1 Καὶ –மற்றும் ἀναστὰν எழுந்து ἅπαν முழுவதுமான τὸ –அந்த πλῆθος கூட்டம் αὐτῶν, அவர்களுடைய, ἤγαγον கொண்டுசென்றனர் αὐτὸν அவரை ἐπὶ –நோக்கி τὸν –அந்த Πιλᾶτον. பிலாத்துவிடம்.
அவர்களுடைய கூட்டத்தாரெல்லோரும் எழுந்திருந்து, அவரைப் பிலாத்துவினிடத்திற்குக் கொண்டுபோய்:
2 ἤρξαντο தொடங்கினர் δὲ –இப்போது κατηγορεῖν குற்றஞ்சாட்ட αὐτοῦ, அவர்மீது, λέγοντες, சொல்லி, Τοῦτον இவனை εὕραμεν கண்டோம் διαστρέφοντα வழிதிருப்புகிறவனாக τὸ –அந்த ἔθνος தேசத்தை ἡμῶν, நம்முடைய, καὶ –மற்றும் κωλύοντα தடுக்கிறவனாக φόρους வரிகளை Καίσαρι கைசருக்கு διδόναι, கொடுக்க, καὶ –மற்றும் λέγοντα சொல்கிறவனாக ἑαυτὸν தன்னை Χριστὸν கிறிஸ்து βασιλέα ராஜா εἶναι. என்று.
இவன் தன்னைக் கிறிஸ்து என்னப்பட்ட ராஜாவென்றும், ராயருக்கு வரிகொடுக்க வேண்டியதில்லையென்றும் சொல்லி, மக்களைக் கலகப்படுத்தக் கண்டோம் என்று அவர்மேல் குற்றஞ்சுமத்தத் தொடங்கினார்கள்.
3 ὁ –அந்த δὲ –இப்போது Πιλᾶτος பிலாத்து ἠρώτησεν கேட்டான் αὐτὸν, அவரிடம், λέγων, சொல்லி, Σὺ நீ εἶ இருக்கிறாயா ὁ –அந்த Βασιλεὺς ராஜா τῶν –(கொண்ட) Ἰουδαίων? யூதர்களுடைய? ὁ –அவர் δὲ –இப்போது ἀποκριθεὶς பதிலளித்து αὐτῷ, அவனுக்கு, ἔφη, சொன்னார், Σὺ நீ λέγεις. சொல்கிறாய்.
பிலாத்து அவரைப் பார்த்து: நீ யூதர்களுடைய ராஜாவா என்று கேட்டான். அவர் அவனுக்கு மறுமொழியாக; நீர் சொல்லுகிறபடிதான் என்றார்.
4 ὁ –அந்த δὲ –இப்போது Πιλᾶτος பிலாத்து εἶπεν சொன்னான் πρὸς –நோக்கி τοὺς –அந்த ἀρχιερεῖς பிரதான–ஆசாரியர்களிடம் καὶ –மற்றும் τοὺς –அந்த ὄχλους, கூட்டங்களிடம், Οὐδὲν ஒன்றும் εὑρίσκω காண்கிறேன்–இல்லை αἴτιον குற்றம் ἐν –இல் τῷ –இந்த ἀνθρώπῳ மனிதனிடம் τούτῳ. இதில்.
அப்பொழுது பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் மக்களையும் பார்த்து: இந்த மனிதனிடத்தில் நான் ஒரு குற்றத்தையும் காணவில்லை என்றான்.
5 οἱ –அவர்கள் δὲ –இப்போது ἐπίσχυον, வலியுறுத்தினர், λέγοντες, சொல்லி, ὅτι –என்று Ἀνασείει கலக்குகிறான் τὸν –அந்த λαὸν, ஜனங்களை, διδάσκων போதிக்கிறவனாக καθ’ –முழுவதும் ὅλης எல்லா τῆς –அந்த Ἰουδαίας, யூதேயாவிலும், καὶ –மற்றும் ἀρξάμενος தொடங்கி ἀπὸ –இலிருந்து τῆς –அந்த Γαλιλαίας கலிலேயாவிலிருந்து ἕως –வரை ὧδε. இங்கே.
அதற்கு அவர்கள்: இவன் கலிலேயா நாடுதொடங்கி இந்த இடம்வரைக்கும் யூதேயா தேசமெங்கும் உபதேசம் செய்து, மக்களைக் கலகப்படுத்துகிறான் என்று வைராக்கியத்தோடு சொன்னார்கள்.
6 Πιλᾶτος பிலாத்து δὲ –இப்போது ἀκούσας, கேட்டு, ἐπηρώτησεν கேட்டான் εἰ –என்று ὁ –அந்த ἄνθρωπος மனிதன் Γαλιλαῖός கலிலேயனா ἐστιν; இருக்கிறான்;
கலிலேயா என்பதைப் பிலாத்து கேட்டபொழுது, இந்த மனிதன் கலிலேயனா என்று விசாரித்து,
7 καὶ –மற்றும் ἐπιγνοὺς அறிந்துகொண்டு ὅτι –என்று ἐκ –இலிருந்து τῆς –அந்த ἐξουσίας அதிகாரத்தின் Ἡρῴδου ஏரோதுவின் ἐστὶν, இருக்கிறான், ἀνέπεμψεν அனுப்பினான் αὐτὸν அவரை πρὸς –நோக்கி Ἡρῴδην, ஏரோதுவிடம், ὄντα இருக்கிற καὶ –மேலும் αὐτὸν அவனும் ἐν –இல் Ἱεροσολύμοις எருசலேமில் ἐν –இல் ταύταις அந்த ταῖς –அந்த ἡμέραις. நாட்களில்.
