1 מַשָּׂ֖א –சுமை צֹ֑ר –தீரின் הֵילִ֣ילוּ ׀ அலறுங்கள் אֳנִיּ֣וֹת கப்பல்களே תַּרְשִׁ֗ישׁ தர்ஷீசின் כִּֽי־ என்ன– שֻׁדַּ֤ד அழிக்கப்பட்டது מִבַּ֙יִת֙ –வீட்டிலிருந்து מִבּ֔וֹא –வருதலிலிருந்து מֵאֶ֥רֶץ –நிலத்திலிருந்து כִּתִּ֖ים கித்தீமின் נִגְלָה־ வெளிப்படுத்தப்பட்டது– לָֽמוֹ׃ –அவர்களுக்கு
தீருவைக்குறித்த செய்தி. தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; அது வீடு இல்லாதபடிக்கும், அதில் வருவார் இல்லாதபடிக்கும் பாழாக்கப்பட்டது; இந்தச் செய்தி கித்தீம் தேசத்திலிருந்து அவர்களுக்குத் தெரிவிக்கப்படுகிறது.
2 דֹּ֖מּוּ மூகமாயிருங்கள் יֹ֣שְׁבֵי குடிகளே אִ֑י தீவின் סֹחֵ֥ר வணிகன் צִיד֛וֹן சீதோனின் עֹבֵ֥ר கடக்கிறவன் יָ֖ם கடலை מִלְאֽוּךְ׃ நிறைத்தார்கள்–உன்னை
தீவுக்குடிகளே, மவுனமாயிருங்கள்; சீதோனின் வியாபாரிகள் கடலிலே பயணம்செய்து உன்னை நிரப்பினார்கள்.
3 וּבְמַ֤יִם –மற்றும்–தண்ணீர்களில் רַבִּים֙ பெரிய זֶ֣רַע விதை שִׁחֹ֔ר சீகோரின் קְצִ֥יר அறுவடை יְא֖וֹר நீலத்தின் תְּבֽוּאָתָ֑הּ அவள்–வருமானம் וַתְּהִ֖י –மற்றும்–ஆனது סְחַ֥ר வணிகம் גּוֹיִֽם׃ இனங்களின்
சீகோர் நதியின் மிகுந்த நீர்ப்பாய்ச்சல்களால் விளையும் பயிர்வகைகளும், ஆற்றங்கரையின் அறுப்பும் அதின் வருமானமாயிருந்தது; அது தேசங்களின் சந்தையாயிருந்தது.
4 בּ֣וֹשִׁי வெட்கப்படு צִיד֔וֹן சீதோனே כִּֽי־ என்ன– אָמַ֣ר சொன்னது יָ֔ם கடல் מָע֥וֹז கோட்டை הַיָּ֖ם –கடலின் לֵאמֹ֑ר –சொல்லி לֹֽא־ இல்லை– חַ֣לְתִּי –பிரசவம்–பட்டேன் וְלֹֽא־ –மற்றும்–இல்லை– יָלַ֗דְתִּי –பெற்றேன் וְלֹ֥א –மற்றும்–இல்லை גִדַּ֛לְתִּי வளர்த்தினேன் בַּחוּרִ֖ים இளைஞர்களை רוֹמַ֥מְתִּי உயர்த்தினேன் בְתוּלֽוֹת׃ கன்னியர்களை
சீதோனே, வெட்கப்படு; நான் இனிக் கர்ப்பவேதனைப்படுகிறதும் இல்லை; பெற்றெடுப்பதும் இல்லை; இளைஞர்களை வளர்க்கிறதும் இல்லை; கன்னிப்பெண்களை ஆதரிக்கிறதும் இல்லை என்று சமுத்திரக் கோட்டையான கடல்துறை சொல்கிறது.
5 כַּֽאֲשֶׁר־ –போது– שֵׁ֖מַע கேள்வி לְמִצְרָ֑יִם –எகிப்திற்கு יָחִ֖ילוּ வேதனைப்படுவார்கள் כְּשֵׁ֥מַע –கேள்வியில் צֹֽר׃ தீரின்
எகிப்தின் செய்தி கேட்கப்பட்டதினால் நோய் உண்டானதுபோல, தீருவின் செய்தி கேட்கப்படுவதினாலும் நோய் உண்டாகும்.
