1 כִּי֩ ஏனெனில் הִנֵּ֨ה இதோ הָאָד֜וֹן –அந்த–ஆண்டவர் יְהוָ֣ה யெகோவா צְבָא֗וֹת சேனைகளின் מֵסִ֤יר நீக்குகிறார் מִירוּשָׁלִַ֙ם֙ –எருசலேமிலிருந்து וּמִ֣יהוּדָ֔ה –மற்றும்–யூதாவிலிருந்து מַשְׁעֵ֖ן ஆதரவையும் וּמַשְׁעֵנָ֑ה –மற்றும்–ஆதரவையும் כֹּ֚ל எல்லா מִשְׁעַן־ ஆதரவையை– לֶ֔חֶם அப்பத்தின் וְכֹ֖ל –மற்றும்–எல்லா מִשְׁעַן־ ஆதரவையை– מָֽיִם׃ தண்ணீரின்
இதோ, சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் எருசலேமிலிருந்தும், யூதாவிலிருந்தும் சகலவிதமான ஆதரவுகளாகிய அப்பமென்கிற எல்லா ஆதரவையும், தண்ணீரென்கிற எல்லா ஆதரவையும்;
2 גִּבּ֖וֹר வல்லவனை וְאִ֣ישׁ –மற்றும்–மனிதனை מִלְחָמָ֑ה யுத்தத்தின் שׁוֹפֵ֥ט நியாயாதிபதியை וְנָבִ֖יא –மற்றும்–தீர்க்கதரிசியை וְקֹסֵ֥ם –மற்றும்–குறிசொல்வனை וְזָקֵֽן׃ –மற்றும்–மூத்தவனை
பராக்கிரமசாலியையும், போர்வீரனையும், நியாயாதிபதியையும், தீர்க்கதரிசியையும், ஞானியையும், மூப்பனையும்;
3 שַׂר־ தலைவனை– חֲמִשִּׁ֖ים ஐம்பதின் וּנְשׂ֣וּא –மற்றும்–மதிக்கப்பட்ட פָנִ֑ים முகத்தையுடையவனை וְיוֹעֵ֛ץ –மற்றும்–ஆலோசகனை וַחֲכַ֥ם –மற்றும்–ஞானமுள்ள חֲרָשִׁ֖ים கைவினைவன் וּנְב֥וֹן –மற்றும்–புரிந்துகொள்கிற לָֽחַשׁ׃ மந்திரத்தை
ஐம்பதுபேருக்கு அதிபதியையும், கனம்பொருந்தினவனையும் ஆலோசனைக்காரனையும், தொழில்களில் சாமர்த்தியமுள்ளவனையும், சாதுரியனையும் விலக்குவார்.
4 וְנָתַתִּ֥י –மற்றும்–கொடுப்பேன் נְעָרִ֖ים பாலகர்களை שָׂרֵיהֶ֑ם அவர்களின்–அதிகாரிகளாக וְתַעֲלוּלִ֖ים –மற்றும்–குழந்தைகள் יִמְשְׁלוּ־ ஆள்வார்கள்– בָֽם׃ அவர்களில்
வாலிபர்களை அவர்களுக்கு அதிபதிகளாகத் தருவேன் என்கிறார்; பிள்ளைகள் அவர்களை ஆளுவார்கள்.
5 וְנִגַּ֣שׂ –மற்றும்–ஒடுக்கப்படும் הָעָ֔ם –அந்த–ஜனங்கள் אִ֥ישׁ மனிதன் בְּאִ֖ישׁ –மனிதனால் וְאִ֣ישׁ –மற்றும்–மனிதன் בְּרֵעֵ֑הוּ –அவன்–அயலானிடம் יִרְהֲב֗וּ துணிவார்கள் הַנַּ֙עַר֙ –அந்த–பாலகன் בַּזָּקֵ֔ן –மூத்தவனிடம் וְהַנִּקְלֶ֖ה –மற்றும்–இழிவானவன் בַּנִּכְבָּֽד׃ –மதிக்கப்பட்டவனிடம்
மக்கள் ஒடுக்கப்படுவார்கள்; ஒருவருக்கொருவரும், அயலானுக்கு அயலானும் விரோதமாயிருப்பார்கள்; வாலிபன் முதிர்வயதுள்ளவனுக்கும், கீழ்மகன் மேன்மகனுக்கும் இடையூறு செய்வான்.