அவர் ஏரோதின் அதிகாரத்திற்குள்ளானவர் என்று அறிந்து, அந்த நாட்களிலே எருசலேமிலே வந்திருந்த ஏரோதுவினிடத்திற்கு அவரை அனுப்பினான்.
8 ὁ –அந்த δὲ –இப்போது Ἡρῴδης, ஏரோது, ἰδὼν கண்டு τὸν –அந்த Ἰησοῦν, இயேசுவை, ἐχάρη மிகவும்–சந்தோஷப்பட்டான் λίαν; மிகவும்; ἦν இருந்தான் γὰρ –ஏனெனில் ἐξ –இலிருந்து ἱκανῶν நீண்ட χρόνων காலமாக θέλων விரும்பி ἰδεῖν காண αὐτὸν, அவரை, διὰ –காரணமாக τὸ –அந்த ἀκούειν கேள்விப்படுவது περὶ –குறித்து αὐτοῦ; அவரைக்குறித்து; καὶ –மற்றும் ἤλπιζέν நம்பினான் τι ஏதாவது σημεῖον அடையாளம் ἰδεῖν காண ὑπ’ –மூலமாக αὐτοῦ அவரிடமிருந்து γινόμενον. நிகழ்வதை.
ஏரோது இயேசுவைக்குறித்து அநேக காரியங்களைக் கேள்விப்பட்டிருந்ததினாலும், அவரால் செய்யப்படும் அடையாளத்தைப் பார்க்கவேண்டுமென்று விரும்பியிருந்ததினாலும், அவரைக் காணும்படி வெகுநாளாக ஆசைகொண்டிருந்தான். அந்தப்படி அவரைப் பார்த்தபோது, மிகவும் சந்தோஷப்பட்டு,
9 ἐπηρώτα கேட்டான் δὲ –இப்போது αὐτὸν அவரிடம் ἐν –இல் λόγοις வார்த்தைகள் ἱκανοῖς; அநேகமாக; αὐτὸς அவர் δὲ –ஆனால் οὐδὲν ஒன்றும் ἀπεκρίνατο பதிலளிக்கவில்லை αὐτῷ. அவனுக்கு.
அநேக காரியங்களைக்குறித்து, அவரிடத்தில் கேள்வி கேட்டான். அவர் மறுமொழியாக அவனுக்கு ஒன்றும் சொல்லவில்லை.
10 εἱστήκεισαν நின்றிருந்தனர் δὲ –இப்போது οἱ –அந்த ἀρχιερεῖς பிரதான–ஆசாரியர்கள் καὶ –மற்றும் οἱ –அந்த γραμματεῖς, வேதபாரகர்கள், εὐτόνως கடுமையாக κατηγοροῦντες குற்றஞ்சாட்டுகிறவர்களாக αὐτοῦ. அவர்மீது.
பிரதான ஆசாரியர்களும் வேதபண்டிதர்களும் அவர்மேல் பிடிவாதமாகக் குற்றஞ்சுமத்திக்கொண்டே நின்றார்கள்.
11 ἐξουθενήσας அவமதித்து δὲ –இப்போது αὐτὸν, அவரை, ‹καὶ› –மேலும் ὁ –அந்த Ἡρῴδης ஏரோது σὺν –உடன் τοῖς –அந்த στρατεύμασιν போர்வீரர்களுடன் αὐτοῦ, அவனுடைய, καὶ –மற்றும் ἐμπαίξας, பரிகசித்து, περιβαλὼν உடுத்தி ἐσθῆτα வஸ்திரம் λαμπρὰν, பிரகாசமான, ἀνέπεμψεν திருப்பியனுப்பினான் αὐτὸν அவரை τῷ –அந்த Πιλάτῳ. பிலாத்துவிடம்.
அப்பொழுது ஏரோது தன் போர் வீரர்களோடுகூட அவரை நிந்தித்து, கேலிசெய்து மினுக்கான ஆடையை அவருக்கு அணிந்து, அவரைத் திரும்பப் பிலாத்துவினிடத்திற்கு அனுப்பினான்.
12 ἐγένοντο ஆனார்கள் δὲ –இப்போது φίλοι நண்பர்கள் ὅ –அவர் τε –இருவரும் Ἡρῴδης ஏரோது καὶ –மற்றும் ὁ –அந்த Πιλᾶτος, பிலாத்து, ἐν –இல் αὐτῇ அதே τῇ –அந்த ἡμέρᾳ நாளில் μετ’ –ஒருவரோடு ἀλλήλων; ஒருவர்; προϋπῆρχον முன்பு–இருந்தனர் γὰρ –ஏனெனில் ἐν –இல் ἔχθρᾳ, பகையில், ὄντες இருந்து πρὸς –நோக்கி αὑτούς. தங்களுக்குள்.
முன்னே ஒருவருக்கொருவர் விரோதிகளாக இருந்த பிலாத்துவும் ஏரோதும் அன்றையதினம் நண்பர்களானார்கள்.
