1 בְּ֭נִי என்–மகனே שְׁמֹ֣ר காத்துக்கொள் אֲמָרָ֑י என்–வார்த்தைகளை וּ֝מִצְוֺתַ֗י என்–கட்டளைகளையும் תִּצְפֹּ֥ן பொக்கிஷமாய்–வை אִתָּֽךְ׃ உன்னிடத்தில்
என் மகனே, நீ என்னுடைய வார்த்தைகளைக்காத்து, என்னுடைய கட்டளைகளை உன்னிடத்தில் பத்திரப்படுத்து.
2 שְׁמֹ֣ר காத்துக்கொள் מִצְוֺתַ֣י என்–கட்டளைகளை וֶחְיֵ֑ה பிழைப்பாய் וְ֝תוֹרָתִ֗י என்–வேதத்தையும் כְּאִישׁ֥וֹן உன்–கண்ணின்–மணிபோல עֵינֶֽיךָ׃ உன்–கண்களின்
என்னுடைய கட்டளைகளையும் என்னுடைய போதகத்தையும் உன்னுடைய கண்மணியைப்போல் காத்துக்கொள், அப்பொழுது பிழைப்பாய்.
3 קָשְׁרֵ֥ם கட்டிக்கொள் עַל־ –மேல் אֶצְבְּעֹתֶ֑יךָ உன்–விரல்களின் כָּ֝תְבֵ֗ם எழுதிக்கொள் עַל־ –மேல் ל֥וּחַ பலகையில் לִבֶּֽךָ׃ உன்–இருதயத்தின்
அவைகளை உன்னுடைய விரல்களில் கட்டி, அவைகளை உன்னுடைய இருதயப்பலகையில் எழுதிக்கொள்.
4 אֱמֹ֣ר சொல் לַֽ֭חָכְמָה ஞானத்திற்கு אֲחֹ֣תִי என்–சகோதரியே אָ֑תְּ நீ וּ֝מֹדָ֗ע உறவினளென לַבִּינָ֥ה புத்திக்கு תִקְרָֽא׃ அழைப்பாய்
ஆசைவார்த்தைகளைப் பேசும் அந்நியப் பெண்ணாகிய ஒழுங்கீனமானவளுக்கு உன்னை விலக்கிக் காப்பதற்காக,
5 לִ֭שְׁמָרְךָ உன்னைக்–காக்க מֵאִשָּׁ֣ה அந்நிய–பெண்ணிடமிருந்து זָרָ֑ה பரதேசியாகிய מִ֝נָּכְרִיָּ֗ה அயல்–நாட்டவளிடமிருந்து אֲמָרֶ֥יהָ தன்–வார்த்தைகளை הֶחֱלִֽיקָה׃ இனிமையாக்குகிறவளிடமிருந்து
ஞானத்தை நோக்கி, நீ என்னுடைய சகோதரி என்றும், புத்தியைப்பார்த்து, நீ என்னுடைய இனத்தைச் சேர்ந்தவள் என்றும் சொல்லு.
6 כִּ֭י ஏனெனில் בְּחַלּ֣וֹן ஜன்னலில் בֵּיתִ֑י என்–வீட்டின் בְּעַ֖ד வழியாக אֶשְׁנַבִּ֣י என்–கிராதியின் נִשְׁקָֽפְתִּי׃ நான்–எட்டிப்பார்த்தேன்
நான் என்னுடைய வீட்டின் ஜன்னல் அருகே நின்று, அதின் வழியாகப் பார்த்தபோது,
7 וָאֵ֤רֶא கண்டேன் בַפְּתָאיִ֗ם பேதையரில் אָ֘בִ֤ינָה கவனித்தேன் בַבָּנִ֗ים வாலிபரில் נַ֣עַר இளைஞன் חֲסַר־ இல்லாத– לֵֽב׃ புத்தி
பேதையர்களாகிய வாலிபர்களுக்குள்ளே ஒரு புத்தியற்ற வாலிபனைக்கண்டு அவனை கவனித்தேன்.