6 כִּֽי־ ஏனெனில்– יִתְפֹּ֨שׂ பிடிப்பான் אִ֤ישׁ மனிதன் בְּאָחִיו֙ –அவன்–சகோதரனில் בֵּ֣ית வீட்டின் אָבִ֔יו அவன்–தந்தையின் שִׂמְלָ֣ה ஆடையே לְכָ֔ה உனக்கு קָצִ֖ין தலைவனாக תִּֽהְיֶה־ ஆவாய்– לָּ֑נוּ நமக்கு וְהַמַּכְשֵׁלָ֥ה –மற்றும்–இந்த–இடர்ச்சல் הַזֹּ֖את இந்த תַּ֥חַת –கீழ் יָדֶֽךָ׃ உன்–கையின்
அப்பொழுது ஒருவன் தன் தகப்பன் வீட்டைச்சேர்ந்த தன் சகோதரனைப்பிடித்து: உனக்கு மேலாடை இருக்கிறது, நீ எங்களுக்கு அதிபதியாயிரு; கேட்டிற்கு இணையான இந்தக் காரியம் உன் கையின் கீழாவதாக என்று சொல்ல;
7 יִשָּׂא֩ உயர்த்துவான் בַיּ֨וֹם –அந்த–நாளில்– הַה֤וּא ׀ –அந்த–அதில் לֵאמֹר֙ சொல்லி לֹא־ இல்லை– אֶהְיֶ֣ה நான்–ஆவேன் חֹבֵ֔שׁ கட்டுபவன் וּבְבֵיתִ֕י –மற்றும்–என்–வீட்டில் אֵ֥ין இல்லை לֶ֖חֶם அப்பம் וְאֵ֣ין –மற்றும்–இல்லை שִׂמְלָ֑ה ஆடை לֹ֥א இல்லை תְשִׂימֻ֖נִי நீங்கள்–என்னை–நியமிக்கவேண்டாம் קְצִ֥ין தலைவனாக עָֽם׃ ஜனங்களின்
அவன் அந்நாளிலே தன் கையை உயர்த்தி: நான் சீர்ப்படுத்துகிறவனாக இருக்கமாட்டேன்; என் வீட்டிலே அப்பமுமில்லை ஆடையுமில்லை; என்னை மக்களுக்கு அதிபதியாக ஏற்படுத்தவேண்டாம் என்பான்.
8 כִּ֤י ஏனெனில் כָשְׁלָה֙ இடறியது יְר֣וּשָׁלִַ֔ם எருசலேம் וִיהוּדָ֖ה –மற்றும்–யூதா נָפָ֑ל வீழ்ந்தது כִּֽי־ ஏனெனில்– לְשׁוֹנָ֤ם அவர்கள்–நாவும் וּמַֽעַלְלֵיהֶם֙ –மற்றும்–அவர்கள்–செயல்கள் אֶל־ –எதிராக– יְהוָ֔ה யெகோவாவுக்கு לַמְר֖וֹת கலகச்செய்ய עֵנֵ֥י கண்களை כְבוֹדֽוֹ׃ அவருடைய–மகிமையின்
ஏனென்றால் எருசலேம் பாழாக்கப்பட்டது, யூதா விழுந்துபோனது; அவர்களுடைய நாவும், அவர்கள் செயல்களும், யெகோவாவுடைய மகிமையின் கண்களுக்கு எரிச்சல் உண்டாக்கத்தக்கதாக அவருக்கு விரோதமாயிருக்கிறது.
9 הַכָּרַ֤ת –அந்த–அடையாளம் פְּנֵיהֶם֙ அவர்கள்–முகங்களின் עָ֣נְתָה சாட்சியளிக்கிறது בָּ֔ם அவர்களுக்கு–எதிராக וְחַטָּאתָ֛ם –மற்றும்–அவர்கள்–பாவத்தை כִּסְדֹ֥ם –போல்–சோதோம் הִגִּ֖ידוּ அறிவித்தார்கள் לֹ֣א இல்லை כִחֵ֑דוּ மறைத்தார்கள் א֣וֹי ஐயோ לְנַפְשָׁ֔ם அவர்கள்–ஆத்துமாக்களுக்கு כִּֽי־ ஏனெனில்– גָמְל֥וּ பதிலளித்தார்கள் לָהֶ֖ם அவர்களுக்கு רָעָֽה׃ தீமையை
அவர்கள் முகப்பார்வை அவர்களுக்கு விரோதமாகச் சாட்சியிடும்; அவர்கள் தங்கள் பாவத்தை மறைக்காமல், சோதோம் ஊராரைப்போல வெளிப்படுத்துகிறார்கள்; அவர்களுடைய ஆத்துமாவுக்கு ஐயோ, தங்களுக்கே தீமையை வருவித்துக்கொள்கிறார்கள்.