13 Πιλᾶτος பிலாத்து δὲ, –இப்போது, συνκαλεσάμενος ஒன்றாக–அழைத்து τοὺς –அந்த ἀρχιερεῖς, பிரதான–ஆசாரியர்களையும், καὶ –மற்றும் τοὺς –அந்த ἄρχοντας, அதிகாரிகளையும், καὶ –மற்றும் τὸν –அந்த λαὸν, ஜனங்களையும்,
பிலாத்து பிரதான ஆசாரியர்களையும் அதிகாரிகளையும் மக்களையும் கூடிவரச்செய்து,
14 εἶπεν சொன்னான் πρὸς –நோக்கி αὐτούς, அவர்களிடம், Προσηνέγκατέ கொண்டுவந்தீர்கள் μοι என்னிடம் τὸν –அந்த ἄνθρωπον மனிதனை τοῦτον, இந்த, ὡς –போல ἀποστρέφοντα வழிதிருப்புகிறவனாக τὸν –அந்த λαόν; ஜனங்களை; καὶ –மற்றும் ἰδοὺ, இதோ, ἐγὼ நான் ἐνώπιον முன்பாக ὑμῶν உங்களுடைய ἀνακρίνας, விசாரித்து, οὐθὲν ஒன்றும் εὗρον கண்டேன்–இல்லை ἐν –இல் τῷ –இந்த ἀνθρώπῳ மனிதனிடம் τούτῳ இந்த αἴτιον குற்றம் ὧν –(கொண்ட) κατηγορεῖτε குற்றஞ்சாட்டுகிறீர்கள் κατ’ –எதிராக αὐτοῦ. அவர்மீது.
அவர்களைப் பார்த்து: மக்களைக் கலகத்திற்குத் தூண்டிவிடுகிறவனாக இந்த மனிதனை என்னிடத்தில் கொண்டுவந்தீர்கள்; நான் உங்களுக்கு முன்பாக விசாரித்தபோது, இவன்மேல் நீங்கள் சாட்டுகிற குற்றங்களில் ஒன்றையும் நான் இவனிடத்தில் காணவில்லை.
15 ἀλλ’ –ஆனால் οὐδὲ –இல்லை Ἡρῴδης; ஏரோதும்; ἀνέπεμψεν திருப்பியனுப்பினான் γὰρ –ஏனெனில் αὐτὸν அவரை πρὸς –நோக்கி ἡμᾶς. நம்மிடம். καὶ –மற்றும் ἰδοὺ, இதோ, οὐδὲν ஒன்றும் ἄξιον தகுதியான θανάτου மரணத்திற்கு ἐστὶν இல்லை πεπραγμένον செய்யப்பட்டது αὐτῷ. அவரால்.
உங்களை ஏரோதினிடத்திற்கும் அனுப்பினேன்; அவரும் இவனிடத்தில் குற்றம் காணவில்லை; மரணத்திற்கு ஏதுவாக இவன் ஒன்றும் செய்யவில்லையே.
16 παιδεύσας தண்டித்து οὖν –ஆகையால் αὐτὸν, அவனை, ἀπολύσω. விடுவிப்பேன்.
எனவே இவனைத் தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
17 <Ἀνάγκην <அவசியம் δὲ –இப்போது εἴχεν இருந்தது ἀπολύειν விடுவிக்க αὐτοῖς அவர்களுக்கு κατὰ –ஒவ்வொரு ἑορτὴν பண்டிகையில் ἕνα>. ஒருவனை>.
பண்டிகைதோறும் அவர்களுக்கு ஒருவனை அவன் விடுதலையாக்குவது வழக்கமாக இருந்தபடியால் அப்படிச் சொன்னான்.
18 ἀνέκραγον கூக்குரலிட்டனர் δὲ –இப்போது παμπληθεὶ, எல்லோரும்–ஒன்றாக, λέγοντες, சொல்லி, Αἶρε எடுத்துக்கொள் τοῦτον, இவனை, ἀπόλυσον விடுதலைசெய் δὲ –ஆனால் ἡμῖν எங்களுக்கு τὸν –அந்த Βαραββᾶν! பரபாசை!
மக்களெல்லோரும் அதைக்கேட்டு: இவனை அகற்றும், பரபாசை எங்களுக்கு விடுதலையாக்கும் என்று சத்தமிட்டுக்கேட்டார்கள்.
19 ὅστις –அவன் ἦν இருந்தான் διὰ –காரணமாக στάσιν கலகம் τινὰ ஒரு γενομένην நடந்த ἐν –இல் τῇ –அந்த πόλει, நகரத்தில், καὶ –மற்றும் φόνον, கொலை, βληθεὶς போடப்பட்ட ἐν –இல் τῇ –அந்த φυλακῇ. சிறையில்.
அந்த பரபாஸ் என்பவன் நகரத்தில் நடந்த ஒரு கலவரத்தினிமித்தமும் கொலை குற்றத்தினிமித்தமும் காவலிலே வைக்கப்பட்டிருந்தான்.
20 πάλιν மறுபடியும் δὲ –இப்போது ὁ –அந்த Πιλᾶτος பிலாத்து προσεφώνησεν அழைத்தான் αὐτοῖς, அவர்களிடம், θέλων விரும்பி ἀπολῦσαι விடுவிக்க τὸν –அந்த Ἰησοῦν. இயேசுவை.
பிலாத்து இயேசுவை விடுதலையாக்க விரும்பி, மறுபடியும் அவர்களிடத்தில் பேசினான்.
21 οἱ –அவர்கள் δὲ –இப்போது ἐπεφώνουν, கூக்குரலிட்டனர், λέγοντες, சொல்லி, Σταύρου, சிலுவையில்–அறை, σταύρου சிலுவையில்–அறை αὐτόν. அவனை.
அவர்களோ: அவனைச் சிலுவையில் அறையும், சிலுவையில் அறையும் என்று கூச்சலிட்டார்கள்.
22 ὁ –அவர் δὲ –இப்போது τρίτον மூன்றாம்–முறை εἶπεν சொன்னான் πρὸς –நோக்கி αὐτούς, அவர்களிடம், Τί என்ன γὰρ –ஏனெனில் κακὸν தீமை ἐποίησεν செய்தான் οὗτος? இவன்? οὐδὲν ஒன்றும் αἴτιον குற்றம் θανάτου மரணத்திற்கு εὗρον கண்டேன்–இல்லை ἐν –இல் αὐτῷ. அவனிடம். παιδεύσας தண்டித்து οὖν –ஆகையால் αὐτὸν, அவனை, ἀπολύσω. விடுவிப்பேன்.