8 עֹבֵ֣ר கடந்துபோகிறவன் בַּ֭שּׁוּק தெருவில் אֵ֣צֶל அருகே פִּנָּ֑הּ அவள்–மூலையின் וְדֶ֖רֶךְ வழியில் בֵּיתָ֣הּ அவள்–வீட்டிற்கு יִצְעָֽד׃ அடியெடுத்துவைக்கிறான்
அவன் மாலைமயங்கும் சூரியன் மறையும் நேரத்திலும், இரவின் இருளிலும்.
9 בְּנֶֽשֶׁף־ அந்தி–நேரத்தில் בְּעֶ֥רֶב மாலையில் י֑וֹם நாள் בְּאִישׁ֥וֹן கருமையில் לַ֝֗יְלָה இரவின் וַאֲפֵלָֽה׃ இருளிலும்
அவள் இருக்கும் தெருவிற்கு அடுத்த தெருவில் சென்று, அவளுடைய வீட்டுவழியாக நடந்துபோனான்.
10 וְהִנֵּ֣ה இதோ אִ֭שָּׁה பெண் לִקְרָאת֑וֹ அவனை–எதிர்கொள்ள שִׁ֥ית உடையின் ז֝וֹנָ֗ה வேசியின் וּנְצֻ֥רַת மறைக்கிற לֵֽב׃ இருதயம்
அப்பொழுது இதோ, விபசாரியின் ஆடை ஆபரணம் தரித்த தந்திரமனமுள்ள ஒரு பெண் அவனுக்கு எதிர்ப்பட்டாள்.
11 הֹמִיָּ֣ה ஆரவாரமுள்ளவள் הִ֣יא அவள் וְסֹרָ֑רֶת பிடிவாதமுள்ளவள் בְּ֝בֵיתָ֗הּ அவள்–வீட்டில் לֹא־ இல்லை– יִשְׁכְּנ֥וּ தங்குவதில்லை רַגְלֶֽיהָ׃ அவள்–கால்கள்
அவள் வாயாடியும் அடங்காதவளுமானவள்; அவளுடைய கால்கள் வீட்டிலே தங்குகிறதில்லை.
12 פַּ֤עַם ׀ ஒருமுறை בַּח֗וּץ வெளியே פַּ֥עַם ஒருமுறை בָּרְחֹב֑וֹת வீதிகளில் וְאֵ֖צֶל அருகே כָּל־ ஒவ்வொரு– פִּנָּ֣ה மூலையிலும் תֶאֱרֹֽב׃ பதுங்கியிருக்கிறாள்
சிலவேளை வெளியிலே இருப்பாள், சிலவேளை வீதியில் இருப்பாள், சந்துகள்தோறும் மறைந்திருப்பாள்.
13 וְהֶחֱזִ֣יקָה பிடித்துக்கொண்டாள் בּ֭וֹ அவனை וְנָ֣שְׁקָה־ முத்தமிட்டாள்– לּ֑וֹ அவனை הֵעֵ֥זָה முகத்தை–துணிவாக்கினாள் פָ֝נֶ֗יהָ தன்–முகத்தை וַתֹּ֣אמַר சொன்னாள் לֽוֹ׃ அவனிடம்
அவள் அவனைப் பிடித்து முத்தமிட்டு, முகம் நாணாமல் அவனைப் பார்த்து:
14 זִבְחֵ֣י சமாதானப்–பலிகள் שְׁלָמִ֣ים சமாதானத்தின் עָלָ֑י என்மேல் הַ֝יּ֗וֹם இன்று שִׁלַּ֥מְתִּי நிறைவேற்றினேன் נְדָרָֽי׃ என்–பொருத்தனைகளை
சமாதான பலிகள் என்மேல் சுமந்திருந்தது, இன்றைக்குத்தான் என்னுடைய பொருத்தனைகளை நிறைவேற்றினேன்.
