1 וִיהוֹשֻׁ֣עַ –மற்றும்–யோசுவா זָקֵ֔ן மூத்தவன் בָּ֖א வந்தவன் בַּיָּמִ֑ים நாட்களில் וַיֹּ֨אמֶר –மற்றும்–சொன்னார் יְהוָ֜ה யெகோவா אֵלָ֗יו அவனிடம் אַתָּ֤ה நீ זָקַ֙נְתָּה֙ மூத்தவனானாய் בָּ֣אתָ வந்தாய் בַיָּמִ֔ים நாட்களில் וְהָאָ֛רֶץ –மற்றும்–அந்த–தேசம் נִשְׁאֲרָ֥ה மீதியாயிருக்கிறது הַרְבֵּֽה־ அதிகமாக מְאֹ֖ד மிகவும் לְרִשְׁתָּֽהּ׃ உரிமையாக்க–அதை
யோசுவா வயதுமுதிர்ந்தவனானபோது, யெகோவா அவனை நோக்கி: நீ வயதுமுதிர்ந்தவனானாய்; கைப்பற்றிக்கொள்ளவேண்டிய தேசம் இன்னும் மகா விசாலமாக இருக்கிறது.
2 זֹ֥את இது הָאָ֖רֶץ –அந்த–தேசம் הַנִּשְׁאָ֑רֶת –அந்த–மீதியாயிருக்கும் כָּל־ எல்லா גְּלִיל֥וֹת பிரதேசங்கள் הַפְּלִשְׁתִּ֖ים –அந்த–பெலிஸ்தியரின் וְכָל־ –மற்றும்–எல்லா הַגְּשׁוּרִֽי׃ –அந்த–கேஷூரியரின்
மீதியாக இருக்கிற தேசம் எவைகளென்றால், எகிப்திற்கு எதிரான சீகோர் ஆறு துவங்கிக் கானானியர்களைச் சேர்ந்ததாக என்னப்படும் வடக்கே இருக்கிற எக்ரோனின் எல்லைவரையுள்ள பெலிஸ்தர்களின் எல்லா எல்லைகளும், கெசூரிம் முழுவதும்,
3 מִֽן־ –இருந்து הַשִּׁיח֞וֹר –அந்த–சீகோரின் אֲשֶׁ֣ר ׀ –யார் עַל־ –மேல் פְּנֵ֣י முகத்தின் מִצְרַ֗יִם எகிப்தின் וְעַ֨ד –மற்றும்–வரை גְּב֤וּל எல்லை עֶקְרוֹן֙ எக்ரோனின் צָפ֔וֹנָה வடக்கு–நோக்கி לַֽכְּנַעֲנִ֖י கானானியருக்கு תֵּחָשֵׁ֑ב எண்ணப்படும் חֲמֵ֣שֶׁת ׀ ஐந்து סַרְנֵ֣י பிரபுகள் פְלִשְׁתִּ֗ים பெலிஸ்தியரின் הָעַזָּתִ֤י –அந்த–காசாவியர் וְהָאַשְׁדּוֹדִי֙ –மற்றும்–அஷ்தோத்தியர் הָאֶשְׁקְלוֹנִ֣י –அந்த–அஷ்கேலோனியர் הַגִּתִּ֔י –அந்த–காத்தியர் וְהָעֶקְרוֹנִ֖י –மற்றும்–அந்த–எக்ரோனியர் וְהָעַוִּֽים׃ –மற்றும்–அந்த–அவ்வியர்
காசா, அஸ்தோத், அஸ்கலோன், காத், எக்ரோன் என்கிற பட்டணங்களில் இருக்கிற பெலிஸ்தர்களுடைய ஐந்து அதிபதிகளின் நாடும், ஆவியர்களின் நாடும்,
4 מִתֵּימָ֞ן –தெற்கிலிருந்து כָּל־ எல்லா אֶ֣רֶץ தேசம் הַֽכְּנַעֲנִ֗י –அந்த–கானானியரின் וּמְעָרָ֛ה –மற்றும்–குகை אֲשֶׁ֥ר –யார் לַצִּידֹנִ֖ים சீதோனியருக்கு עַד־ வரை אֲפֵ֑קָה அப்பேக்கா עַ֖ד வரை גְּב֥וּל எல்லை הָאֱמֹרִֽי׃ –அந்த–எமோரியரின்
