣וֹל பெரியது עָלָ֑י என்–மேல் וְהִצַּ֥לְתָּ விடுவித்தீர் נַ֝פְשִׁ֗י என்–ஆத்துமாவை מִשְּׁא֥וֹל பாதாளத்திலிருந்து תַּחְתִּיָּֽה׃ ஆழமான
நீர் எனக்குப் பாராட்டின உமது கிருபை பெரியது; என்னுடைய ஆத்துமாவைத் தாழ்ந்த பாதாளத்திற்குத் தப்புவித்தீர்.
14 אֱלֹהִ֤ים ׀ தேவனே זֵ֘דִ֤ים அகங்காரிகள் קָֽמוּ־ எழுந்தார்கள் עָלַ֗י எனக்கு–எதிராக וַעֲדַ֣ת கோஷ்டகாரரின்–கூட்டம் עָ֭רִיצִים கோஷ்டகாரரின் בִּקְשׁ֣וּ தேடினார்கள் נַפְשִׁ֑י என்–ஆத்துமாவை וְלֹ֖א வைக்கவில்லை שָׂמ֣וּךָ வைக்கவில்லை לְנֶגְדָּֽם׃ அவர்கள்–முன்பாக
தேவனே, அகங்காரிகள் எனக்கு விரோதமாக எழும்புகிறார்கள், கொடுமைக்காரராகிய கூட்டத்தார்கள் என்னுடைய உயிரை வாங்கத் தேடுகிறார்கள், உம்மைத் தங்களுக்கு முன்பாக நிறுத்தி பார்க்காமலிருக்கிறார்கள்.
15 וְאַתָּ֣ה நீரோ אֲ֭דֹנָי ஆண்டவரே אֵל־ தேவன் רַח֣וּם இரக்கமுள்ளவர் וְחַנּ֑וּן கிருபையுள்ளவர் אֶ֥רֶךְ நீண்ட אַ֝פַּ֗יִם கோபத்தில் וְרַב־ மிகுதியான חֶ֥סֶד கிருபையையும் וֶאֱמֶֽת׃ உண்மையையும்
ஆனாலும் ஆண்டவரே, நீர் மனவுருக்கமும், இரக்கமும், நீடிய பொறுமையும், பூரண கிருபையும், சத்தியமுமுள்ள தேவன்.
16 פְּנֵ֥ה திரும்பும் אֵלַ֗י என்னிடம் וְחָ֫נֵּ֥נִי கிருபை–காட்டும் תְּנָֽה־ கொடும் עֻזְּךָ֥ உமது–வல்லமையை לְעַבְדֶּ֑ךָ உமது–ஊழியனுக்கு וְ֝הוֹשִׁ֗יעָה இரட்சிப்பீர் לְבֶן־ உமது–அடியாளின்–மகனுக்கு אֲמָתֶֽךָ׃ —
என்மேல் நோக்கமாகி, எனக்கு இரங்கும்; உமது வல்லமையை உமது அடியானுக்கு அருளி, உமது அடியாளின் மகனைக் காப்பாற்றும்.
17 עֲשֵֽׂה־ செய்யும் עִמִּ֥י என்னோடு א֗וֹת அடையாளத்தை לְט֫וֹבָ֥ה நன்மைக்கு וְיִרְא֣וּ பார்ப்பார்கள் שֹׂנְאַ֣י என்–பகைவர்கள் וְיֵבֹ֑שׁוּ வெட்கப்படட்டும் כִּֽי־ ஏனெனில் אַתָּ֥ה நீர் יְ֝הוָ֗ה யெகோவா עֲזַרְתַּ֥נִי உதவினீர் וְנִחַמְתָּֽנִי׃ ஆறுதலளித்தீர்
யெகோவாவே, நீர் எனக்குத் துணைசெய்து என்னைத் தேற்றுகிறதை என்னுடைய பகைஞர் கண்டு வெட்கப்படும்படிக்கு, எனக்கு அநுகூலமாக ஒரு அடையாளத்தைக் காண்பித்தருளும்.