6 עִבְר֖וּ கடந்து–போங்கள் תַּרְשִׁ֑ישָׁה தர்ஷீசுக்கு הֵילִ֖ילוּ அலறுங்கள் יֹ֥שְׁבֵי குடிகளே אִֽי׃ தீவின்
கடற்கரைக் குடிமக்களே, நீங்கள் தர்ஷீஸ்வரை புறப்பட்டுப்போய் அலறுங்கள்.
7 הֲזֹ֥את இதுவா לָכֶ֖ם –உங்களுக்கு עַלִּיזָ֑ה களிப்பானது מִֽימֵי־ –நாட்களிலிருந்து– קֶ֤דֶם –பண்டைய קַדְמָתָהּ֙ அவள்–தொன்மை יֹבִל֣וּהָ கொண்டு–சென்றார்கள்–அவளை רַגְלֶ֔יהָ அவள்–கால்கள் מֵֽרָח֖וֹק –தொலைவில் לָגֽוּר׃ –தங்க
ஆரம்பநாட்கள்முதல் நிலைபெற்று களிகூர்ந்திருந்த உங்கள் பட்டணம் இதுதானா? தூரதேசம்போய் வசிக்கிறதற்கு அவள் கால்களே அவளைத் தூரமாகக் கொண்டுபோகும்.
8 מִ֚י யார் יָעַ֣ץ திட்டமிட்டார் זֹ֔את இதை עַל־ –மேல்– צֹ֖ר –தீரின் הַמַּֽעֲטִירָ֑ה –கிரீடம்–சூட்டுகிறவள் אֲשֶׁ֤ר யாரின் סֹחֲרֶ֙יה֙ அவள்–வணிகர்கள் שָׂרִ֔ים பிரபுக்கள் כִּנְעָנֶ֖יהָ அவள்–கனானியர்கள் נִכְבַּדֵּי־ மதிக்கப்பட்டவர்கள்– אָֽרֶץ׃ –பூமியின்
கிரீடம் அணிவிக்கும் தீருவுக்கு விரோதமாக இதை யோசித்துத் தீர்மானித்தவர் யார்? அதின் வியாபாரிகள் பிரபுக்களும், அதின் வியாபாரிகள் பூமியின் கனவான்களுமாமே.
9 יְהוָ֥ה யெகோவா צְבָא֖וֹת சேனைகளின் יְעָצָ֑הּ திட்டமிட்டார்–அதை לְחַלֵּל֙ –அசுத்தப்படுத்த גְּא֣וֹן பெருமையை כָּל־ எல்லா– צְבִ֔י –அலங்காரத்தின் לְהָקֵ֖ל –அற்பமாக்க כָּל־ எல்லா– נִכְבַּדֵּי־ மதிக்கப்பட்டவர்களை– אָֽרֶץ׃ –பூமியின்
சர்வ சிங்காரத்தின் மேன்மையைக் குலைக்கவும், பூமியின் கனவான்கள் அனைவரையும் கனவீனப்படுத்தவும், சேனைகளின் யெகோவாவே இதை யோசித்துத் தீர்மானித்தார்.
10 עִבְרִ֥י கடந்து–போ אַרְצֵ֖ךְ உன்–நிலத்தை כַּיְאֹ֑ר –நீலத்தைப்போல בַּת־ மகளே– תַּרְשִׁ֕ישׁ –தர்ஷீசின் אֵ֖ין இல்லை מֵ֥זַח கச்சை עֽוֹד׃ இனி
தர்ஷீஸின் மகளே, நதியைப்போல நீ உன் தேசத்தில் பாய்ந்துபோ, உனக்கு அணையில்லை.