தெற்கே துவங்கி ஆப்பெக்வரை எமோரியர்கள் எல்லைவரை இருக்கிற கானானியர்களின் எல்லா தேசமும், சீதோனியர்களுக்கடுத்த மெயாரா நாடும்,
5 וְהָאָ֣רֶץ –மற்றும்–அந்த–தேசம் הַגִּבְלִ֗י –அந்த–கேபாலியரின் וְכָל־ –மற்றும்–எல்லா הַלְּבָנוֹן֙ –அந்த–லெபனோன் מִזְרַ֣ח கிழக்கு–நோக்கி הַשֶּׁ֔מֶשׁ –அந்த–சூரியனின் מִבַּ֣עַל גָּ֔ד பாகால்–காத்திலிருந்து תַּ֖חַת –கீழ் הַר־ மலை חֶרְמ֑וֹן எர்மோனின் עַ֖ד வரை לְב֥וֹא நுழைவு חֲמָֽת׃ காமாத்தின்
கிப்லியர்களின் நாடும், சூரியன் உதயமாகிற திசையில் எர்மோன் மலையடிவாரத்தில் இருக்கிற பாகால்காத் முதல் ஆமாத்துக்குள் நுழையும்வரையுள்ள லீபனோன் முழுவதும்,
6 כָּל־ எல்லா יֹשְׁבֵ֣י குடிகள் הָ֠הָר –அந்த–மலையின் מִֽן־ –இருந்து הַלְּבָנ֞וֹן –அந்த–லெபனோன் עַד־ வரை מִשְׂרְפֹ֥ת מַ֙יִם֙ மிஸ்ரேபோத்–மயீம் כָּל־ எல்லா צִ֣ידֹנִ֔ים சீதோனியரை אָֽנֹכִי֙ நான் אוֹרִישֵׁ֔ם விரட்டுவேன்–அவர்களை מִפְּנֵ֖י முன்னிலையிலிருந்து בְּנֵ֣י புத்திரர் יִשְׂרָאֵ֑ל இஸ்ரவேலின் רַ֠ק ஆனால் הַפִּלֶ֤הָ பங்கிடு–அதை לְיִשְׂרָאֵל֙ இஸ்ரவேலுக்கு בְּֽנַחֲלָ֔ה சுதந்தரமாக כַּאֲשֶׁ֖ר –எவ்வாறு צִוִּיתִֽיךָ׃ கட்டளையிட்டேனோ–உனக்கு
லீபனோன் துவங்கி மிஸ்ரபோத்மாயீம்வரை மலைகளில் குடியிருக்கிற அனைவருடைய நாடும், சீதோனியர்களுடைய எல்லா நாடும்தானே. நான் அவர்களை இஸ்ரவேல் மக்களுக்கு முன்பாகத் துரத்துவேன்; நான் உனக்குக் கட்டளையிட்டபடியே, நீ இஸ்ரவேலுக்குப் பங்குகளைக் கொடுக்கச் சீட்டுகளைப்போட்டு தேசத்தைப் பங்கிடவேண்டும்.
7 וְעַתָּ֗ה –மற்றும்–இப்போது חַלֵּ֞ק பங்கிடு אֶת־ –ஐ הָאָ֧רֶץ –அந்த–தேசத்தை הַזֹּ֛את –அந்த–இது בְּנַחֲלָ֖ה சுதந்தரமாக לְתִשְׁעַ֣ת ஒன்பது הַשְּׁבָטִ֑ים –அந்த–கோத்திரங்களுக்கு וַחֲצִ֖י –மற்றும்–பாதி הַשֵּׁ֥בֶט –அந்த–கோத்திரத்தின் הַֽמְנַשֶּֽׁה׃ –அந்த–மனாச்சேயின்
ஆதலால் இந்த தேசத்தை ஒன்பது கோத்திரங்களுக்கும், மனாசேயின் பாதிக்கோத்திரத்திற்கும் சொந்தமாகும்படிப் பங்கிடு என்றார்.