15 עַל־ –மேல் כֵּ֭ן ஆகவே יָצָ֣אתִי புறப்பட்டேன் לִקְרָאתֶ֑ךָ உன்னை–எதிர்கொள்ள לְשַׁחֵ֥ר தேடுவதற்கு פָּ֝נֶ֗יךָ உன்–முகத்தை וָאֶמְצָאֶֽךָּ׃ உன்னைக்–கண்டேன்
ஆதலால், நான் உன்னைச் சந்திக்கப் புறப்பட்டு, உன் முகத்தை ஆவலோடு தேடினேன்; இப்பொழுது உன்னைக் கண்டுபிடித்தேன்.
16 מַ֭רְבַדִּים விரிப்புகள் רָבַ֣דְתִּי விரித்தேன் עַרְשִׂ֑י என்–படுக்கையை חֲ֝טֻב֗וֹת பின்னல்வேலையின் אֵט֥וּן நூலால் מִצְרָֽיִם׃ எகிப்தின்
என்னுடைய மெத்தையை இரத்தினக் கம்பளங்களாலும், எகிப்து தேசத்தின் விசித்திரமான மெல்லிய துணிகளாலும் அலங்கரித்தேன்.
17 נַ֥פְתִּי வாசனைதூவினேன் מִשְׁכָּבִ֑י என்–படுக்கையை מֹ֥ר வெள்ளைப்போளம் אֲ֝הָלִ֗ים அகிலும் וְקִנָּמֽוֹן׃ இலவங்கப்பட்டையும்
என்னுடைய படுக்கையை வெள்ளைப்போளத்தாலும் சந்தனத்தாலும் இலவங்கப்பட்டையாலும் வாசனையாக்கினேன்.
18 לְכָ֤ה வா נִרְוֶ֣ה நிறைவாய்–குடிப்போம் דֹ֭דִים காதலை עַד־ வரை– הַבֹּ֑קֶר காலையின் נִ֝תְעַלְּסָ֗ה களிகூர்வோம் בָּאֳהָבִֽים׃ சிநேகத்தில்
வா, விடியற்காலைவரைக்கும் சந்தோஷமாக இருப்போம், இன்பங்களினால் பூரிப்போம்.
19 כִּ֤י ஏனெனில் אֵ֣ין இல்லை הָאִ֣ישׁ புருஷன் בְּבֵית֑וֹ தன்–வீட்டில் הָ֝לַ֗ךְ சென்றான் בְּדֶ֣רֶךְ வழியில் מֵרָחֽוֹק׃ தொலைவில்
கணவன் வீட்டிலே இல்லை, தூரப்பயணம் போனான்.
20 צְֽרוֹר־ பணப்பை– הַ֭כֶּסֶף வெள்ளியின் לָקַ֣ח எடுத்தான் בְּיָד֑וֹ தன்–கையில் לְי֥וֹם நாளுக்கு הַ֝כֵּ֗סֶא பௌர்ணமியின் יָבֹ֥א வருவான் בֵיתֽוֹ׃ தன்–வீட்டிற்கு
பணப்பையைத் தன்னுடைய கையிலே கொண்டுபோனான், குறிக்கப்பட்ட நாளிலே வீட்டுக்கு வருவான் என்று சொல்லி,
21 הִ֭טַּתּוּ சாய்த்தாள் בְּרֹ֣ב மிகுதியால் לִקְחָ֑הּ தன்–போதகத்தின் בְּחֵ֥לֶק சொல்வன்மையால் שְׂ֝פָתֶ֗יהָ தன்–உதடுகளின் תַּדִּיחֶֽנּוּ׃ இழுத்துக்கொண்டாள்
தன்னுடைய மிகுதியான இனிய சொற்களால் அவனை வசப்படுத்தி, தன்னுடைய உதடுகளின் இனிமையான பேச்சால் அவனை இணங்கச்செய்தாள்.