அவன் மூன்றாம்முறை அவர்களைப் பார்த்து: ஏன், இவன் என்ன குற்றம் செய்தான்? மரணத்திற்கு ஏதுவான குற்றம் ஒன்றும் இவனிடத்தில் நான் காணவில்லையே; ஆகவே, நான் இவனை தண்டித்து, விடுதலையாக்குவேன் என்றான்.
23 οἱ –அவர்கள் δὲ –இப்போது ἐπέκειντο வற்புறுத்தினர் φωναῖς சத்தங்களால் μεγάλαις, பெரிய, αἰτούμενοι கேட்டு αὐτὸν அவரை σταυρωθῆναι. சிலுவையிலறையப்பட. καὶ –மற்றும் κατίσχυον மேற்கொண்டன αἱ –அந்த φωναὶ சத்தங்கள் αὐτῶν, அவர்களுடைய, <καὶ –மற்றும் τῶν –(கொண்ட) ἀρχιερέων>. பிரதான–ஆசாரியர்களுடைய>.
அப்படியிருந்தும் அவரை சிலுவையில் அறையவேண்டுமென்று அவர்கள் உரத்த சத்தத்தோடு கேட்டுக்கொண்டேயிருந்தார்கள். அவர்களும் பிரதான ஆசாரியர்களும் இட்ட சத்தம் மேற்கொண்டது.
24 καὶ –மற்றும் Πιλᾶτος பிலாத்து ἐπέκρινεν தீர்ப்பளித்தான் γενέσθαι நிறைவேற τὸ –அந்த αἴτημα வேண்டுகோள் αὐτῶν. அவர்களுடைய.
அப்பொழுது அவர்கள் கேட்டுக்கொண்டபடியே ஆகட்டும் என்று பிலாத்து தீர்ப்புசெய்து,
25 ἀπέλυσεν விடுவித்தான் δὲ –இப்போது τὸν –அந்த διὰ –காரணமாக στάσιν கலகம் καὶ –மற்றும் φόνον கொலை βεβλημένον போடப்பட்ட εἰς –உள்ளே φυλακὴν, சிறையில், ὃν –அவனை ᾐτοῦντο; கேட்டிருந்தார்கள்; τὸν –அந்த δὲ –ஆனால் Ἰησοῦν இயேசுவை παρέδωκεν ஒப்புக்கொடுத்தான் τῷ –அந்த θελήματι விருப்பத்திற்கு αὐτῶν. அவர்களுடைய.
கலவரத்தினிமித்தமும் கொலைக் குற்றத்தினிமித்தமும் காவலில் போடப்பட்டிருந்த பரபாசை அவர்கள் கேட்டுக்கொண்டபடியே விடுதலையாக்கி, இயேசுவையோ அவர்கள் விருப்பத்திற்கு ஒப்புக்கொடுத்தான்.
26 Καὶ –மற்றும் ὡς –போது ἀπήγαγον கொண்டுசென்றனர் αὐτόν, அவரை, ἐπιλαβόμενοι பிடித்து Σίμωνά, சீமோனை, τινα ஒரு Κυρηναῖον, குரேனே–நகரத்தானை, ἐρχόμενον வருகிற ἀπ’ –இலிருந்து ἀγροῦ, வயலிலிருந்து, ἐπέθηκαν வைத்தனர் αὐτῷ அவன்மேல் τὸν –அந்த σταυρὸν, சிலுவையை, φέρειν சுமக்க ὄπισθεν பின்னால் τοῦ –(கொண்ட) Ἰησοῦ. இயேசுவின்.
அவர்கள் இயேசுவைக் கொண்டுபோகிறபோது, நாட்டிலிருந்து வருகிற சிரேனே ஊரானாகிய சீமோன் என்கிற ஒருவனைப் பிடித்து, சிலுவையை அவருக்குப் பின்னே சுமந்துகொண்டுவரும்படி அதை அவன்மேல் வைத்தார்கள்.
27 Ἠκολούθει பின்தொடர்ந்தது δὲ –இப்போது αὐτῷ அவருக்கு πολὺ பெரிய πλῆθος கூட்டம் τοῦ –(கொண்ட) λαοῦ, ஜனங்களின், καὶ –மற்றும் γυναικῶν, ஸ்திரீகளின், αἳ –அவர்கள் ἐκόπτοντο மார்பில்–அடித்துக்கொண்டிருந்தனர் καὶ –மற்றும் ἐθρήνουν புலம்பினர் αὐτόν. அவருக்காக.
திரள்கூட்டமான மக்களும் அவருக்காகப் கதறி அழுகிற பெண்களும் அவருக்குப் பின்னே சென்றார்கள்.
28 στραφεὶς திரும்பி δὲ –இப்போது πρὸς –நோக்கி αὐτὰς, அவர்களிடம், ‹ὁ› –அந்த Ἰησοῦς இயேசு εἶπεν, சொன்னார், Θυγατέρες குமாரத்திகளே Ἰερουσαλήμ, எருசலேமின், μὴ –வேண்டாம் κλαίετε அழுங்கள் ἐπ’ –மீது ἐμέ, என்னைக்குறித்து, πλὴν ஆனால் ἐφ’ –மீது ἑαυτὰς உங்களையே κλαίετε, அழுங்கள், καὶ –மற்றும் ἐπὶ –மீது τὰ –அந்த τέκνα பிள்ளைகளைக்குறித்து ὑμῶν. உங்களுடைய.