8 עִמּ֗וֹ அவனோடு הָרֽאוּבֵנִי֙ –அந்த–ரூபேனியர் וְהַגָּדִ֔י –மற்றும்–அந்த–காதியர் לָקְח֖וּ எடுத்தனர் נַחֲלָתָ֑ם அவர்கள்–சுதந்தரத்தை אֲשֶׁר֩ –யார் נָתַ֨ן கொடுத்தான் לָהֶ֜ם அவர்களுக்கு מֹשֶׁ֗ה மோசே בְּעֵ֤בֶר –அக்கரையில் הַיַּרְדֵּן֙ –அந்த–யோர்தானின் מִזְרָ֔חָה கிழக்கு–நோக்கி כַּאֲשֶׁר֙ –எவ்வாறு נָתַ֣ן கொடுத்தான் לָהֶ֔ם அவர்களுக்கு מֹשֶׁ֖ה மோசே עֶ֥בֶד அடியான் יְהוָֽה׃ யெகோவாவின்
மனாசேயின் பாதிக்கோத்திரத்தார்களும் ரூபனியர்களும் காத்தியர்களும் தங்களுடைய பங்குகளை அடைந்து தீர்ந்தது; அதைக் யெகோவாவின் ஊழியக்காரனாகிய மோசே யோர்தானுக்கு மறுபுறத்தில் கிழக்கே அவர்களுக்குக் கொடுத்தான்.
9 מֵעֲרוֹעֵ֡ר அரோயேரிலிருந்து אֲשֶׁר֩ –யார் עַל־ –மேல் שְׂפַת־ கரையில் נַ֨חַל ஆற்றின் אַרְנ֜וֹן அர்னோனின் וְהָעִ֨יר –மற்றும்–அந்த–நகரம் אֲשֶׁ֧ר –யார் בְּתוֹךְ־ –நடுவில் הַנַּ֛חַל –அந்த–ஆற்றின் וְכָל־ –மற்றும்–எல்லா הַמִּישֹׁ֥ר –அந்த–சமவெளியை מֵידְבָ֖א மேத்பாவிலிருந்து עַד־ வரை דִּיבֽוֹן׃ தீபோன்
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், நதியின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி தீபோன்வரைக்கும் இருக்கிற மெதெபாவின் சமபூமி அனைத்தையும்,
10 וְכֹ֗ל –மற்றும்–எல்லா עָרֵי֙ நகரங்கள் סִיחוֹן֙ சீகோனின் מֶ֣לֶךְ –அரசன் הָאֱמֹרִ֔י –அந்த–எமோரியரின் אֲשֶׁ֥ר –யார் מָלַ֖ךְ ஆட்சி–செய்தானோ בְּחֶשְׁבּ֑וֹן எஷ்போனில் עַד־ வரை גְּב֖וּל எல்லை בְּנֵ֥י புத்திரர் עַמּֽוֹן׃ அம்மோனின்
எஸ்போனிலிருந்து அம்மோனியர்களின் எல்லைவரை ஆட்சிசெய்த எமோரியர்களின் ராஜாவாகிய சீகோனுக்குரிய எல்லாப் பட்டணங்களையும்,
11 וְהַגִּלְעָ֞ד –மற்றும்–அந்த–கில்யாத் וּגְב֧וּל –மற்றும்–எல்லை הַגְּשׁוּרִ֣י –அந்த–கேஷூரியரின் וְהַמַּעֲכָתִ֗י –மற்றும்–மாக்காத்தியரின் וְכֹ֨ל –மற்றும்–எல்லா הַ֥ר மலை חֶרְמ֛וֹן எர்மோனின் וְכָל־ –மற்றும்–எல்லா הַבָּשָׁ֖ן –அந்த–பாசான் עַד־ வரை סַלְכָֽה׃ சல்கா
கீலேயாத்தையும், கெசூரியர்கள் மாகாத்தியர்களுடைய எல்லையிலுள்ள நாட்டையும், எர்மோன் மலை முழுவதையும்,
12 כָּל־ எல்லா מַמְלְכ֥וּת அரசாட்சி עוֹג֙ ஓகின் בַּבָּשָׁ֔ן –பாசானில் אֲשֶׁר־ –யார் מָלַ֥ךְ ஆட்சி–செய்தானோ בְּעַשְׁתָּר֖וֹת அஷ்தாரோத்தில் וּבְאֶדְרֶ֑עִי –மற்றும்–எத்ரேயில் ה֤וּא அவன் נִשְׁאַר֙ மீதியாயிருந்தான் מִיֶּ֣תֶר –மீதியிலிருந்து הָרְפָאִ֔ים –அந்த–ரெபாயீமின் וַיַּכֵּ֥ם –மற்றும்–அடித்தான்–அவர்களை מֹשֶׁ֖ה மோசே וַיֹּרִשֵֽׁם׃ –மற்றும்–விரட்டினான்–அவர்களை
அஸ்தரோத்திலும் எத்ரேயிலும் ஆட்சிசெய்து, மோசே முறியடித்துத் துரத்தின இராட்சதர்களில் மீதியாக இருந்த பாசானின் ராஜாவாகிய ஓகுக்குச் சல்காவரையிருந்த பாசான் முழுவதையும் அவர்களுக்குக் கொடுத்தான்.