10 אִמְר֥וּ சொல்லுங்கள் צַדִּ֖יק நீதிமானுக்கு כִּי־ ஏனெனில்– ט֑וֹב நல்லது כִּֽי־ ஏனெனில்– פְרִ֥י கனியை מַעַלְלֵיהֶ֖ם அவர்கள்–செயல்களின் יֹאכֵֽלוּ׃ புசிப்பார்கள்
உங்களுக்கு நன்மையுண்டாகும் என்று நீதிமான்களுக்குச் சொல்லுங்கள்; அவர்கள் தங்கள் செயல்களின் பலனை அனுபவிப்பார்கள்.
11 א֖וֹי ஐயோ לְרָשָׁ֣ע தீயவனுக்கு רָ֑ע தீமையே כִּֽי־ ஏனெனில்– גְמ֥וּל பதில் יָדָ֖יו அவன்–கைகளின் יֵעָ֥שֶׂה செய்யப்படும் לּֽוֹ׃ அவனுக்கு
துன்மார்க்கனுக்கு ஐயோ, அவனுக்குக் கேடு உண்டாகும்; அவனுடைய கைகளின் பலன் அவனுக்குக் கிடைக்கும்.
12 עַמִּי֙ என்–ஜனங்களே נֹגְשָׂ֣יו அவர்கள்–ஒடுக்கியவர்கள் מְעוֹלֵ֔ל குழந்தை וְנָשִׁ֖ים –மற்றும்–பெண்கள் מָ֣שְׁלוּ ஆள்கிறார்கள் ב֑וֹ அவனில் עַמִּי֙ என்–ஜனங்களே מְאַשְּׁרֶ֣יךָ உன்–வழிகாட்டுகிறவர்கள் מַתְעִ֔ים வழிதவறிச்செய்கிறவர்கள் וְדֶ֥רֶךְ –மற்றும்–வழியை אֹֽרְחֹתֶ֖יךָ உன்–பாதைகளின் בִּלֵּֽעוּ׃ விழுங்கினார்கள் ס —
பிள்ளைகள் என் மக்களை ஒடுக்குகிறவர்களாக இருக்கிறார்கள்; பெண்கள் அவர்களை ஆளுகிறார்கள். என் மக்களோ, உன்னை நடத்துகிறவர்கள் உன்னை மோசம்போக்கி, நீ நடக்கவேண்டிய வழியை அழித்துப்போடுகிறார்கள்.
13 נִצָּ֥ב எழுந்திருக்கிறார் לָרִ֖יב வாதாட יְהוָ֑ה யெகோவா וְעֹמֵ֖ד –மற்றும்–நிற்கிறார் לָדִ֥ין நியாயம்தீர்க்க עַמִּֽים׃ ஜனங்களை
யெகோவா வழக்காட எழுந்திருந்து, மக்களை நியாயந்தீர்க்க நிற்கிறார்.
14 יְהוָה֙ யெகோவா בְּמִשְׁפָּ֣ט –நியாயத்தில் יָב֔וֹא வருவார் עִם־ –கூடவே– זִקְנֵ֥י மூத்தவர்கள் עַמּ֖וֹ அவர்கள்–ஜனங்களின் וְשָׂרָ֑יו –மற்றும்–அவர்கள்–அதிகாரிகள் וְאַתֶּם֙ –மற்றும்–நீங்கள் בִּֽעַרְתֶּ֣ם எரித்தீர்கள் הַכֶּ֔רֶם –அந்த–திராட்சைத்தோட்டத்தை גְּזֵלַ֥ת கொள்ளையடித்தது הֶֽעָנִ֖י –அந்த–எளியவனின் בְּבָתֵּיכֶֽם׃ உங்கள்–வீடுகளில்
யெகோவா தமது மக்களின் மூப்பர்களையும், அவர்களுடைய பிரபுக்களையும் நியாயம் விசாரிப்பார். நீங்களே இந்தத் திராட்சைத்தோட்டத்தை அழித்துப்போட்டீர்கள்; சிறுமையானவனிடத்தில் கொள்ளையிட்ட பொருள் உங்கள் வீடுகளில் இருக்கிறது.