11 יָדוֹ֙ தன்–கையை נָטָ֣ה நீட்டினார் עַל־ –மேல்– הַיָּ֔ם –கடலின் הִרְגִּ֖יז நடுக்கினார் מַמְלָכ֑וֹת இராஜ்யங்களை יְהוָה֙ யெகோவா צִוָּ֣ה கட்டளையிட்டார் אֶל־ –நோக்கி– כְּנַ֔עַן –கனானை לַשְׁמִ֖ד –அழிக்க מָעֻזְנֶֽיהָ׃ அவள்–கோட்டைகளை
யெகோவா தமது கையைச் சமுத்திரத்தின்மேல் நீட்டி, இராஜ்யங்களைக் குலுங்கச்செய்தார்; கானானின் அரண்களை அழிக்க அவர் அதற்கு விரோதமாகக் கட்டளைகொடுத்து:
12 וַיֹּ֕אמֶר –மற்றும்–சொன்னார் לֹֽא־ இல்லை– תוֹסִ֥יפִי –தொடருவாய் ע֖וֹד இனி לַעְל֑וֹז –களிப்பட הַֽמְעֻשָּׁקָ֞ה –உருக்கப்பட்ட בְּתוּלַ֣ת கன்னியே בַּת־ மகளே– צִיד֗וֹן –சீதோனின் [כתיים] — (כִּתִּים֙) கித்தீமுக்கு ק֣וּמִי எழுந்திடு עֲבֹ֔רִי கடந்து–போ גַּם־ –அங்கேயும்– שָׁ֖ם –அங்கே לֹא־ இல்லை– יָנ֥וּחַֽ –இளைப்பாறு לָֽךְ׃ –உனக்கு
ஒடுக்கப்பட்ட கன்னியாகிய மகளாகிய சீதோனே, இனிக் களிகூர்ந்துகொண்டிக்கமாட்டாய்; எழுந்து கித்தீமுக்குப் புறப்பட்டுப்போ, அங்கும் உனக்கு இளைப்பாறுதல் இல்லையென்றார்.
13 הֵ֣ן ׀ இதோ אֶ֣רֶץ நிலம் כַּשְׂדִּ֗ים கல்தேயரின் זֶ֤ה இது הָעָם֙ –மக்கள் לֹ֣א இல்லை הָיָ֔ה இருந்தது אַשּׁ֖וּר அசீரியா יְסָדָ֣הּ நிறுவினார்–அதை לְצִיִּ֑ים –வனவிலங்குகளுக்கு הֵקִ֣ימוּ எழுப்பினார்கள் [בחיניו] — (בַחוּנָ֗יו) அவன்–காவல்–கோபுரங்களை עֹרְרוּ֙ நிறுத்தினார்கள் אַרְמְנוֹתֶ֔יהָ அவள்–அரண்மனைகளை שָׂמָ֖הּ அமைத்தார்–அதை לְמַפֵּלָֽה׃ –இடிபாடாக
கல்தேயருடைய தேசத்தைப் பார்; அந்த மக்கள் முன்னிருந்ததில்லை; அசீரியன் வனாந்திரத்தாருக்காக அதை அஸ்திபாரப்படுத்தினான்; அவர்கள் அதின் கோபுரங்களை உண்டாக்கி, அதின் அரண்மனைகளைக் கட்டினார்கள்; அவர் அதை அழிவுக்கென்று நியமித்தார்.
14 הֵילִ֖ילוּ அலறுங்கள் אֳנִיּ֣וֹת கப்பல்களே תַּרְשִׁ֑ישׁ தர்ஷீசின் כִּ֥י ஏனெனில் שֻׁדַּ֖ד அழிக்கப்பட்டது מָעֻזְּכֶֽן׃ உங்கள்–கோட்டை ס —
தர்ஷீஸ் கப்பல்களே, அலறுங்கள்; உங்கள் அரண் பாழாக்கப்பட்டது.
15 וְהָיָה֙ –மற்றும்–ஆகும் בַּיּ֣וֹם –நாளில் הַה֔וּא –அந்த וְנִשְׁכַּ֤חַת –மற்றும்–மறக்கப்படும் צֹר֙ தீர் שִׁבְעִ֣ים எழுபது שָׁנָ֔ה வருடங்கள் כִּימֵ֖י –நாட்களைப்போல מֶ֣לֶךְ அரசனின் אֶחָ֑ד ஒரு מִקֵּ֞ץ –முடிவில் שִׁבְעִ֤ים எழுபது שָׁנָה֙ வருடங்கள் יִהְיֶ֣ה ஆகும் לְצֹ֔ר –தீருக்கு כְּשִׁירַ֖ת –பாட்டைப்போல הַזּוֹנָֽה׃ –விபசாரியின்
அக்காலத்திலே தீரு, ஒரு ராஜாவுடைய நாட்களின்படி, எழுபது வருடங்கள் மறக்கப்பட்டிருக்கும்; எழுபது வருடங்களின் முடிவிலே தீருவுக்குச் சம்பவிப்பது வேசியின் பாடலுக்குச் சமானமாயிருக்கும்.