13 וְלֹ֤א –மற்றும்–இல்லை הוֹרִ֙ישׁוּ֙ விரட்டினர் בְּנֵ֣י புத்திரர் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் אֶת־ –ஐ הַגְּשׁוּרִ֖י –அந்த–கேஷூரியரை וְאֶת־ –மற்றும்–ஐ הַמַּעֲכָתִ֑י –அந்த–மாக்காத்தியரை וַיֵּ֨שֶׁב –மற்றும்–குடியிருந்தான் גְּשׁ֤וּר கேஷூர் וּמַֽעֲכָת֙ –மற்றும்–மாக்காத் בְּקֶ֣רֶב –நடுவில் יִשְׂרָאֵ֔ל இஸ்ரவேலின் עַ֖ד வரை הַיּ֥וֹם –அந்த–நாள் הַזֶּֽה׃ –அந்த–இது
இஸ்ரவேல் மக்களோ கெசூரியர்களையும் மாகாத்தியர்களையும் துரத்திவிடவில்லை, கெசூரியர்களும் மாகாத்தியர்களும் இந்தநாள்வரை இஸ்ரவேலின் நடுவில் குடியிருக்கிறார்கள்.
14 רַ֚ק ஆனால் לְשֵׁ֣בֶט கோத்திரத்துக்கு הַלֵּוִ֔י –அந்த–லேவியின் לֹ֥א இல்லை נָתַ֖ן கொடுத்தான் נַחֲלָ֑ה சுதந்தரம் אִשֵּׁ֨י நெருப்பு–பலிகள் יְהוָ֜ה யெகோவாவின் אֱלֹהֵ֤י –தேவன் יִשְׂרָאֵל֙ இஸ்ரவேலின் ה֣וּא அது נַחֲלָת֔וֹ அவன்–சுதந்தரம் כַּאֲשֶׁ֖ר –எவ்வாறு דִּבֶּר־ பேசினாரோ לֽוֹ׃ அவனுக்கு ס ס
லேவியர்களின் கோத்திரத்திற்குமட்டும் அவன் பங்கு கொடுக்கவில்லை; இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா மோசேக்குச் சொன்னபடியே, அவருடைய தகனபலிகளே அவர்களுடைய பங்கு.
15 וַיִּתֵּ֣ן –மற்றும்–கொடுத்தான் מֹשֶׁ֔ה மோசே לְמַטֵּ֥ה கோத்திரத்துக்கு בְנֵֽי־ புத்திரர் רְאוּבֵ֖ן ரூபேனின் לְמִשְׁפְּחֹתָֽם׃ அவர்கள்–குடும்பங்களின்படி
மோசே ரூபன் கோத்திரத்திற்கு அவர்களுடைய வம்சங்களுக்குத்தக்கதாகப் பங்கு கொடுத்தான்.