இயேசு அவர்கள் பக்கமாகத் திரும்பி: எருசலேமின் குமாரத்திகளே, நீங்கள் எனக்காக அழாமல், உங்களுக்காகவும் உங்களுடைய பிள்ளைகளுக்காகவும் அழுங்கள்.
29 ὅτι –என்று ἰδοὺ, இதோ, ἔρχονται வருகின்றன ἡμέραι நாட்கள் ἐν –இல் αἷς –அவற்றில் ἐροῦσιν, சொல்வார்கள், Μακάριαι பாக்கியவதிகள் αἱ –அந்த στεῖραι, மலடிகள், καὶ –மற்றும் αἱ –அந்த κοιλίαι கர்ப்பங்கள் αἳ –அவை οὐκ –இல்லை ἐγέννησαν, பெறவில்லை, καὶ –மற்றும் μαστοὶ மார்பகங்கள் οἳ –அவை οὐκ –இல்லை ἔθρεψαν. பாலூட்டவில்லை.
இதோ, மலடிகள் பாக்கியவதிகளென்றும், பிள்ளைபெறாத கர்ப்பங்களும் பால்கொடாத மார்பகங்களும் பாக்கியமுள்ளவைகளென்றும் சொல்லப்படும் நாட்கள் வரும்.
30 τότε அப்போது ἄρξονται தொடங்குவார்கள் λέγειν சொல்ல τοῖς –அந்த ὄρεσιν, மலைகளிடம், Πέσετε விழுங்கள் ἐφ’ –மீது ἡμᾶς; எங்கள்மேல்; καὶ –மற்றும் τοῖς –அந்த βουνοῖς, குன்றுகளிடம், Καλύψατε மூடுங்கள் ἡμᾶς: எங்களை:
அப்பொழுது மலைகளைப் பார்த்து: எங்களின்மேல் விழுங்களென்றும், குன்றுகளைப் பார்த்து: எங்களை மறைத்துக்கொள்ளுங்களென்றும் சொல்லத்தொடங்குவார்கள்.
31 ὅτι –ஏனெனில் εἰ –என்றால் ἐν –இல் ‹τῷ› –அந்த ὑγρῷ பச்சையான ξύλῳ, மரத்தில், ταῦτα இவைகளை ποιοῦσιν; செய்கிறார்கள்; ἐν –இல் τῷ –அந்த ξηρῷ, காய்ந்ததில், τί என்ன γένηται? ஆகும்?
பச்சைமரத்திற்கு இவைகளைச் செய்தால், பட்டமரத்திற்கு என்ன செய்யமாட்டார்கள்” என்றார்.
32 Ἤγοντο கொண்டுசெல்லப்பட்டனர் δὲ –இப்போது καὶ –மேலும் ἕτεροι வேறு κακοῦργοι குற்றவாளிகள் δύο, இருவர், σὺν –உடன் αὐτῷ அவருடன் ἀναιρεθῆναι. கொலைசெய்யப்பட.
குற்றவாளிகளாகிய வேறு இரண்டுபேரும் அவரோடுகூடக் கொலைசெய்யப்படுவதற்குக் கொண்டுபோகப்பட்டார்கள்.
33 Καὶ –மற்றும் ὅτε –போது ἦλθον வந்தனர் ἐπὶ –மீது τὸν –அந்த τόπον இடத்திற்கு τὸν –அந்த καλούμενον சொல்லப்படும் Κρανίον, கபாலம், ἐκεῖ அங்கே ἐσταύρωσαν சிலுவையிலறைந்தனர் αὐτὸν, அவரை, καὶ –மற்றும் τοὺς –அந்த κακούργους, குற்றவாளிகளையும், ὃν –ஒருவனை μὲν –உண்மையில் ἐκ –இலிருந்து δεξιῶν, வலப்புறத்தில், ὃν –ஒருவனை δὲ –இப்போது ἐξ –இலிருந்து ἀριστερῶν. இடப்புறத்தில்.
கபாலஸ்தலம் என்று சொல்லப்பட்ட இடத்தில் அவர்கள் சேர்ந்தபொழுது, அங்கே அவரையும், அவருடைய வலதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும், அவருடைய இடதுபக்கத்தில் ஒரு குற்றவாளியையும் சிலுவைகளில் அறைந்தார்கள்.
34 ὁ –அந்த δὲ –இப்போது Ἰησοῦς இயேசு ἔλεγεν, சொன்னார், Πάτερ, பிதாவே, ἄφες மன்னியும் αὐτοῖς, அவர்களை, οὐ –இல்லை γὰρ –ஏனெனில் οἴδασιν அறிகிறார்கள் τί என்ன ποιοῦσιν. செய்கிறார்கள். διαμεριζόμενοι பங்கிட்டுக்கொண்டு δὲ –இப்போது τὰ –அந்த ἱμάτια வஸ்திரங்களை αὐτοῦ, அவருடைய, ἔβαλον போட்டனர் κλήρους. சீட்டுகளை.
அப்பொழுது இயேசு: பிதாவே, இவர்களுக்கு மன்னியும், தாங்கள் செய்கிறது இன்னதென்று அறியாதிருக்கிறார்களே என்றார். அவருடைய ஆடைகளை அவர்கள் பங்கிட்டுச் சீட்டுப்போட்டார்கள்.