22 ה֤וֹלֵ֥ךְ போகிறான் אַחֲרֶ֗יהָ அவள்–பின்னே פִּ֫תְאֹ֥ם திடீரென כְּ֭שׁוֹר எருதைப்போல אֶל־ –க்கு טָ֣בַח அடிக்கப்படுவதற்கு יָב֑וֹא போகிறான் וּ֝כְעֶ֗כֶס விலங்கைப்போல אֶל־ –க்கு מוּסַ֥ר சிட்சையின் אֱוִֽיל׃ மூடனின்
உடனே அவன் அவள் பின்னே சென்றான்; ஒரு மாடு அடிக்கப்படும்படி செல்வதுபோலவும், ஒரு மூடன் விலங்கிடப்பட்டு தண்டனைக்குப் போவதுபோலவும்,
23 עַ֤ד வரையில் יְפַלַּ֪ח ஊடுருவும் חֵ֡ץ அம்பு כְּֽבֵד֗וֹ அவன்–கல்லீரலை כְּמַהֵ֣ר விரைவாய் צִפּ֣וֹר பறவை אֶל־ –க்கு פָּ֑ח கண்ணியில் וְלֹֽא־ அறியாமல்– יָ֝דַ֗ע அறிகிறான் כִּֽי־ என்று– בְנַפְשׁ֥וֹ தன்–ஜீவனுக்கு הֽוּא׃ அது פ —
ஒரு குருவி தன்னுடைய உயிரை வாங்கும் கண்ணியை அறியாமல் அதில் விழுவதற்கு விரைந்து போகிறதுபோலவும், அவளுக்குப் பின்னே போனான்; அம்பு அவனுடைய இருதயத்தைப் பிளந்தது.
24 וְעַתָּ֣ה இப்போதும் בָ֭נִים மக்களே שִׁמְעוּ־ கேளுங்கள்– לִ֑י எனக்கு וְ֝הַקְשִׁ֗יבוּ கவனம்–செலுத்துங்கள் לְאִמְרֵי־ என்–வாய்மொழிகளுக்கு– פִֽי׃ என்–வாயின்
ஆதலால் பிள்ளைகளே, எனக்குச் செவிகொடுங்கள்; என்னுடைய வாயின் வார்த்தைகளைக் கவனியுங்கள்.
25 אַל־ வேண்டாம்– יֵ֣שְׂטְ சாயட்டும் אֶל־ –க்கு דְּרָכֶ֣יהָ அவள்–வழிகளுக்கு לִבֶּ֑ךָ உன்–இருதயம் אַל־ வேண்டாம்– תֵּ֝תַע அலையாதே בִּנְתִיבוֹתֶֽיהָ׃ அவள்–பாதைகளில்
உன்னுடைய இருதயம் அவளுடைய வழியிலே சாயவேண்டாம்; அவளுடைய பாதையிலே மயங்கித் திரியாதே.
26 כִּֽי־ ஏனெனில்– רַבִּ֣ים அநேகர் חֲלָלִ֣ים காயப்பட்டவர்கள் הִפִּ֑ילָה விழுந்தனர் וַ֝עֲצֻמִ֗ים பலத்தவர்களும் כָּל־ எல்லா– הֲרֻגֶֽיהָ׃ அவளால்–கொல்லப்பட்டவர்கள்
அவள் அநேகரைக் காயப்படுத்தி, விழச்செய்தாள்; பலவான்கள் அநேகரைக் கொலைசெய்தாள்.
27 דַּרְכֵ֣י வழிகள் שְׁא֣וֹל பாதாளத்தின் בֵּיתָ֑הּ அவள்–வீடு יֹ֝רְד֗וֹת இறங்குகிற אֶל־ –க்கு חַדְרֵי־ அறைகளுக்கு– מָֽוֶת׃ மரணத்தின் פ —
அவளுடைய வீடு பாதாளத்திற்குப்போகும் வழி; அது மரண அறைகளுக்குக் கொண்டுபோய்விடும்.