16 וַיְהִ֨י –மற்றும்–இருந்தது לָהֶ֜ם அவர்களுக்கு הַגְּב֗וּל –அந்த–எல்லை מֵעֲרוֹעֵ֡ר அரோயேரிலிருந்து אֲשֶׁר֩ –யார் עַל־ –மேல் שְׂפַת־ கரையில் נַ֨חַל ஆற்றின் אַרְנ֜וֹן அர்னோனின் וְהָעִ֨יר –மற்றும்–அந்த–நகரம் אֲשֶׁ֧ר –யார் בְּתוֹךְ־ –நடுவில் הַנַּ֛חַל –அந்த–ஆற்றின் וְכָל־ –மற்றும்–எல்லா הַמִּישֹׁ֖ר –அந்த–சமவெளியை עַל־ –மேல் מֵידְבָֽא׃ மேத்பாவின்
அர்னோன் ஆற்றங்கரையில் இருக்கிற ஆரோவேரும், ஆற்றின் நடுவிலிருக்கிற பட்டணம் துவங்கி மெதெபாவரையுள்ள சமபூமி முழுவதும்,
17 חֶשְׁבּ֥וֹן எஷ்போன் וְכָל־ –மற்றும்–எல்லா עָרֶ֖יהָ அதன்–நகரங்கள் אֲשֶׁ֣ר –யார் בַּמִּישֹׁ֑ר –சமவெளியில் דִּיבוֹן֙ தீபோன் וּבָמ֣וֹת בַּ֔עַל –மற்றும்–பாமோத்–பாகால் וּבֵ֖ית בַּ֥עַל מְעֽוֹן׃ –மற்றும்–பெத்–பாகால்–மெயோன்
சமபூமியில் இருக்கிற எஸ்போனும், அதின் எல்லாப் பட்டணங்களுமாகிய தீபோன், பாமோத்பாகால், பெத்பாகால் மெயோன்,
18 וְיַ֥הְצָה –மற்றும்–யாக்சா וּקְדֵמֹ֖ת –மற்றும்–கேதேமோத் וּמֵפָֽעַת׃ –மற்றும்–மேபாகாத்
யாகசா, கெதெமோத், மெபாகாத்,
19 וְקִרְיָתַ֣יִם –மற்றும்–கிரியாத்தயீம் וְשִׂבְמָ֔ה –மற்றும்–சிப்மா וְצֶ֥רֶת הַשַּׁ֖חַר –மற்றும்–செரேத்–சாகார் בְּהַ֥ר –மலையில் הָעֵֽמֶק׃ –அந்த–பள்ளத்தாக்கின்
கீரியாத்தாயீம், சீப்மா, பள்ளத்தாக்கின் மலையிலுள்ள செரேத்சகார்,
20 וּבֵ֥ית פְּע֛וֹר –மற்றும்–பெத்–பெயோர் וְאַשְׁדּ֥וֹת –மற்றும்–சரிவுகள் הַפִּסְגָּ֖ה –அந்த–பிஸ்காவின் וּבֵ֥ית הַיְשִׁמֽוֹת׃ –மற்றும்–பெத்–யெஷிமோத்தின்
பெத்பேயோர், அஸ்தோத்பிஸ்கா, பெத்யெசிமோத் முதலான
21 וְכֹל֙ –மற்றும்–எல்லா עָרֵ֣י நகரங்கள் הַמִּישֹׁ֔ר –அந்த–சமவெளியின் וְכָֽל־ –மற்றும்–எல்லா מַמְלְכ֗וּת அரசாட்சி סִיחוֹן֙ சீகோனின் מֶ֣לֶךְ –அரசன் הָאֱמֹרִ֔י –அந்த–எமோரியரின் אֲשֶׁ֥ר –யார் מָלַ֖ךְ ஆட்சி–செய்தானோ בְּחֶשְׁבּ֑וֹן எஷ்போனில் אֲשֶׁר֩ –யாரை הִכָּ֨ה அடித்தான் מֹשֶׁ֜ה மோசே אֹת֣וֹ ׀ அவனை וְאֶת־ –மற்றும்–ஐ נְשִׂיאֵ֣י பிரபுகள் מִדְיָ֗ן மித்யானின் אֶת־ –ஐ אֱוִ֤י ஏவி וְאֶת־ –மற்றும்–ஐ רֶ֙קֶם֙ ரெக்கேம் וְאֶת־ –மற்றும்–ஐ צ֤וּר சூர் וְאֶת־ –மற்றும்–ஐ חוּר֙ கூர் וְאֶת־ –மற்றும்–ஐ רֶ֔בַע ரெபா נְסִיכֵ֣י பிரபுகள் סִיח֔וֹן சீகோனின் יֹשְׁבֵ֖י குடிகள் הָאָֽרֶץ׃ –அந்த–தேசத்தின்
சமபூமியிலுள்ள எல்லாப் பட்டணங்களும், எஸ்போனில் ஆட்சிசெய்த சீகோன் என்னும் எமோரியர்களுடைய ராஜாவின் ராஜ்யம் முழுவதும் அவர்கள் எல்லைக்குள்ளானது; அந்தச் சீகோனையும், தேசத்திலே குடியிருந்து சீகோனின் அதிபதியாக இருந்த ஏவி, ரேக்கேம், சூர், ஊர், ரேபா என்னும் மீதியானின் பிரபுக்களையும் மோசே வெட்டிப்போட்டான்.