35 καὶ –மற்றும் εἱστήκει நின்றிருந்தனர் ὁ –அந்த λαὸς ஜனங்கள் θεωρῶν. பார்த்துக்கொண்டு. ἐξεμυκτήριζον ஏளனம்செய்தனர் δὲ –இப்போது καὶ –மேலும் οἱ –அந்த ἄρχοντες, அதிகாரிகள், λέγοντες, சொல்லி, Ἄλλους மற்றவர்களை ἔσωσεν, இரட்சித்தான், σωσάτω இரட்சிக்கட்டும் ἑαυτόν தன்னையே εἰ –என்றால் οὗτός இவன் ἐστιν இருக்கிறான் ὁ –அந்த Χριστὸς, கிறிஸ்து, τοῦ –(கொண்ட) Θεοῦ தேவனுடைய ὁ –அந்த ἐκλεκτός. தெரிந்துகொள்ளப்பட்டவர்.
மக்கள் நின்று பார்த்துக்கொண்டிருந்தார்கள். அவர்களோடு அதிகாரிகளும் அவரை ஏளனம்செய்து: இவன் மற்றவர்களை இரட்சித்தான், இவன் தேவனால் தெரிந்துகொள்ளப்பட்ட கிறிஸ்துவானால், தன்னைத்தானே இரட்சித்துக்கொள்ளட்டும் என்றார்கள்.
36 ἐνέπαιξαν பரிகசித்தனர் δὲ –இப்போது αὐτῷ அவரை καὶ –மேலும் οἱ –அந்த στρατιῶται, போர்வீரர்கள், προσερχόμενοι, வந்து, ὄξος காடி προσφέροντες கொண்டுவந்து αὐτῷ, அவருக்கு,
போர்வீரர்களும் அவரிடத்தில் சேர்ந்து, அவருக்குக் காடியைக் கொடுத்து:
37 καὶ –மற்றும் λέγοντες, சொல்லி, Εἰ –என்றால் σὺ நீ εἶ இருக்கிறாய் ὁ –அந்த Βασιλεὺς ராஜா τῶν –(கொண்ட) Ἰουδαίων, யூதர்களுடைய, σῶσον இரட்சி σεαυτόν! உன்னையே!
நீ யூதர்களின் ராஜாவானால், உன்னை இரட்சித்துக்கொள் என்று அவரைக் கேலிசெய்தார்கள்.
38 ἦν இருந்தது δὲ –இப்போது καὶ –மேலும் ἐπιγραφὴ மேலெழுத்து ἐπ’ –மீது αὐτῷ, அவர்மீது, Ὁ –அந்த ΒΑΣΙΛΕΥΣ ராஜா ΤΩΝ –(கொண்ட) ΙΟΥΔΑΙΩΝ யூதர்களுடைய οὗτος, இவன், {γράμμασιν {எழுத்துக்களில் Ἑλληνικοῖς கிரேக்கத்திலும் καὶ –மற்றும் Ρωμαϊκοῖς ரோமானியத்திலும் καὶ –மற்றும் Ἑβραϊκοῖς}. எபிரெயத்திலும்}.
இவன் யூதர்களுடைய ராஜா என்று, கிரேக்கு, லத்தீன், எபிரெயு எழுத்துக்களில் எழுதி, அவருக்கு மேலாக வைக்கப்பட்டது.
39 Εἷς ஒருவன் δὲ –இப்போது τῶν –(கொண்ட) κρεμασθέντων தூக்கிலிடப்பட்ட κακούργων, குற்றவாளிகளில், ἐβλασφήμει தூஷித்தான் αὐτόν, அவரை, ‹λέγων›, –சொல்லி, Οὐχὶ அல்லவா σὺ நீ εἶ இருக்கிறாய் ὁ –அந்த Χριστός? கிறிஸ்து? σῶσον இரட்சி σεαυτὸν உன்னையே καὶ –மற்றும் ἡμᾶς! எங்களையும்!
அன்றியும் சிலுவையில் அறையப்பட்டிருந்த குற்றவாளிகளில் ஒருவன்: நீ கிறிஸ்துவானால் உன்னையும் எங்களையும் இரட்சித்துக்கொள் என்று அவரை இழிவாகப் பேசினான்.
40 ἀποκριθεὶς பதிலளித்து δὲ, –இப்போது, ὁ –அந்த ἕτερος மற்றவன் ἐπιτιμῶν கடிந்துகொண்டு αὐτῷ, அவனை, ἔφη, சொன்னான், Οὐδὲ –இல்லையா φοβῇ பயப்படுகிறாய் σὺ நீ τὸν –அந்த Θεόν, தேவனுக்கு, ὅτι –என்று ἐν –இல் τῷ –அந்த αὐτῷ அதே κρίματι தீர்ப்பில் εἶ? இருக்கிறாய்?
மற்றவன் அவனைப் பார்த்து: நீ இந்த தண்டனைக்குட்பட்டவனாக இருந்தும் தேவனுக்குப் பயப்படுகிறதில்லையா?
41 καὶ –மற்றும் ἡμεῖς நாம் μὲν –உண்மையில் δικαίως, நியாயமாக, ἄξια தகுதியானதை γὰρ –ஏனெனில் ὧν –(கொண்ட) ἐπράξαμεν செய்தோம் ἀπολαμβάνομεν; பெறுகிறோம்; οὗτος இவர் δὲ –ஆனால் οὐδὲν ஒன்றும் ἄτοπον தகாததை ἔπραξεν. செய்யவில்லை.
நாமோ நியாயப்படி தண்டிக்கப்படுகிறோம்; நாம் செய்தவைகளுக்குத் தக்க பலனை அடைகிறோம்; இவரோ தகாததொன்றையும் செய்யவில்லையே என்று அவனைக் கடிந்துகொண்டு,
42 καὶ –மற்றும் ἔλεγεν சொன்னான் Ἰησοῦ, இயேசுவே, μνήσθητί நினைத்துக்கொள்ளும் μου, என்னை, ὅταν –போது ἔλθῃς வரும்போது εἰς –உள்ளே τὴν –அந்த βασιλείαν ராஜ்யத்தில் σου! உம்முடைய!