15 [מלכם] — (מַה־) என்ன– (לָּכֶם֙) உங்களுக்கு תְּדַכְּא֣וּ நசுக்குகிறீர்கள் עַמִּ֔י என்–ஜனங்களை וּפְנֵ֥י –மற்றும்–முகங்களை עֲנִיִּ֖ים எளியவர்களின் תִּטְחָ֑נוּ அரைக்கிறீர்கள் נְאֻם־ சொல்கிறார்– אֲדֹנָ֥י ஆண்டவர் יְהוִ֖ה யெகோவா צְבָאֽוֹת׃ சேனைகளின் ס —
நீங்கள் என் மக்களை நொறுக்கிச் சிறுமையானவர்களின் முகத்தை நெரிக்கிறது என்னவென்று சேனைகளின் யெகோவாவாகிய ஆண்டவர் உரைக்கிறார்.
16 וַיֹּ֣אמֶר –மற்றும்–சொன்னார் יְהוָ֗ה யெகோவா יַ֚עַן ஏனெனில் כִּ֤י ஏனெனில் גָֽבְהוּ֙ பெருமையாகினார்கள் בְּנ֣וֹת மகள்கள் צִיּ֔וֹן சீயோனின் וַתֵּלַ֙כְנָה֙ –மற்றும்–நடந்தார்கள் [נטוות] — (נְטוּי֣וֹת) நீட்டிய גָּר֔וֹן கழுத்துடன் וּֽמְשַׂקְּר֖וֹת –மற்றும்–கண்சிமிழிக்கிறவர்கள் עֵינָ֑יִם கண்களை הָל֤וֹךְ நடந்து– וְטָפֹף֙ –மற்றும்–சிறுஅடியெடுத்து תֵּלַ֔כְנָה நடக்கிறார்கள் וּבְרַגְלֵיהֶ֖ם –மற்றும்–அவர்கள்–கால்களால் תְּעַכַּֽסְנָה׃ ஒலிஎழுப்புகிறார்கள்
பின்னும் யெகோவா சொல்கிறதாவது: சீயோனின் பெண்கள் அகந்தையாயிருந்து, கழுத்தை நெறித்து நடந்து, கண்களால் கவர்ச்சியாகப்பார்த்து, ஒய்யாரமாக நடந்து, தங்கள் கால்களில் சிலம்பு ஒலிக்கத் திரிகிறார்கள்.
17 וְשִׂפַּ֣ח –மற்றும்–புண்ணாக்குவார் אֲדֹנָ֔י ஆண்டவர் קָדְקֹ֖ד நெற்றியை בְּנ֣וֹת மகள்களின் צִיּ֑וֹן சீயோனின் וַיהוָ֖ה –மற்றும்–யெகோவா פָּתְהֵ֥ן அவர்கள்–அந்தரங்கத்தை יְעָרֶֽה׃ நிர்வாணமாக்குவார் ס —
ஆதலால் ஆண்டவர் சீயோன் பெண்களின் உச்சந்தலையை மொட்டையாக்குவார்; யெகோவா அவர்கள் மானத்தைக் குலைப்பார்.
18 בַּיּ֨וֹם –அந்த–நாளில்– הַה֜וּא –அந்த–அதில் יָסִ֣יר நீக்குவார் אֲדֹנָ֗י ஆண்டவர் אֵ֣ת –ஐ תִּפְאֶ֧רֶת அழகை הָעֲכָסִ֛ים –அந்த–கால்சரிகளை וְהַשְּׁבִיסִ֖ים –மற்றும்–அந்த–தலைப்பட்டைகளை וְהַשַּׂהֲרֹנִֽים׃ –மற்றும்–அந்த–சந்திர–ஆபரணங்களை
அந்நாளிலே ஆண்டவர் அவர்களுடைய ஆபரணங்களாகிய சிலம்புகளையும், சுட்டிகளையும், பிறைவடிவ கழுத்தணிகளையும்,
19 הַנְּטִיפ֥וֹת –அந்த–காது–நகைகளை וְהַשֵּׁיר֖וֹת –மற்றும்–அந்த–வளையல்களை וְהָֽרְעָלֽוֹת׃ –மற்றும்–அந்த–மூட்டாம்பரங்களை
ஆரங்களையும், வளையல்களையும், தலைமுக்காடுகளையும்,