22 וְאֶת־ –மற்றும்–ஐ בִּלְעָ֥ם பிலெயாம் בֶּן־ மகன் בְּע֖וֹר பெயோரின் הַקּוֹסֵ֑ם –அந்த–சோதிடன் הָרְג֧וּ கொன்றனர் בְנֵֽי־ புத்திரர் יִשְׂרָאֵ֛ל இஸ்ரவேலின் בַּחֶ֖רֶב வாளால் אֶל־ –நோக்கி חַלְלֵיהֶֽם׃ அவர்கள்–கொல்லப்பட்டவர்களோடு
இஸ்ரவேல் மக்கள் வெட்டின மற்றவர்களோடும், பேயோரின் மகனாகிய பிலேயாம் என்னும் குறிசொல்லுகிறவனையும் பட்டயத்தினால் வெட்டிப்போட்டார்கள்.
23 וַיְהִ֗י –மற்றும்–இருந்தது גְּבוּל֙ எல்லை בְּנֵ֣י புத்திரர் רְאוּבֵ֔ן ரூபேனின் הַיַּרְדֵּ֖ן –அந்த–யோர்தான் וּגְב֑וּל –மற்றும்–எல்லை זֹ֣את இது נַחֲלַ֤ת சுதந்தரம் בְּנֵֽי־ புத்திரர் רְאוּבֵן֙ ரூபேனின் לְמִשְׁפְּחֹתָ֔ם அவர்கள்–குடும்பங்களின்படி הֶעָרִ֖ים –அந்த–நகரங்கள் וְחַצְרֵיהֶֽן׃ –மற்றும்–அவர்கள்–கிராமங்கள் פ פ
அப்படியே யோர்தானும் அதற்கடுத்த பகுதியும் ரூபன் கோத்திரத்தின் எல்லையானது; இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் ரூபன் கோத்திரத்தார்களுக்கு, அவர்கள் வம்சங்களின்படி வந்த பங்கு.
24 וַיִּתֵּ֤ן –மற்றும்–கொடுத்தான் מֹשֶׁה֙ மோசே לְמַטֵּה־ கோத்திரத்துக்கு גָ֔ד காதின் לִבְנֵי־ புத்திரருக்கு גָ֖ד காதின் לְמִשְׁפְּחֹתָֽם׃ அவர்கள்–குடும்பங்களின்படி
காத் கோத்திரத்திற்கு மோசே அவர்கள் வம்சங்களுக்குத் தகுந்தபடிக் கொடுத்தது என்னவென்றால்:
25 וַיְהִ֤י –மற்றும்–இருந்தது לָהֶם֙ அவர்களுக்கு הַגְּב֔וּל –அந்த–எல்லை יַעְזֵר֙ யாசேர் וְכָל־ –மற்றும்–எல்லா עָרֵ֣י நகரங்கள் הַגִּלְעָ֔ד –அந்த–கில்யாதின் וַחֲצִ֕י –மற்றும்–பாதி אֶ֖רֶץ தேசம் בְּנֵ֣י புத்திரர் עַמּ֑וֹן அம்மோனின் עַד־ வரை עֲרוֹעֵ֕ר அரோயேர் אֲשֶׁ֖ר –யார் עַל־ –மேல் פְּנֵ֥י முகத்தின் רַבָּֽה׃ ராப்பாவின்
யாசேரும், கீலேயாத்தின் எல்லாப் பட்டணங்களும், ரப்பாவுக்கு எதிரே இருக்கிற ஆரோவேர்வரையுள்ள அம்மோனியர்களின் பாதித் தேசமும்,