16 קְחִ֥י எடு כִנּ֛וֹר கின்னரை סֹ֥בִּי சுற்று עִ֖יר நகரமே זוֹנָ֣ה விபசாரியே נִשְׁכָּחָ֑ה மறக்கப்பட்ட הֵיטִ֤יבִי நன்றாக–வாசி נַגֵּן֙ இசையை הַרְבִּי־ பெருக்கு– שִׁ֔יר –பாட்டை לְמַ֖עַן –நிமித்தமாக תִּזָּכֵֽרִי׃ நீ–நினைவுக்கப்படுவாய்
மறக்கப்பட்ட வேசியே, நீ வீணையை எடுத்து நகரத்தைச் சுற்றித்திரி; நீ நினைக்கப்படும்படி அதை இனிதாக வாசித்துப் பல பாட்டுகளைப் பாடு.
17 וְהָיָ֞ה –மற்றும்–ஆகும் מִקֵּ֣ץ ׀ –முடிவில் שִׁבְעִ֣ים எழுபது שָׁנָ֗ה வருடங்கள் יִפְקֹ֤ד விசாரிப்பார் יְהוָה֙ யெகோவா אֶת־ –ஐ– צֹ֔ר –தீரை וְשָׁבָ֖ה –மற்றும்–திரும்புவாள் לְאֶתְנַנָּ֑ה –அவள்–கூலிக்கு וְזָֽנְתָ֛ה –மற்றும்–விபசாரம்–செய்வாள் אֶת־ –ஐ– כָּל־ எல்லா– מַמְלְכ֥וֹת இராஜ்யங்களை הָאָ֖רֶץ –பூமியின் עַל־ –மேல்– פְּנֵ֥י –முகத்தின் הָאֲדָמָֽה׃ –நிலத்தின்
எழுபது வருடங்களின் முடிவிலே யெகோவா வந்து தீருவைச் சந்திப்பார்; அப்பொழுது அது தன் லாபத்திற்கு திரும்பிவந்து, பூமியிலுள்ள அநேக தேசங்களுடனும் வேசித்தனம்செய்யும்.
18 וְהָיָ֨ה –மற்றும்–ஆகும் סַחְרָ֜הּ அவள்–வணிகம் וְאֶתְנַנָּ֗הּ –மற்றும்–அவள்–கூலி קֹ֚דֶשׁ பரிசுத்தம் לַֽיהוָ֔ה –யெகோவாவுக்கு לֹ֥א இல்லை יֵֽאָצֵ֖ר –சேமிக்கப்படும் וְלֹ֣א –மற்றும்–இல்லை יֵֽחָסֵ֑ן –பத்திரப்படும் כִּ֣י ஏனெனில் לַיֹּשְׁבִ֞ים –குடிகளுக்கு לִפְנֵ֤י –முன்னிலையில் יְהוָה֙ யெகோவாவின் יִֽהְיֶ֣ה ஆகும் סַחְרָ֔הּ அவள்–வணிகம் לֶאֱכֹ֥ל –சாப்பிட לְשָׂבְעָ֖ה –திருப்தியாக וְלִמְכַסֶּ֥ה –மற்றும்–ஆடைக்கு עָתִֽיק׃ பண்டையான פ —
அதின் வியாபாரமும், அதின் லாபமும் யெகோவாவுக்குப் பரிசுத்தமாக்கப்படும்; அது பொக்கிஷமாகச் சேர்க்கப்படுவதும் இல்லை; பூட்டி வைக்கப்படுவதும் இல்லை; யெகோவாவுடைய சமுகத்தில் வாசமாயிருக்கிறவர்கள் திருப்தியாகச் சாப்பிடவும் நல்ல உடைகளை அணியவும் அதின் வியாபாரம் அவர்களைச் சேரும்.