இயேசுவைப் பார்த்து: ஆண்டவரே, நீர் உம்முடைய ராஜ்யத்தில் வரும்போது அடியேனை நினைத்தருளும் என்றான்.
43 καὶ –மற்றும் εἶπεν சொன்னார் αὐτῷ, அவனுக்கு, Ἀμήν ஆமென் σοι, உனக்கு, λέγω, சொல்கிறேன், σήμερον இன்றே μετ’ –உடன் ἐμοῦ என்னுடன் ἔσῃ இருப்பாய் ἐν –இல் τῷ –அந்த Παραδείσῳ. பரதீசில்.
இயேசு அவனைப் பார்த்து: இன்றைக்கு நீ என்னுடனேகூடப் பரதீசிலிருப்பாய் என்று உண்மையாகவே உனக்குச் சொல்லுகிறேன் என்றார்.
44 Καὶ –மற்றும் ἦν இருந்தது ἤδη ஏற்கனவே ὡσεὶ –சுமாராக ὥρα மணி ἕκτη, ஆறாம், καὶ –மற்றும் σκότος இருள் ἐγένετο உண்டாயிற்று ἐφ’ –மீது ὅλην முழு τὴν –அந்த γῆν பூமியின்மீது ἕως –வரை ὥρας மணி ἐνάτης. ஒன்பதாம்.
அப்பொழுது ஏறக்குறைய பகல் பன்னிரண்டு மணியாக இருந்தது; மூன்று மணிவரைக்கும் பூமியெங்கும் இருளுண்டானது.
45 τοῦ –(கொண்ட) ἡλίου சூரியன் ἐκλιπόντος, மறைந்து, ἐσχίσθη கிழிந்தது δὲ –இப்போது τὸ –அந்த καταπέτασμα திரைச்சீலை τοῦ –(கொண்ட) ναοῦ ஆலயத்தின் μέσον. நடுவாக.
சூரியன் இருளடைந்தது, தேவாலயத்தின் திரைச்சீலை நடுவில் இரண்டாகக் கிழிந்தது.
46 καὶ –மற்றும் φωνήσας சத்தமிட்டு φωνῇ சத்தமாக μεγάλῃ, பெரிய, ὁ –அந்த Ἰησοῦς இயேசு εἶπεν, சொன்னார், Πάτερ, பிதாவே, εἰς –உள்ளே χεῖράς கரங்களில் σου உம்முடைய παρατίθεμαι ஒப்புவிக்கிறேன் τὸ –அந்த πνεῦμά ஆவியை μου. என்னுடைய. τοῦτο இதை δὲ –இப்போது εἰπὼν, சொல்லி, ἐξέπνευσεν. உயிர்விட்டார்.
இயேசு: பிதாவே, உம்முடைய கைகளில் என் ஆவியை ஒப்புவிக்கிறேன் என்று மிகுந்த சத்தமிட்டுக் கூப்பிட்டுச் சொன்னார்; இப்படிச் சொல்லி, ஜீவனை விட்டார்.
47 ἰδὼν கண்டு δὲ –இப்போது ὁ –அந்த ἑκατοντάρχης நூற்றுக்கதிபதி τὸ –அந்த γενόμενον, நடந்ததை, ἐδόξαζεν மகிமைப்படுத்தினான் τὸν –அந்த Θεὸν, தேவனை, λέγων, சொல்லி, Ὄντως உண்மையாகவே ὁ –அந்த ἄνθρωπος மனிதன் οὗτος இவன் δίκαιος நீதிமான் ἦν. இருந்தான்.
நூற்றுக்கு அதிபதி சம்பவித்ததைக் கண்டு: மெய்யாகவே இந்த மனிதன் நீதிமானாக இருந்தான் என்று சொல்லி, தேவனை மகிமைப்படுத்தினான்.
48 καὶ –மற்றும் πάντες எல்லா οἱ –அந்த συμπαραγενόμενοι ஒன்றாக–வந்திருந்த ὄχλοι கூட்டங்கள் ἐπὶ –மீது τὴν –அந்த θεωρίαν காட்சிக்கு ταύτην, இந்த, θεωρήσαντες கண்டு τὰ –அந்த γενόμενα, நடந்தவைகளை, τύπτοντες மார்பில்–அடித்துக்கொண்டு τὰ –அந்த στήθη, மார்புகளை, ὑπέστρεφον. திரும்பினார்கள்.
இந்தக் காட்சியைப் பார்க்கும்படி கூடிவந்திருந்த மக்களெல்லோரும் சம்பவித்தவைகளைப் பார்த்தபொழுது, தங்களுடைய மார்பில் அடித்துக்கொண்டு திரும்பிப்போனார்கள்.
49 εἱστήκεισαν நின்றிருந்தனர் δὲ –இப்போது πάντες எல்லா οἱ –அந்த γνωστοὶ அறிந்தவர்கள் αὐτῷ, அவருக்கு, ἀπὸ –இலிருந்து μακρόθεν, தூரத்திலிருந்து, καὶ –மற்றும் γυναῖκες, ஸ்திரீகள், αἱ –அந்த συνακολουθοῦσαι பின்தொடர்ந்திருந்த αὐτῷ அவருடன் ἀπὸ –இலிருந்து τῆς –அந்த Γαλιλαίας, கலிலேயாவிலிருந்து, ὁρῶσαι கண்டுகொண்டிருந்தனர் ταῦτα. இவைகளை.