26 וּמֵחֶשְׁבּ֛וֹן –மற்றும்–எஷ்போனிலிருந்து עַד־ வரை רָמַ֥ת ராமாத் הַמִּצְפֶּ֖ה –மிஸ்பேவின் וּבְטֹנִ֑ים –மற்றும்–பெட்டோனீம் וּמִֽמַּחֲנַ֖יִם –மற்றும்–மக்னாயீமிலிருந்து עַד־ வரை גְּב֥וּל எல்லை לִדְבִֽר׃ லித்பீரின்
எஸ்போன் துவங்கி ராமாத்மிஸ்பே வரை பெத்தொனீம் வரைக்கும் இருக்கிறதும், மகனாயீம் துவங்கி தெபீரின் எல்லைவரை இருக்கிறதும்,
27 וּבָעֵ֡מֶק –மற்றும்–பள்ளத்தாக்கில் בֵּ֣ית הָרָם֩ பெத்–ஆராம் וּבֵ֨ית נִמְרָ֜ה –மற்றும்–பெத்–நிம்ரா וְסֻכּ֣וֹת –மற்றும்–சுக்கோத் וְצָפ֗וֹן –மற்றும்–சாபோன் יֶ֚תֶר மீதியும் מַמְלְכ֗וּת அரசாட்சி סִיחוֹן֙ சீகோனின் מֶ֣לֶךְ –அரசன் חֶשְׁבּ֔וֹן எஷ்போனின் הַיַּרְדֵּ֖ן –அந்த–யோர்தான் וּגְבֻ֑ל –மற்றும்–எல்லை עַד־ வரை קְצֵה֙ நுனியில் יָם־ கடல் כִּנֶּ֔רֶת கின்னெரோத்தின் עֵ֥בֶר அக்கரையில் הַיַּרְדֵּ֖ן –அந்த–யோர்தானின் מִזְרָֽחָה׃ கிழக்கு–நோக்கி
எஸ்போனின் ராஜாவாகிய சீகோனுடைய ராஜ்யத்தின் மற்றப் பகுதிகளாகிய பள்ளத்தாக்கில் இருக்கிற பெத்தாராமும், பெத்நிம்ராவும், சுக்கோத்தும் சாப்போனும், யோர்தான்வரை இருக்கிறதும், கிழக்கே யோர்தானின் கரையோரமாக கின்னரேத் கடலின் கடைசிவரைக்கும் இருக்கிறதும், அவர்கள் எல்லைக்குள்ளானது.
28 זֹ֛את இது נַחֲלַ֥ת சுதந்தரம் בְּנֵי־ புத்திரர் גָ֖ד காதின் לְמִשְׁפְּחֹתָ֑ם அவர்கள்–குடும்பங்களின்படி הֶעָרִ֖ים –அந்த–நகரங்கள் וְחַצְרֵיהֶֽם׃ –மற்றும்–அவர்கள்–கிராமங்கள்
இந்தப் பட்டணங்களும் இவைகளின் கிராமங்களும் காத் கோத்திரத்தார்களுக்கு, அவர்களுடைய வம்சங்களின்படி வந்த பங்கு.
29 וַיִּתֵּ֣ן –மற்றும்–கொடுத்தான் מֹשֶׁ֔ה மோசே לַחֲצִ֖י பாதியுக்கு שֵׁ֣בֶט கோத்திரத்தின் מְנַשֶּׁ֑ה மனாச்சேயின் וַיְהִ֗י –மற்றும்–இருந்தது לַחֲצִ֛י பாதியுக்கு מַטֵּ֥ה கோத்திரத்தின் בְנֵֽי־ புத்திரர் מְנַשֶּׁ֖ה மனாச்சேயின் לְמִשְׁפְּחוֹתָֽם׃ அவர்கள்–குடும்பங்களின்படி
மனாசேயின் பாதிக் கோத்திரத்திற்கும், மோசே அவர்களுடைய வம்சத்திற்குத் தகுந்தபடிக் கொடுத்தான்.