20 הַפְּאֵרִ֤ים –அந்த–தலை–ஆபரணங்களை וְהַצְּעָדוֹת֙ –மற்றும்–அந்த–சங்கிலிகளை וְהַקִּשֻּׁרִ֔ים –மற்றும்–அந்த–கட்டுகளை וּבָתֵּ֥י –மற்றும்–வீடுகளை– הַנֶּ֖פֶשׁ –அந்த–ஆத்துமாவின் וְהַלְּחָשִֽׁים׃ –மற்றும்–அந்த–தாயத்துகளை
தலை அணிகலன்களையும், பாதசரங்களையும், மார்க்கச்சைகளையும், சுகந்தபரணிகளையும்,
21 הַטַּבָּע֖וֹת –அந்த–மோதிரங்களை וְנִזְמֵ֥י –மற்றும்–மூக்கு–நகைகளை הָאָֽף׃ –அந்த–மூக்கின்
தாயித்துகளையும், மோதிரங்களையும், மூக்குத்திகளையும்,
22 הַמַּֽחֲלָצוֹת֙ –அந்த–மாற்று–ஆடைகளை וְהַמַּ֣עֲטָפ֔וֹת –மற்றும்–அந்த–போர்வைகளை וְהַמִּטְפָּח֖וֹת –மற்றும்–அந்த–தலைப்பாகைகளை וְהָחֲרִיטִֽים׃ –மற்றும்–அந்த–பைகளை
விநோத உடைகளையும், சால்வைகளையும், போர்வைகளையும், குப்பிகளையும்,
23 וְהַגִּלְיֹנִים֙ –மற்றும்–அந்த–கண்ணாடிகளை וְהַסְּדִינִ֔ים –மற்றும்–அந்த–மெல்லிய–துணிகளை וְהַצְּנִיפ֖וֹת –மற்றும்–அந்த–தலைப்பாகைகளை וְהָרְדִידִֽים׃ –மற்றும்–அந்த–மேலாடைகளை
கண்ணாடிகளையும், மெல்லிய ஆடைகளையும், குல்லாக்களையும், துப்பட்டாக்களையும் கழற்றிப்போடுவார்.
24 וְהָיָה֩ –மற்றும்–ஆகும் תַ֨חַת –தற்கு– בֹּ֜שֶׂם நறுமணத்திற்கு מַ֣ק அழுகல் יִֽהְיֶ֗ה இருக்கும் וְתַ֨חַת –மற்றும்–தற்கு– חֲגוֹרָ֤ה அரைக்கச்சுக்கு נִקְפָּה֙ கயிறு וְתַ֨חַת –மற்றும்–தற்கு– מַעֲשֶׂ֤ה வேலையின் מִקְשֶׁה֙ சுருள்முடிக்கு קָרְחָ֔ה வழுக்கை וְתַ֥חַת –மற்றும்–தற்கு– פְּתִיגִ֖יל விலையுயர்ந்த–ஆடைக்கு מַחֲגֹ֣רֶת கச்சையக்கட்டு שָׂ֑ק சாக்குத்துணியின் כִּי־ ஏனெனில்– תַ֖חַת –தற்கு– יֹֽפִי׃ அழகு
அப்பொழுது, சுகந்தத்திற்குப் பதிலாகத் துர்க்கந்தமும், கச்சைக்குப் பதிலாகக் கயிறும், மயிர்ச்சுருளுக்குப் பதிலாக மொட்டையும், ஆடம்பரமான உடைகளுக்குப் பதிலாக சணல்உடையும், அழகுக்குப் பதிலாகக் கருகிப்போகுதலும் இருக்கும்.
25 מְתַ֖יִךְ உன்–மனிதர்கள் בַּחֶ֣רֶב –பட்டயத்தால் יִפֹּ֑לוּ வீழுவார்கள் וּגְבוּרָתֵ֖ךְ –மற்றும்–உன்–வல்லமை בַּמִּלְחָמָֽה׃ –யுத்தத்தில்
உன் கணவன் பட்டயத்தினாலும், உன் பெலசாலிகள் யுத்தத்திலும் விழுவார்கள்.
26 וְאָנ֥וּ –மற்றும்–புலம்பும் וְאָבְל֖וּ –மற்றும்–துக்கப்படும் פְּתָחֶ֑יהָ அதின்–வாசல்கள் וְנִקָּ֖תָה –மற்றும்–காலியான לָאָ֥רֶץ தரையில் תֵּשֵֽׁב׃ உட்காரும்
அவளுடைய வாசல்கள் துக்கித்துப் புலம்பும்; அவள் வெறுமையாக்கப்பட்டுத் தரையிலே உட்காருவாள் என்கிறார்.