அவருக்கு அறிமுகமானவர்களெல்லோரும், கலிலேயாவிலிருந்து அவருக்குப் பின்னே சென்ற பெண்களும் தூரத்திலே நின்று இவைகளைப் பார்த்துக்கொண்டிருந்தார்கள்.
50 Καὶ –மற்றும் ἰδοὺ, இதோ, ἀνὴρ மனிதன் ὀνόματι பெயர்கொண்ட Ἰωσὴφ, யோசேப்பு, βουλευτὴς, ஆலோசனைக்காரன், ὑπάρχων இருக்கிற [καὶ] –மேலும் ἀνὴρ மனிதன் ἀγαθὸς நல்ல καὶ –மற்றும் δίκαιος, நீதியுள்ள,
யோசேப்பு என்னும் பெயர்கொண்ட ஒரு ஆலோசனைக்காரன் இருந்தான்; அவன் உத்தமனும் நீதிமானுமாக இருந்தான்.
51 οὗτος இவன் οὐκ –இல்லை ἦν இருந்தான் συνκατατεθειμένος சம்மதித்திருந்த τῇ –அந்த βουλῇ, ஆலோசனையிலும், καὶ –மற்றும் τῇ –அந்த πράξει செயலிலும் αὐτῶν, அவர்களுடைய, ἀπὸ –இலிருந்து Ἁριμαθαίας, அரிமத்தியா, πόλεως நகரம் τῶν –(கொண்ட) Ἰουδαίων, யூதர்களுடைய, ὃς –அவன் προσεδέχετο எதிர்பார்த்திருந்தான் τὴν –அந்த βασιλείαν ராஜ்யத்தை τοῦ –(கொண்ட) Θεοῦ. தேவனுடைய.
அவன் யூதர்களுடைய பட்டணங்களில் ஒன்றாகிய அரிமத்தியாவிலிருந்து வந்தவனும், தேவனுடைய ராஜ்யத்திற்குக் காத்திருந்தவனும், யூதர்களுடைய ஆலோசனைக்கும் செய்கைக்கும் சம்மதிக்காதவனுமாக இருந்தான்.
52 οὗτος இவன் προσελθὼν சென்று τῷ –அந்த Πιλάτῳ, பிலாத்துவிடம், ᾐτήσατο கேட்டான் τὸ –அந்த σῶμα சரீரத்தை τοῦ –(கொண்ட) Ἰησοῦ. இயேசுவின்.
அவன் பிலாத்துவினிடத்தில்போய், இயேசுவின் சரீரத்தைக் கேட்டு,
53 καὶ –மற்றும் καθελὼν, இறக்கி, ἐνετύλιξεν சுற்றினான் αὐτὸ அதை σινδόνι, மெல்லிய–துணியில், καὶ –மற்றும் ἔθηκεν வைத்தான் αὐτὸν அவரை ἐν –இல் μνήματι கல்லறையில் λαξευτῷ, செதுக்கப்பட்ட, οὗ –அதில் οὐκ –இல்லை ἦν இருந்தது οὐδεὶς ஒருவரும் οὔπω இன்னும் κείμενος. வைக்கப்பட்டிருந்த.
அதை இறக்கி, மெல்லிய துணியிலே சுற்றி, கன்மலையில் வெட்டப்பட்டதும் ஒருபோதும் ஒருவனும் வைக்கப்படாததுமாக இருந்த ஒரு கல்லறையிலே வைத்தான்.
54 καὶ –மற்றும் ἡμέρα நாள் ἦν இருந்தது Παρασκευῆς, ஆயத்தநாள், καὶ –மற்றும் σάββατον ஓய்வுநாள் ἐπέφωσκεν. நெருங்கிற்று.
அந்த நாள் ஆயத்தநாளாக இருந்தது; ஓய்வுநாளும் ஆரம்பமானது.
55 Κατακολουθήσασαι பின்தொடர்ந்து δὲ, –இப்போது, αἱ –அந்த γυναῖκες ஸ்திரீகள் αἵτινες –அவர்கள் ἦσαν இருந்தனர் συνεληλυθυῖαι ஒன்றாக–வந்திருந்த ἐκ –இலிருந்து τῆς –அந்த Γαλιλαίας கலிலேயாவிலிருந்து αὐτῷ, அவருடன், ἐθεάσαντο கண்டனர் τὸ –அந்த μνημεῖον கல்லறையை καὶ –மற்றும் ὡς –எவ்வாறு ἐτέθη வைக்கப்பட்டது τὸ –அந்த σῶμα சரீரம் αὐτοῦ. அவருடைய.
கலிலேயாவிலிருந்து அவருடன் வந்திருந்த பெண்களும் பின்னேசென்று, கல்லறையையும் அவருடைய சரீரம் வைக்கப்பட்ட விதத்தையும் பார்த்து,
56 ὑποστρέψασαι திரும்பி δὲ, –இப்போது, ἡτοίμασαν ஆயத்தம்செய்தனர் ἀρώματα நறுமணப்பொருட்களை καὶ –மற்றும் μύρα, பரிமளதைலங்களை, Καὶ –மற்றும் τὸ –அந்த μὲν –உண்மையில் σάββατον ஓய்வுநாளில் ἡσύχασαν, இளைப்பாறினர், κατὰ –படி τὴν –அந்த ἐντολήν. கட்டளைப்படி.
திரும்பிப்போய், கந்தவர்க்கங்களையும் பரிமளதைலங்களையும் ஆயத்தம்பண்ணி, கட்டளையின்படியே ஓய்வுநாளில் ஓய்ந்திருந்தார்கள்.