30 וַיְהִ֣י –மற்றும்–இருந்தது גְבוּלָ֗ם அவர்கள்–எல்லை מִמַּחֲנַ֨יִם மக்னாயீமிலிருந்து כָּֽל־ எல்லா הַבָּשָׁ֜ן –அந்த–பாசான் כָּֽל־ எல்லா מַמְלְכ֣וּת ׀ அரசாட்சி ע֣וֹג ஓகின் מֶֽלֶךְ־ –அரசன் הַבָּשָׁ֗ן –அந்த–பாசானின் וְכָל־ –மற்றும்–எல்லா חַוֺּ֥ת கிராமங்கள் יָאִ֛יר யாயீரின் אֲשֶׁ֥ר –யார் בַּבָּשָׁ֖ן –பாசானில் שִׁשִּׁ֥ים அறுபது עִֽיר׃ நகரம்
மகனாயீம் துவங்கி, பாசானின் ராஜாவாகிய ஓகின் முழு ராஜ்யமாக இருக்கிற பாசான் முழுவதும், பாசானிலுள்ள யாவீரின் எல்லா ஊர்களுமான அறுபது பட்டணங்கள் அவர்களுடைய எல்லைக்குள்ளானது.
31 וַחֲצִ֤י –மற்றும்–பாதி הַגִּלְעָד֙ –அந்த–கில்யாதின் וְעַשְׁתָּר֣וֹת –மற்றும்–அஷ்தாரோத் וְאֶדְרֶ֔עִי –மற்றும்–எத்ரேயி עָרֵ֛י நகரங்கள் מַמְלְכ֥וּת அரசாட்சி ע֖וֹג ஓகின் בַּבָּשָׁ֑ן –பாசானில் לִבְנֵ֤י புத்திரருக்கு מָכִיר֙ மாக்கீரின் בֶּן־ மகன் מְנַשֶּׁ֔ה மனாச்சேயின் לַחֲצִ֥י பாதியுக்கு בְנֵֽי־ புத்திரர் מָכִ֖יר மாக்கீரின் לְמִשְׁפְּחוֹתָֽם׃ அவர்கள்–குடும்பங்களின்படி
பாதிக் கீலேயாத்தையும், பாசானிலே அஸ்தரோத், எத்ரேயி என்னும் ஓகு ராஜ்யத்தின் பட்டணங்களையும், மனாசேயின் மகனாகிய மாகீரின் மக்கள் பாதிப்பேருக்கு அவர்களுடைய வம்சங்களின்படியே கொடுத்தான்.
32 אֵ֕לֶּה இவர்கள் אֲשֶׁר־ –யாரை נִחַ֥ל சுதந்தரமாக–கொடுத்தான் מֹשֶׁ֖ה மோசே בְּעַֽרְב֣וֹת சமவெளிகளில் מוֹאָ֑ב மோவாபின் מֵעֵ֛בֶר அக்கரையிலிருந்து לְיַרְדֵּ֥ן யோர்தானின் יְרִיח֖וֹ எரிகோவின் מִזְרָֽחָה׃ கிழக்கு–நோக்கி ס ס
மோசே கிழக்கே எரிகோவின் அருகே யோர்தானுக்கு அக்கரையில் இருக்கிற மோவாபின் சமவெளிகளில் பங்குகளாகக் கொடுத்தவைகள் இவைகளே.
33 וּלְשֵׁ֙בֶט֙ –மற்றும்–கோத்திரத்துக்கு הַלֵּוִ֔י –அந்த–லேவியின் לֹֽא־ இல்லை נָתַ֥ן கொடுத்தான் מֹשֶׁ֖ה மோசே נַחֲלָ֑ה சுதந்தரம் יְהוָ֞ה யெகோவா אֱלֹהֵ֤י –தேவன் יִשְׂרָאֵל֙ இஸ்ரவேலின் ה֣וּא அவர் נַחֲלָתָ֔ם அவர்கள்–சுதந்தரம் כַּאֲשֶׁ֖ר –எவ்வாறு דִּבֶּ֥ר பேசினாரோ לָהֶֽם׃ அவர்களுக்கு
லேவி கோத்திரத்திற்கு மோசே பங்கு கொடுக்கவில்லை, இஸ்ரவேலின் தேவனாகிய யெகோவா அவர்களுக்குச் சொல்லியிருந்தபடி, அவரே அவர்களுடைய பங்கு.